FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBiLaN on August 14, 2016, 10:34:19 PM

Title: ஆனந்தயாழுக்கு அஞ்சலி கவிதை
Post by: KaBiLaN on August 14, 2016, 10:34:19 PM
போகாதே போகாதே என்றெழுதிவிட்டு
போய்விட்டாயே இன்று எம்மைவிட்டு !
கனவுகள் பூக்குமென்று  பாடிவிட்டு-இன்று 
கணத்தில் உதிர்ந்து விட்டாயே !

முதல்மழை நனைக்கும் என்றாய்
இறப்பு உன்னை அணைக்கும் என்று
எண்ணவில்லை நாங்கள்....
கல்லறையில் கூட ஜன்னல்வைத்து
பார்ப்பேன் என்றாயே ! இன்று
கல்லறையில் வாசம் செய்ய
எம்மை விட்டு சென்றாயே !!

வானம் மெல்ல வந்திறங்கும் என்று
சொல்லிவிட்டு
வானம் நோக்கி நீ சென்று விட்டாயே !
காற்றை கொஞ்சம் நிற்க சொன்னாய்
கருத்திலேற்றி மகிழ்வில் ஆடினோம்  ! இன்றுன்
மூச்சு காற்று  அல்லவா நின்றுவிட்டது !!
கண்களில் சோகமேறி மனதால் வாடினோம் !!

உறவுகளின் நேசத்தை எழுத்தில்
உணர்ந்து சொல்லும் உனைபோல
உன்னத கவிஞனை இழந்து
துக்கமடைகிறோம் !....
அசுரகல் பட்டு தெறிக்கும் கண்ணாடிபோல் 
மனதால் உடைகிறோம் !! ..
முத்துக்குமார் என்று நாங்கள் மட்டுமல்ல
மூன்றாவது தேசியவிருதும் கூட இனி
உனை தேடி அலையும்...

கடல் சிப்பிக்குள் முத்து இருக்கும் -தமிழ்
கவிதை சிந்தனைக்குள் முத்துக்குமார்
நீ என்றும் இருப்பாய்...
இப்படிக்கு 
ஈடு இணையற்ற உன் இறப்பால்
இதயம் நொறுங்கிய ஒரு ரசிகன் ..

                              -கபிலன் FTC
Title: Re: ஆனந்தயாழுக்கு அஞ்சலி கவிதை
Post by: aasaiajiith on August 15, 2016, 01:18:49 AM
தேசிய விருதுக்கு
ஒன்றன்று இருமுறை
பூக்காடு தனை
வரம் வழங்கியவன்
யாரோ தந்த
சாபம் பெற்று
சாக்காடு
விரைந்தனன் 😟😟

நா. முத்துக்குமார் அவர்களுக்கு

இக்கத்துக்குட்டியின்
கண்ணீர் அஞ்சலி😭😭
Title: Re: ஆனந்தயாழுக்கு அஞ்சலி கவிதை
Post by: ரித்திகா on August 15, 2016, 01:38:26 PM
(http://www.anniesgraphicdesign.com/images/full/lines/agd.flodiv.l001.png)

(http://www.isaivarigal.com/lyricist_images/Na.Muthukumar.jpg)

ஆரிரோ ஆராரிரோ என்று
தந்தையின் தாலாட்டில் உறங்க வைத்தீர்....
இன்று ,
கண்களில் கண்ணீர் சொட்ட
ஆரிரோ ஆராரிரோ என்று பாடி
வழியனுப்பி வைக்கின்றோம் உம்மை
இறைவனின் பாதகமலத்தைச் சரணடைய ....!!!!

MAY YOUR SOUL REST IN PEACE....!!!!

~ !! RiThikA !! ~