வா,வா சக ஏமாளியே !
முன் கூறியது போல், எனக்கும் ஒரு நிகழ்வு
நானும் கிட்டத்தட்ட இதே வரிகளை வரைந்து
அவளிடம் நீட்டினேன் ,
அடி பெண்ணே ஒருமுறை பார்த்ததற்கே என் மனம்
அப்பளம் போல் போறிந்துவிட்டது,ஆகையால்
மறுமுறை பார்க்காதே நோரிங்கிவிடும் என்று
என்னவள் என்னை போல் இளகிய
இதயம் கொண்டவள், பணிவோடு படித்து
கனிவோடு பதில் எழுதி நீட்டினாள்
பிரித்தேன், படித்தேன், திகைத்தேன்
பதற்றம் வேண்டாம் பண்பாளனே !
எப்படியும் சில நாட்களில்
கண்ணீரை அன்பளிப்பாய் அளிப்பேன்
கண்ணீரில், பொறிந்த அப்பளத்தை (மனதை)
ஊறவிடு என்றிருந்தாள்,
என்னதான் இருந்தாலும் என்னவள் ஆயிற்றே
நொறுங்குவதை தடுத்து நிறுத்ததான்
வழி சொன்னால் என்றெண்ணினேன்
பின்பு தான் புரிந்தது, மனதை, கிழிப்பதற்கு
வசதி ஆக்கிகொண்டாள் !