பொழுது போக்கு
பொழுது விடிந்து பொழுது சாயும் அந்தி நேரம் வரை உலகில் உயிர் வாழும் பல உயிரினங்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்வதற்கு தவறுவது கிடையாது, இவற்றில் எறும்பைப் போன்ற சில பிராணிகள் மட்டும் விதிவிலக்கு. பல உயிரினங்களுக்கு இனச்சேர்க்கை கூட கிடையாது, இப்படி இந்த பிரபஞ்சம் இயங்கி வரும் நிலையில் மிகவும் உயரிய படைப்பான மனிதனுக்கு மட்டும் தனது பொழுதை போக்க வேறு ஏதேனும் தேவைபடுகிறது, திரைப்படம்வானொலி கணினி என்று எதுவுமே இல்லாத காலத்தில் மனிதனுக்கு வேட்டையாடுவது விரோதிகளுடன் சண்டையிடுவது, விரோதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தேவையான உபகரணங்கள் போன்றவற்றை கண்டு பிடிப்பதில் தங்களது பொழுதை கழித்து வந்தனர்,
தங்களது கை கால்களின் அசைவைக் கொண்டு நடனம் போன்ற அசைவுகளை செய்து கண்டு களித்தனர், பாடுவதற்கு அறியாதிருந்த மனிதன் தன் குரலின் ஒலிகளை ஏற்படுத்தி அதனை ரசித்து பின்னர் தங்களது கூட்டத்தினருக்கு அந்த ஓசைகளை ஏற்ப்படுத்தி காட்டி பொழுதை கழிக்கபழகினர். மீன்பிடித்தல் எதிரிகளிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ள மர கிளைகளை வெட்டிகூர்மையான ஈட்டி உருவாக்கினர். இவ்வாறாக மனித இனம் மேம்பட்டு பல ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து, இன்று முன்னோர்களின் பல அரிய கண்டுபிடிப்புகளால் தற்போதுள்ள நவீன வசதிகளை அடைந்துள்ளோம். இந்த வசதிகள் அனைத்தும் கண்டு பிடிக்கும்முன்னர் அவற்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர்கள் இதன் மகத்துவங்களை அறியாமலும் அனுபவிக்காமலும் பின் வரும் சந்ததியினருக்கு வழங்கி சென்றுள்ளனர்.
சென்ற நூற்றாண்டின் மகத்தான கண்டு பிடிப்பான கணிணி இந்த நூற்றாண்டி இணையில்லாசேவைகளை வழங்கி உலகத்தின் அனைத்தையும் வீட்டினுள்ளே எடுத்து வரும் ஆற்றலைஅடைந்துள்ளது, இதன் பயனை அனுபவிக்கும் பலருக்கு இதனை கண்டுபிடித்த கால கட்டத்தில்உலகம் என்பது எங்கோ இருந்ததும் அவர்களின் இருண்ட காலத்தைப் பற்றியும் அறிந்திருக்கும்வாய்ப்பு உண்டா என்பது தெரியவில்லை. மரம் வைத்தவனால் அதன் பலனை அனுபவிக்கஇயலாததை வேறு ஒருவன் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையாவது நம் சந்ததியினர்அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக் குறியே.
பொழுதை போக்கும் சாதனங்களும் சாத்தியங்களும் நிறைந்து கிடக்கும் இன்றைய உலகில்மனிதர்கள் இவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் வேதனையாக உள்ளது.திண்ணை பள்ளிக்கூடங்களின் மண்ணில் விரலால் எழுதி பழகிய காலம் எத்தனையோநூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை, நமது பாட்டி தாத்தாக்கள் காலத்தில் தான் இருந்தது, பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளால் மிகச் சிலரே எழுதி வந்த காலம், அதன் பின்னர் இறகில் மை தொட்டு எழுதியகாலம் பின்னர் காகிதம் கண்டு பிடித்து அதில் இறகைக் கொண்டு எழுதிய காலம் இவையெல்லாம் கூட நமது தாத்தா பாட்டிகள் காலத்தில் தான் நடந்திருக்கிறது.
திண்ணைகளில் கூட்டமாக உட்கார்ந்து கதை சொல்லுதல், அதன் பின்னர் தெருகூத்து, நாடகம்,பேசாத திரைப்படம், பல ஆண்டுகள் கழித்து பேசும் திரைப்படம் இன்றைக்கு ஹோம் தியேட்டர்,சிடி, விசிடி, செல்போன், தெருவெல்லாம் பொதுதொலைபேசி வீடுதோறும் தொலைகாட்சிபெட்டி, பொழுதை போக்கும் வசதிகள் அதிகம் பெருகி வரும் நிலையில், பொழுது போக்குவதற்க்கெனதங்களது நேரத்தை ஒதுக்கி பொழுதைபோக்க ஊர் தேடி போவதும் கூட முக்கியமானதாக உள்ளது.
இவற்றில் குறிப்பிடும்படியான ஒரு விஷயம் எத்தனைப் பேர் புதியவற்றை கண்டுபிடிப்பதில்பொழுதை கழிக்கின்றனர், எத்தனைப்பேர் ஏற்கனவே பலரால் கண்டுபிடிக்கபட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர், எத்தனைப் பேர் பிறர் கண்டுபிடித்த சாதனங்களைமுறையோடு பயன்படுத்துகின்றனர், கணிணி, இணையதளம் இவை இரண்டையும் பலர்பயன்படுத்தும் முறை திரைப்படம், சிடி,விசிடி, தொலைபேசி, செல்போன் இருசக்கர வாகனம் கேமரா இன்னும் பல அறிய கண்டு பிடிப்புகளை பயன்படுத்தும் முறை இப்படி ஒவ்வொரு அறியகண்டு பிடிப்புகளை சமூகவிரோதிகளைத் தவிர பலரும் முறை தவறிதான் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர்.
முறைதவறி பயன்படுத்தி அடுத்தவரை அதனால் பெரும் பாதிபிற்க்கு உள்ளாக்கும் நய வஞ்சகச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டத்திற்கு புறம்பான கொலைகள் கொள்ளைகள் இவைகணக்கில் அடங்குவதில்லை, கட்டுப்பாட்டிற்கும் அடங்குவதில்லை. மனிதனை விட விலங்குகளேபிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரே மாதிரியான இயல்புகளுடன் வாழ்ந்து மறைகின்றன.