FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 29, 2018, 01:41:11 AM

Title: வரம் ஒன்று வேண்டுமே.....
Post by: Guest on September 29, 2018, 01:41:11 AM
எல்லா தோல்விகளின் போதும்
எல்லா ஏமாற்றங்களின் போதும்
எல்லா புறக்கணிப்புகளின் போதும்
நிறைவேறாமல் போன நியாயமான ஏக்கங்களின் போதும்,
காரணம் தெரியாத இழப்புகளின் போதும்,
விடாது துரத்தும் சோதனைகளின் போதும்,
உடைந்துப் போய் மனம் கண்ணீர் வடிக்கும் போதும்

சோதிக்கும் என்
இறைவனின் அன்பையும்
கருணையையும் உணர்கிறேன்..

அத்தனையும் தாண்டி
இல்லாமைகளோடும் இயலாமைகளோடும்
குறைகளோடும் தொடர நேர்ந்த பொழுதுகளிலும்,
உணர்ந்துணர தன்னலமற்ற அன்பை
பொழிபவர்களால் நம்மை அருள்செய்த
 இறைவன் கருணை மிகுந்தவன்.

இறைவா
அன்புணரும், அன்புணர்த்தும் ஒரு இதயத்தை தந்தருள்.
உலராத ஒரு மனதையும் வறண்டு போகாத கண்களையும் தந்தருள்.

~~வெறுமனே நம்மை நாம் என்பதற்க்காக
மட்டுமே தாங்கி, நேசித்து நகரச்செய்த
அன்பானவர்களோடு மீண்டும் உடனிருக்கையில்
வாழ்வதை விட வாழ்வில் சிறந்தது வேறொன்றுமில்லை...💕💕