பெண்மை
என் தோழிக்கு ஓர் மடல்,
பெண்ணே,...
பல இன்னல்கள் தாண்டி இதிகாசங்களிலும் இடம் பிடித்த உமக்கு....
மங்கை,
மாது,
மகளிர்,
அணங்கு என்று பெயர் இருக்கையில்.....
அடுத்தவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை செவிமடுத்து...
அகம் உடைந்து நொறுங்குவதேனோ..
அடுப்பங்கறை விறகுகளில் கருகிய கனவுகளை......,
மெய்யாய் வடிவமைக்க போராடிய பலர் வரலாற்று நூல்களில் சுடர் விட்டு ஒளி தருவது விந்தையாயினும்.....
அவர்களின் உழைப்பின் உச்சத்தின் பரிசல்லவா??..
உன்னை வெறுத்தொதிக்கிய காலம் போய்....,
தாய், மகள், மனைவி போன்ற பரிணாமத்தில் போற்றப்படுவது உன் வலிமையின் ஆதாரமல்லவா??..
பெண் என்பவர் இழிவாய் போற்றப்பட்ட போதிலும்......
உன்னை ஆணிற்கு நிகராய் வலுவூற்றிய பாரதிக்கவி....,
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு"
உன்னை உறுதியாய் போராட வலி வகுத்திட்ட ஓர் ஊக்கியல்லவா??..
பெண்ணிற்கு கல்வியின் சிறப்புக்கள் அதிகமாக ஊட்ட தேவையில்லை....
என்றிருந்த காலம் போய் பெண்களே இவ் வையகம் எங்கும் கல்வியில் மேலோங்கியிருப்பது பெண்களின் உரிமைகளுக்கும் இடமுண்டு என்பதற்கு எடுத்துக்காட்டல்லவா??....
இதுவே பாரதிக் கவியிலும் அரங்கேறியிருக்கிறது,...
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தார் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்...."
உன் உரிமைகளுக்கு இத்துனை ஆதாரங்கள் இருக்கையில்,.....
பிறரை நம்பி சிறைக்கைதியாய் சிறைப்பட்டு வாழ்வதிலும்,
பிறரது நாவுதனில் தவழ்ந்திடும் வார்த்தைகளுக்கு இரையாய் ஆவதிலும் இல்லை இங்கு உன் இலக்கு...
பெண்மை என்ற உயரிய அந்தஸ்தினால், அன்பு என்ற வலிய அறத்தைக் கொண்டு
உலகம் என்ற நான்கெழுத்தை ஆழ வகுத்திடும் வரைபடத்தில் உள்ளது உனக்கான யாவும்..
யார் என்ன கூறினும் அந்த வார்த்தைக்குள் உன் இலக்கிற்கான உபயோக வார்த்தை இருந்தால் ஏற்றுக் கொள்....,
இல்லையேல் அவ்விடத்திலே விட்டு விட்டுச் செல் உன் நம்பிக்கையே நீ என மாற்றிவிடு.....
பச்சோந்தி போல் மனிதர்கள் பல வேடம் போட்டுத்தான் நகர்கின்றனர்....
யாரையும் சார்ந்து நில்லாதே.....,
கடந்து செல் புன்னகையுடன் காலம் காயங்களையாற்றும்....
நினைத்தவை நிறைவேறும் என்ற ஓர் உச்ச நம்பிக்கையில்....,
உனக்குள் உன் உண்ணதத்தைத் தேடு,, தொய்ந்து விடாதே....!!
இப்படிக்கு,
உனக்குள் ஒருத்தி....