FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on May 22, 2019, 04:06:56 PM

Title: ஒரு ஓவியம் உயிராகிறது
Post by: சிற்பி on May 22, 2019, 04:06:56 PM
கண்ணீரில் இருந்து
சிரிப்பு மலர்கிறது
இருளில் இருந்து
ஒளி பிறக்கிறது
ஒரு ஓவியம் உயிராகிறது
அது உலகின் ஒளியாகிறது
சிலையில் இருந்து
கடவுள் வருகிறார்
சிலுவையில் இருந்து
இயேசு வருகிறார்
பிறையில் இருந்து
நபிகள் வருகிறார்
ஒரு ஓவியம் உயிராகிறது
அது உலகின் ஒளியாகிறது
யாழினில் இசை பிறக்கும்
யாக்கையில் உயிர் பிறக்கும்
காதலில் இல்லறம்
பிரிவினில் துறவறம்
ஓவியம் பேசினால்
காவியம் உயிர்பெரும்
ஒரு ஓவியம் உயிராகிறது
அது உலகின் ஒளியாகிறது
Title: Re: ஒரு ஓவியம் உயிராகிறது
Post by: Guest 2k on May 22, 2019, 04:49:46 PM
வாவ் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க சிற்பி. இன்னும் நிறைய அழகான கவிதைகளை உங்க கிட்ட இருந்து எதிர் பார்க்கிறோம்.