என் இதயத்தில் வாழும்
கனவு தேவதையே...
நான் தினம் தினம்
வலை வீசி தேடும்
என் ஆசை நாயகியே...
உருவம் , பேர் ,ஊர்
கூட தெரியாதவளே
உன்னை உருவமைக்கும்
உரிமையை எனக்கு
கொடுத்தவளே...
நான் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது
என் விலா எலும்பிலிருந்து
எனக்கு துணைவியாக
உருவாக்கப் பட்டவளே...
உன்னைப் படைத்தவரின்
பாதம் பணிந்து
என்னை தரை மட்டிலுமாய் தாழ்த்தி
அவர் பரிசுத்த நாமத்தை
உயர்த்த வைத்த
என் சாரோனின் ரோஜாவே...
என் இருதயத்திற்கு ஏற்றவளே...
நீ எப்படிப்பட்டவளாய்
இருக்க வேண்டும் என்று
என் வாலிப பருவத்திலிருந்தே
கற்பனை உலகத்தில் எழுதி...
வரைந்தும் வைத்திருக்கிறேன்
என் அழகிய சித்திரை பெண்ணே...
இன்று உன் வருகைக்காக
வழி மேல் விழி வைத்துக்
காத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நினைத்த
நாட்களை விட
உன்னை தேடி
அலைந்து திரிந்த
வருடங்களே
அதிகமாக உருண்டோடியது
வயது முதிர்ந்தவனாக
இருந்த தருணத்தில்
முகம் தெரியாதவளாக...
அறிமுகமே இல்லாதவளாக...
இதயம்.... இதயம்... மட்டும்
பேசும் இணையத்தளத்தில்
இணைந்தவளே...
நினைத்து கூட பார்க்கவில்லை
உன்னை இங்கு சந்திப்பேன்னென்று
நான் நினைத்ததற்கும்
மேலாக வந்தவளே...
என்ன அழகு...
எத்தனை அழகு...
முத்து முத்தாய்
நீ பேசிய வரிகள்
என் இதயத்தில் நதியாய்
பாய்ந்து ஓடுகிறது
உன்னோடு பேசிய நாட்களை
தோரணையாக பின்னி
உன் இதயத்தின்
மொத்த அழகையும்
முத்தமிட்டு ரசிக்க வைத்தவளே...
முதல் முறையாக தொலைபேசியில்
நீ பேசிய
உன் அழகிய குரல்லோசையில்
விழ வைத்தவளே...
முகமே காட்டாமல்
முகம் மூடி போட்டு
கண்ணாமூச்சி ஆடியவளே...
மீண்டும் மீண்டும்
ஓயாமல் உன்னிடம்
பேச வைத்தவளே...
நான் தவமின்றி கிடைத்த வரமே...
காதலர் தினத்தில் பிறந்த
என் காதல் ரோஜாவாய்
என் இதயத்தில் பூத்தவளே...
உன் அழகிய கண்களால்
பேசும் வார்த்தைகளுக்கு
அர்த்தம் கண்டுபிடித்த நேரத்தில்
நீ கொடுத்த முகவரியை
இன்று தொலைத்து விட்டு
தேடுகிறேன்
என்னவளே...
என் காதலியே...
காதல் தந்த வலியே...
என் காதலின் பொக்கிஷ சாலையில்
நீ நடந்த பாதச் சுவடை
தேடி அலைகிறேன்
என் சித்திரத்தில்
சித்திரையாக வந்தவளே...
உண்மையான காதலை
புரிய வைத்தவளே...
உன் முகத்தை
என் இதயத்தில்
ஆழமாக பதித்தவளே...
என்னை அதிகம் நேசித்தவளே...
என்னுயிரில் கலந்தவளே...
நீ இல்லாத ஒரு வாழ்க்கையை
என்னால் நினைத்துக் கூட
பார்க்க முடியாது என்றாலும்
நம்மை பிரித்து வைத்து
வேடிக்கை பார்க்கிறது
இந்த உலகம்
நான் பார்த்துப் பார்த்து
செதுக்கி வைத்த
என் அழகிய சிலையே...
என் காதல் கதையை
கவிதையாக பின்னி
உனக்காகவே
நீ பார்க்க வேண்டும்
என்பதற்காகவவே
எழுதுகின்றேன்
வருவாயா....
என் உயிர் பிரிந்து
என்னுடல்
மண்ணுக்கு போவதற்குள்
அதுவரை
என் இதயத்தில் வரைந்த
உன் உருவத்தை
என்னுடைய சித்திரை பெண்ணாக
அதற்கு உயிர் கொடுத்து
நீ வரும் வரை
அனைத்துக் கொண்டிருப்பேன்
என்றும் அன்புடன்,
உன் இதய துடிப்பு
J❤️S❤️B