தொலைந்த புத்தகத்தில் எழுதப்பட்ட வரிகள் உமது...
புத்தகப் பொதி சுமக்கும் வயதில் கற்பொதிகளை சுமந்திட அவசியம் என்ன வேண்டியிருக்கிறது...!!?
பேனாவைப் பிடித்து உன் கையெழுத்தின் மூலம் இவ் உலகை ஆழ நினைக்கும் உமக்கு பாறைகளை குடைந்திடும் உளிகள் எதற்கு..!!?
கல்வியின் படிகளை அலங்கரிக்க உரிமைகளின் குரல்களைப் பாடி இவ் உலகத்தையே மூழ்கடித்திட்ட பாரதியார் கவிகள் எங்கே...!!??
புராணங்களும், இதிகாசங்களும் கல்வியின் சிறப்பினை எடுத்துக் காட்டி கல்வியில் முத்துக் குளிக்கும் வேளையில்,, அடிமட்டத்தில் அரவணைப்பின்றி அல்லாடுவதுதான் ஏனோ...!!??
விதி இட்ட கோலமோ..??! இல்லை சதி இட்ட கோலமோ..?!!
கண் முன்னே வாய் மூடி வேடிக்கை பார்க்கின்றன உரிமையை பெற்றுத் தரும் அறம்களும் இங்கே...
இலவசக்கல்வி என்று அறிமுகப்படுத்திய கல்வி இன்று தனியார் மயமானதினால் தான் என்னவோ,, பிஞ்சுக் கரங்களும் பிலக்கும் அளவிற்கு உழைக்கத் துணிந்தது...??
அறிவை அள்ளி வழங்கும் பலர் அடிமட்டம் உயர்மட்டம் என சாதி பிரிப்பதனால் தானோ, உடலை வருத்தி நீ அயராது கண் விழிப்பது...??
வீதியோரம் படுக்கையை தயார்படுத்தும் உம்மிடம் யாரும் அருகிருந்து உன் ஆசைகளை ஆராயாததினால் தானோ, சிறு வயதிலே சிறைப்பட்டு உன் கனவுக்குள் உனக்கான ஆறுதலைத் தேடுவது...??
எத்துனை கேள்விகள் எழுகிறது துணை நிற்கும் என் கண்ணீருடன்...
கலங்காதே தேயாதே மனிதன் என்ற கோட்பாட்டிற்குள் அணுகும் மனித நேயம் கொண்ட பலரும் இங்கே இருக்கத்தான் செய்கின்றனர், அவர் ஒருவரின் பார்வையில் விழும் உன் பிம்பத்தில் உனது அழகிய வாழ்வையே வடிவமைத்திருப்பான் அந்த இறைவன்..
போராட்டம் இல்லாத புற்களுக்கும் இங்கே வரலாறு என்றொன்றிராது, கல்விக்கனிகளை சுவைக்க வேண்டும் என்ற உன் போராட்டம் உன் கடின வாழ்வையே ஓர் அங்கீகாரம் சூட்டும் போர்வையாக்கித்ததரும் என்பதில் உறுதியாய் நில்...
பயம் என்பதை துடைத்தெறிந்து துணிந்து குரல் கொடு உன் உரிமைக்காக காலம் செல்லும் வேகத்தில் உன் உரிமைக் குரலை செவிமடுத்து உன்னோடு குரல் கொடுத்து நடந்திட ஓர் உறவாவது உன்னோடு பயணத்திடும்...
உன் கனவுகள் அனைத்தும் உதித்திடும் காலம் தொலைவிலில்லை....
கலங்காதே...!!
தேயாதே...!!