நபிகள் நாயகம்-பொன்மொழிகள்:-
* எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. —நபிகள் நாயகம்.
* குற்றம் புரிவதை காட்டிலும் மரணம் மேலானது. —நபிகள் நாயகம்.
* மதம் என்பது துõய்மையான வாக்கும், கொடையும் ஆகும். —நபிகள் நாயகம்.
* தன்னிடமுள்ள குறைகளை அறிந்தும், பிறரது குறைகளை கூறி திரியக் கூடாது. —நபிகள் நாயகம்.
* நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள்; தீய செயல்களை விட்டு விலகியிருங்கள். —நபிகள் நாயகம்.
* நல்ல முறையில் பழக தெரிந்தவனும், நற்குணமுள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன். —நபிகள் நாயகம்.
* உலக ஆசையே எல்லா தீமைகளுக்கும் பிறப்பிடம். —நபிகள் நாயகம்.
* பிறரை சபித்தல் உண்மை பேசுவோருக்கு அழகல்ல. —நபிகள் நாயகம்.
* அண்டை வீட்டார் பசியோடிருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான். —நபிகள் நாயகம்.
* தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே விரும்பி வருந்துபவன், குற்றமிழைக்காதவனுக்கு ஒப்பாவான்.
—நபிகள் நாயகம்.
* வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணிக்கும் இளைஞன், எவனும் சொர்க்கத்தை அடைய முடியாது.