FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 08, 2018, 11:55:27 PM

Title: மிச்சம்
Post by: NiYa on June 08, 2018, 11:55:27 PM
எழுத வேண்டும் என்ற ஆவலில்
எழுத அமர்ந்தேன்
என்ன எழுத என்ற
எண்ணம் கூட இல்லாமல்

எழுதி எழுதி
என் இதயத்தில் இருக்கும்
உன்னை மறக்கடிக்கும்
முயற்சி தான் இது 

மறுபடியும் அதே கேள்வி
எப்படி ஆரம்பிப்பது ?
எது வரை கொண்டுசெல்வது   ?
எப்படி முடிப்பது  ?

இறுதி வரை ஏன் எழுத வேண்டும்
என்ற கேள்வி மட்டும்
எனக்குள் எந்த மூலையிலும்
எழவே இல்லை

நான் இழந்த உன்னை பற்றி
எழுதி மற்றவரிகளிடம் இருந்து
அனுதாபம் கிடைக்குமோ ?
என்ற எண்ணம் ஒருபுறம்

என்னிடம் நீ தந்து போன
நினைவுகளையும் வலிகளையும்
எழுதி மற்றவரிகளிடம் இருந்து
இரக்கம் கிடைத்துவிடுமா என்ற
பயம் இன்னொருபுறம்  புறம்

எதையோ எழுத முந்திகொண்டுவந்த
வார்த்தைகள் எழுத்தாய் மாறாமல்
ஏன் கண்ணீர் ஆனது

மனதில் அடக்கிய
வலிகள் வரிகள் ஆகாமல்
ஏன் கண்ணீரால்
காகிதம் நனைத்தது மட்டுமே மிச்சம்
Title: Re: மிச்சம்
Post by: DoRa on June 09, 2018, 12:49:55 AM
  Nice kavithai niya sis
Title: Re: மிச்சம்
Post by: சாக்ரடீஸ் on June 09, 2018, 01:40:42 AM


எதையோ எழுத முந்திகொண்டுவந்த
வார்த்தைகள் எழுத்தாய் மாறாமல்
ஏன் கண்ணீர் ஆனது

மனதில் அடக்கிய
வலிகள் வரிகள் ஆகாமல்
ஏன் கண்ணீரால்
காகிதம் நனைத்தது மட்டுமே மிச்சம்



Niya .... jooooppeerruuu.     Sema kavithai  .... everything happens for our own good ......
Title: Re: மிச்சம்
Post by: NiYa on June 09, 2018, 02:25:48 PM
நன்றி  dora  ;) ;) ;) ;)
Title: Re: மிச்சம்
Post by: NiYa on June 09, 2018, 02:28:36 PM
நன்றி தோழரே ;) ;) ;) ;) ;) ;)
அப்படித்தான் நானும் நினைக்கிறேன்
Title: Re: மிச்சம்
Post by: joker on June 09, 2018, 05:05:13 PM
சில நேரம் இப்படி தான்
மனதில் நிறைந்திருப்பவரை
காகிதத்தில் நிரப்ப வார்த்தை இல்லாமல்
தடுமாறுவோம்

எதுவாயினும் 32 வரிகள் உங்கள் கவிதை
அருமை

""மனதில் அடக்கிய
வலிகள் வரிகள் ஆகாமல்
ஏன் கண்ணீரால்
காகிதம் நனைத்தது மட்டுமே மிச்சம்"

நல்ல வேலை நீங்க தட்டச்சு செய்தீர்கள்
கவிதை கிடைத்தது எங்களுக்கு
Title: Re: மிச்சம்
Post by: Ice Mazhai on June 09, 2018, 05:39:48 PM
Sooooper kavithai niya
Title: Re: மிச்சம்
Post by: AshiNi on June 10, 2018, 11:36:25 AM
Kavidhai superb Niya sis
Keep writing