என்னிடத்தில் வந்தாய் ...
காதலை சொன்னாய் ...
ஊமையாய் நின்றேன் ...
பதில் அறியாமல் அல்ல ...
பதில் சொல்ல விரும்பாம்மல் ...
அன்று சொல்ல மறந்த பதிலை ..
என்று தினம் சொல்லுகிறேன் ..
என் உள் மனதில் ...
"நானும் உன்னை விரும்பினேன் "என்று
அன்று காலத்தின் கட்டாயம் ..
ஊமையாய் இருந்தேன் ...
இன்றும் அதே காலத்தின் கட்டாயம் தான் ..
ஊமையாய் வாழ்கிறேன் ...