சாண்டில்யனை வாசிக்க வாய்ப்பு அமையவில்லை, கல்கியின் சிவகாமியின் சபதத்தையும், பார்த்திபன் கனவையும் வாசித்திருக்கிறேன், சிவகாமி சபதம் போல வேறு எந்த புத்தகத்தையும் வெறித்தனமாக படித்ததில்லை, எனினும் அதுவெல்லாம் பத்துவருடங்களுக்கு முன், இந்த இரு நாவல்களை தவிர வேறு சரித்திர நாவல்கள் வாசித்ததில், மாங்கனியை பொருத்தமட்டில் காட்சி விவரணையில் எனக்கு திருப்தியே இல்லை, இன்னும் அழகாக சொல்ல முடியும் என்றே ஒவ்வொரு பாடல் எழுதிய பிறகும் தோன்றுகிறது, ஆனால் பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்
இப்போது நான் பதிந்துவரும் பாடல்கள் முன்பே எழுதியதென்றாலும், மீள் வாசிப்புக்கு உட்படுத்தையில் தோன்று நெருடல்களையும், குறைகளையும் களையவே முயற்சிக்கிறேன்
கோயில் குணத்தாள் எல்லாம் முன்பு எழுதும் போது இல்லை
வார்த்தைகளை கையாளும் வித்தையையும் நுணுக்கத்தையும் நிறைய கற்று கொள்ள உதவியாக இருக்கும் என்பது கூட மாங்கனி எழுத ஒரு காரணமாக இருந்தது
கதை கண்ணதாசனுடையது, அந்த குதிரையை நம்ம திசைக்கு ஓட்டி செல்வது மட்டுமே என் வேலை என்பதால், குதிரையை ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று நம்புகிறேன்