பயமாய் தான் இருக்கிறது
ரோட்டில் பிச்சை எடுக்கும்
பிச்சை காரியிடம் இல்லை
என சொல்கையில்
பயமாய் தான் இருக்கிறது
சுயநலமான நண்பனுடன்
பயணிக்கையில்
பயமாய் தான் இருக்கிறது
நிலவு போல் அவள் இருக்க
நிலவின் நிழல் போல இருக்கும்
நான் காதல் சொல்கையில்
பயமாய் தான் இருக்கிறது
நான் இல்லாமல் நீ இருப்பாய் -ஆனால்
நீஇல்லா நாட்களில் நான் வாழ்வதை எண்ணி
பயமாய் தான் இருக்கிறது
புதிதாக யாரேனும் பாசமாக
பேசுகையில்
பயமாய் தான் இருக்கிறது
நேசத்திற்காக நான் பழக
தேவைக்காக மற்றவர் பழக
பயமாய் தான் இருக்கிறது
ஏமாற்றுவதாய் நினைப்பவர்கள் முன்
ஏமாறுவதாய் நடிக்கையில்
பயமாய் தான் இருக்கிறது
கவிதை என்று எழுதியதை
நம்பி படிக்கும் உங்களை
எண்ணி
-நன்றி --சும்மா