1.11 சுரத்திற் புனலழைத்த படலம்
680 முன்னிலை யாசு நடந்திட நடந்து
முதிரட விகள்கடந் ததற்பின்
றன்னிக ரில்லான் றிருவுளப் படியாற்
றரையினிற் ஜிபுறயீ லிறங்கி
யிந்நிலத் தெவர்க்குந் தெரிகிலா வண்ண
மிளம்பிடி யொட்டையொன் றௌிதாய்ப்
பன்னரும் பாதைத் தலைதடு மாறப்
பண்பொடு கொடுநடத் தினரே. 1.11.1
681 மட்டவிழ் புயத்தா னாசுமுன் னடத்தி
வந்தவொட் டகம்புது மையதாம்
பெட்டையொட் டகத்தைக் கண்டுபின் றொடரப்
பிசகின தருநெறி கானிற்
செட்டரு மெருதும் புரவியு மிடைந்து
சிறுநெறி வயின்வெகு தூர
மெட்டிமுன் னடப்பச் சிறுநெறி குறுகி
யிருந்ததுந் தேய்ந்தபோ யதுவே. 1.11.2
682 ஆசெனு மரச னொட்டகக் கயிற்றை
யசைத்திடுந் திசையெலா நடப்ப
வாசியு மெருதுங் கூன்றொறுத் தொகையும்
வழிகெடத் தனித்தனி மறுகத்
தேசிகர் கலங்கி யாமிதற் கென்கொல்
செய்குவ தெனமன மிடைந்து
வீசிய கானற் சுடச்சுடக் கருகி
விடர்விடும் பாலையி லடைந்தார். 1.11.3
683 பின்னிய திரைவா ருதியினைச் சுவற்றிப்
பெரும்புறக் கடலினைத் தேக்கித்
தன்னகங் களித்து வடவையின் கொழுந்து
தனிவிளை யாடிய தலமோ
பன்னருந் தென்கீழ்த் திசையினன் றிரண்ட
படையொடு மிருந்தபா சறையோ
வுன்னதக் ககன முகடற வுருக்கு
முலைகொலொ வெனவறி கிலமால். 1.11.4
684 பருத்திருந் தெழுந்து பறந்தசின் னிழலும்
பற்றறாக் கானலிற் றேய்ந்த
கரிந்திலை தோன்றா தொவ்வொரு விருக்கங்
கணங்களின் குலமெனத் தோன்று
மெரிந்தெரி மேய்ந்து கரிந்துவிண் ணிடங்காந்
திடுந்தரை யொருதுளி நீரு
மருந்திடக் கிடையா தலகைக டிரிந்தங்
காள்வழக் கற்றவெங் கானம். 1.11.5
685 பாலையென் றுலர்ந்த செந்நிலக் கானற்
பரப்பினைப் புனலென வோடிச்
சாலவு மிளைத்துத் தவித்துழை யினங்க
டனித்தனி மறுகிய மறுக்க
மாலுளர்ந் திருண்ட புன்மனச் சிறியோர்
மருங்கினி லிரந்திரந் திடைந்து
காலறத் தேய்ந்த பலகலை மேலோர்
கருத்தினில் வருத்தமொத் தனவே. 1.11.6
686 கள்ளியின் குலங்கள் வெந்தொடுங் கினவேர்க்
கட்டையி னுட்டுளை கிடந்து
புள்ளிபூத் திருந்த பைத்தலைப் பாந்தள்
புறந்திரிந் துறைந்திடா திறந்து
முள்ளெயி றொதுங்கிச் செம்மணி பிதுங்கி
முளைதொறுங் கிடப்பதைச் செறிந்த
கொள்ளியிந் தனங்க ளென்றுழைக் குலங்கள்
குறுகிடப் பயந்துகான் மறுகும். 1.11.7
687 மூவிலை நெடுவேற் காளிவீற் றிருப்ப
முறைமுறை நெட்டுடற் கரும்பே
யேவல்செய் துறைவ தலதுமா னிடர்கா
லிடுவதற் கரிதுசெந் நெருப்புத்
தாவியெப் பொருப்புங் கரிந்தன சிவந்து
தரைபிளந் ததுவதிற் பிறந்த
வாவியோ வெழுந்த புகைபரந் ததுவோ
வறக்கொடுங் கானலென் பதுவே. 1.11.8
688 சேந்தெரி பரந்த பாலையிற் புகுந்து
சென்னெறி சிறிதுந்தோன் றாமற்
காந்தெரி கதிரோ னெழுதிசை தெற்கு
வடக்குமேற் கெல்லைகா ணாமன்
மாந்தரு மாவுந் திசைதடு மாறி
வாயீனி ரறவுலர்ந் தொடுங்கி
யேந்தெழில் கருகி மனமுடைந் துருகி
யெரிபடு தளிரையொத் திடுவார். 1.11. 9
689 மன்னவ னாக முன்னடந் ததற்கோர்
வல்வினை பின்றொடர்ந் ததுவோ
வின்னைநா ளகில மடங்கலுந் தழலா
லெரிபடு காரணந் தானொ
முன்னைநாள் விதியோ நகரைவிட் டெழுந்த
முகுர்த்தமோ பவங்கண்முற் றியதோ
பன்னுதற் கெவையென் றறிகுவோங் கொடியேம்
பாலையிற் படும்வர லாறே. 1.11.10
690 பாடுறு புனலறத் றொவ்வொரு காதம்
படுபரற் பரப்புநாற் றிசைக்கு
மோடுவர் திரும்பி மீள்குவ ரடிசுட்
டுச்சியும் வெதுப்புற வுலர்ந்து
வாடுவர் துகில்கீழ்ப் படுத்தியொட் டகத்தின்
வயிற்றிடை தலைநுழத் திடுவார்
தேடிடும் பொருட்கோ வுயிரிழப் பதற்கோ
செறிந்திவ ணடைந்தன மென்பார். 1.11.11
691 ஓங்கிய வுதய கிரிமிசை யெழுந்த
மதியென வொட்டகை யதன்மேல்
வீங்கிய புயமுங் கரத்தினி லயிலும்
வெண்முறு வலுமலர் முகமும்
பாங்கினிற் குளிர்ந்த வெண்கதிர் பரப்பப்
பரிமள மான்மதங் கமழத்
தூங்கிசை மறைதேர் முகம்மதும் பாலைத்
துன்புறா தின்பமுற் றனரே. 1.11.12
692 பாலையி லடைந்து பசியினா லிடைந்து
பலபல வருத்தமுற் றதுவும்
வேலைவா ருதிபோல் வழிபிழைத் ததுவும்
விழுந்தியான் முகமுடைந் ததுவுங்
கோலமார் புலிவந் ததுமுகம் மதையாங்
கூட்டிவந் துறுபவ மென்னச்
சாலவு முரைத்தா னீதியை வெறுத்த
தறுகணா னெனுமபூ ஜகிலே. 1.11.13
693 மூரிவெற் பனைய புயமுகம் மதுவை
முன்னிலைத் தலைவராய் நிறுத்தித்
தாரையிற் செலுநம் மிடர்களுந் தவிருந்
தழலெழும் பாலையுங் குளிர்ந்து
வேரியங் கமல வாவியங் கரையாம்
விரைவினிற் சாமடை குவமென்
றாரிதுக் குரைத்தார் தாதவிழ் மலர்த்தா
ரணிதிகழ் புயத்தபூ பக்கர். 1.11.14
694 ஈதுநன் றெனவொத் தனைவரு மிசைத்தா
ரெழின்முகம் மதுவுமுன் னிலையாய்ப்
பாதையி னடப்பப் பெரியவ னருளின்
பணிகொடு ஜிபுறயீ லிறங்கிப்
பேதமற் றணுகி யொட்டகக் கயிற்றைப்
பிடித்தன ரரைநொடிப் பொழுதிற்
றீதற நெறியுங் தெரிந்தன நான்கு
திசைகளுந் தௌிதரத் தெரிந்த. 1.11.15
695 தலமைமுன் னிலையாய் முஅக்ம்மது நடப்பச்
சாருநன் னெறியினைச் சார்ந்தோம்
நிலமிசைக் கரிய மேகமொன் றெழுந்து
நிழலிவர்க் கிடுவதுங் கண்டோம்
மலைகடற் றிரைபோற் கானலில் வெதும்பி
யலைந்திடு வருத்தமுஞ் தவிரப்
புலனுறப் புனலும் பருகுவஞ் சிறிது
போழ்திலென் றனைவரும் புகன்றார். 1.11.16
696 மந்தரம் பொருவா தெழுந்தபொற் புயத்து
முகம்மது மேறுவா கனத்தின்
கந்தரக் கயிற்றை யசைத்திட வுளத்தின்
கருத்தறிந் தொட்டகங் களித்துச்
சுந்தரப் புவியில் வலதுகா லோங்கித்
தொட்டிடத் தொட்டவப் போதிற்
சிந்துநேர் கடுப்ப நுரைதிரை பிறஙகச்
செழித்தெழுந் ததுநதிப் பெருக்கே. 1.11.17
697 ஆறெழுந் தோடிப் பாலையைப் புரட்டி
யழகுறு மருதம தாக்கத்
தேறல்கொப் பளித்து வனசமுங் குவளைத்
திரள்களும் குமுதமும் விரிய
வேறுபட் டுலர்ந்த மரமெலாந் தழைத்து
மென்றழை குளிர்தரப் பூத்துத்
தூறுதேன் றுளித்துக் கனிகளுங் காயுஞ்
சொரிதரச் சோலைசூழ்ந் தனவே. 1.11.18
698 வற்றுறாச் செல்வப் பெருக்கினி தோங்கும்
வகுதையம் பதியுசை னயினார்
பெற்றபே றிதுகொ லெனமுழு மணியாய்ப்
பிறந்தமெய்த் துரையபுல் காசீஞ்
சுற்றமுங் கிளையுஞ் சிறப்பொடு தழைத்துச்
சூழ்ந்திருந் தணிதிகழ் வதுபோற்
குற்றமி னதியி னிருகரை மருங்குங்
குறைவறத் தளிர்த்தன தருக்கள். 1.11.19
699 நானமும் புழுகும் பாளிதக் குலமு
நறைகெட மிகுந்தவா சமதாய்த்
தேனினுங் கருப்பஞ் சாற்றினுந் திரண்ட
தெங்கிள நீரினு மினிதா
யூனமி னதிய னொருகைநீ ரருந்தி
யுடல்குளிர்ந் தரும்பசி யொடுங்கி
யானன மலர்ந்து முகம்மதைப் புகழ்ந்தங்
கனைவரு மதகளி றானார். 1.11.20