ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பல சில்லறைகளை ஒன்று கூட்டி அதன் பெறுமதியை உணர்ந்தவுடன் அடையும் களிப்பின் உச்சத்திற்கு ஈடானது ஆண், பெண் நட்பு...
பேசி பழகியவுடன் உதிப்பதில்லை, பேசி பழகி புரிந்துணர்வுகள் தடம் பதிக்கும் போது தானாய் துளிர்விட்டெழுவதே நட்பு...
ஆண் பெண் நட்புக்குள் பாதுகாப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டதில்லை, சண்டைகளும் ஓய்வதுமில்லை, நீ பெரிது நான் பெரிது என்ற பெருமைப் பேச்சுக்கு இடமும் இருந்ததில்லை...
சண்டைகள் பல வீர நடை போட்டாலும் அடுத்த நொடி சிறு புன்னகை கொண்டு துடைத்தெரியும் கலைதான் அந் நட்புக்குள் அழகு...
ஊரார் தூற்றினாலும் உள்ளம்தான் எண்ணங்களின் பிறப்பிடம் என வாதாடும் காட்சிகளும் அப்பப்போ நிகழ்வதுண்டு அதைத் தாண்டி ஆழமான நம்பிக்கைகளே அந் நட்புக்குள் கைகோர்த்து நிற்கும்..
பரிசுகள் எதிர்ப்பார்ப்பதில்லை, பாராட்டும் எதிர்ப்பார்ப்பதில்லை தன் முகத்தில் ஒளி வட்டமாய் காட்சியளிக்கும் களிப்பு எந் நொடியும் அமர்ந்திட வேண்டும் என்பதே இலக்கு...
கவலைகளின் காவலனாய், வரம்போரம் முளைக்கும் களைகளை அகற்றுவது போன்று தன்னுள் தவழ்ந்தாடும் கவலைகளை அகற்றும் ஆறுதலாய் என்றும் நிலைத்திருக்கும்..
வயதுகள் வரையறைகள் இல்லை, மதங்களையும் ஏற்றதில்லை, மாறுபாடுகள் பிறப்பதுமில்லை...
பல வண்ணங்கள் நிரப்பிய வானவில்லென வர்ணமயமாய் பரந்த வாழ்வில் சிறு பக்கமாய் ஒதுக்கப்பட்டிருக்கும் அன்பை நிலையாக்கி...
அதிக இனிப்பு தெகிட்டிவிடும் ஆனால் அக்கறையில் ஒவ்வொரு நாளும் தெகிட்டாது அதிகமென முன்னேறி பயணிக்கும் ஓர் மாயம் நிறைந்த வலை ஆண் பெண் நட்பு...
அன்னையின் தாலாட்டையும், தந்தையின் அரவணைப்பையும் தேடியோடும் பிள்ளைகளென நட்புக்குள் கலந்திருக்கும்...
இங்கு நட்பை நன்கு நல்லதாய் கணிப்பதால் ஆண் பெண் என்ற வேறுபாடு கண் முன் கலைந்திடுமே...
கரைகானா ஆழத்தில் அன்பை தொடர நட்பு எனும் ஆழ் கடல் முத்தால் அலங்கரித்திட வேண்டுமடா... நீயும் நானும் என...♥️!