என் அவளின் கொலுசொலி.
உறசிச்செல்லும், பூங்காற்றினை உணரும் நேரமெல்லாம்,
பூக்கள் அது புத்துயிர் பெரும்.
புன்னகைக்கும்! என் இளநெஞ்சமும் ,
நாணத்துடன் சிணுங்கும் அவளின்
கொலுசொலி கேட்டு....
அவளின் கொலுசொலிதனை அனைவரும்
இரைச்சலாய் என்னிய பொழுதும்,
என்னில் அதனை இசையின் இருப்பிடமாய் உணர்ந்தேன்.
இயற்கையின் இயல்பு தனில்.
நீரோடைகளும் இசைபாடும்,
நீரோட்டங்களின் சலசலப்பின் போது.
பூங்காற்றும் புன்னகைக்கும்,
பூக்கள் அதனை உரசிச்சென்ற நொடி முதலே...
கருங்குயிலில் அது கவிபாடும்,
கார்முகில் அதை கண்டிருப்பின்.
இயற்கையின் இன்னிசைகள்,
பலநூறு இருப்பினும்,
என்றும் என் மனத்தோட்டத்தில்
அவளின் கொலுசொலியின் சிணுங்கல்
அதுவே என் துயிலிற்கு துணையான தாலாட்டு....
அவளுடனே பயணிக்கும் எந்தன் சேவகி,
அவளின் பாத கொலுசு, அவளின் மௌனத்தின் போதும்
அவளிடத்திலான காதலின் கவிதை அது,
பாத கொலுசின் மெல்லிய சிணுங்கல் .... MNA....