தோழி Breeze உங்கள் தண்டனையில் உள்ள கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன் அது நியாயமானதுதான். நம்பிக்கைத் துரோகம் தெரிந்தே செய்தாலும், சுயலாபத்திர்க்காக செய்தாலும், தற்செயலாய் இல்லை விளையாட்டாய் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாத மன்னிக்க முடியாத மகாபாவம்.
மனிதனின் மனம் என்பது தூய்மையானது பரிசுத்தம் என்றால் அதையாரும் நம்பிவிட முடியாது. இது, பற்பல விகாரங்களின் கூடாரம் என தெரிந்தும் இதை யூகித்தறியும் சக்தி, நமக்கு இயல்பாகவே இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நமக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர் நிச்சயமாக நாம் அதிகம் நேசித்தவராகவே இருப்பார். ஏனெனில் அவரின் செயல்களே நம்மில் தாக்கத்தை உண்டு பண்ணும்.
நாம் தண்டனை வழங்குகிறோம் என்று அவரை உங்கள் எண்ணத்தைப் போல் உடல் வலிக்கும் போல் செய்துவிட்டால் ஓர்ரிரு நாட்களில் அந்த ரணம் ஆறிவிடும் இந்த செயலுக்கு இது தண்டனையல்ல ஆறாக்காயத்தை தரவேண்டும் அவர் மரணிக்கும் வரை அந்த துரோகத்தின் ரணத்தை உணரும்படி செய்யவேண்டும் என்பது என் எண்ணம்.