FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on May 22, 2019, 04:17:31 PM
-
காதலி....
என்னை விட்டு சென்றாலும்
அவளே என் முதல் மனைவி
மறுபிறவி ஆனாலும்
அவள் மடிசாய நினைக்கிறேன்
மரணம் வரும் வரையிலும்
அவள் நினைவோடு வாழ்கிறேன்
கண்ணீர் துளிகளாய்
கவிதையாய் வார்த்தையாய்
என்னில் இருக்கிறாள்
கடவுளை இதுவரை
கண்களால் காண்கிலேன்
காதலி அவளை நான்
கடவுளாய் பார்க்கிறேன்
ஆயிரம் ஆண்டுகள்
அரசனாய் வாழலாம்
ஆயினும் ஆண்மகன்
அன்புக்கு அடிமை தான்
நான் இறந்திடும்
நாள்வரை என் இதயம்
அவள் வாழும் தாஜ்மஹால்
-
முதல் காதல் எல்லாருக்குமே நீங்காத நினைவுகளை கொடுக்க கூடியது தான். ரொம்பவே அழகான கவிதை சிற்பி. தொடர்ந்து எழுதுங்க