வணக்கம் RJ, இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் "கிழக்குச் சீமையிலே" படத்திலிருந்து "கத்தாழங் காட்டுவழி"
படம் : கிழக்குச் சீமையிலே
பாடல் : கத்தாழங் காட்டுவழி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், S.ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து
என்ன சொல்ல இந்த பாடலை பற்றி? ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்பொழுதும் முடி சிலிர்த்துக்கொள்ளும் அளவு புல்லரிக்கின்றது. பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில முதல் படம் இது. எந்த ஒரு வெஸ்டர்ன் தாக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க folk ஸ்டையில் ஒலித்தடங்கள் கொண்ட படமிது. படத்தின் அத்தனை பாடல்களும் காலத்திற்கும் நிலைக்கும் க்ளாசிக் வகையை சேர்ந்தது.
முழுக்க Percussion வாத்தியங்களான ட்ரம்ஸ் மற்றும் மாட்டு சலங்கைகளை குறிக்கும்விதமாக Tambourinesசும், மெல்லிய குழல் இசையும் அமைந்த ஒரு எளிமையான, அந்த எளிமையே அழகாக அமைந்த பாடலிது. ஜெயச்சந்திரனின் குரல், வாவ்வ் என்ன மாதிரியான குரல் இது? கேட்கும்போதே மனமெல்லாம் கிறங்க வைக்கும் குரல். இந்த பாடலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த பிண்ணனி பாடகருக்கான விருதையும் ஜெயச்சந்திரன் வென்றிருக்கிறார். இந்த மனுஷனால் எப்படி என் மேல் விழுந்த மழை துளியேவென்றும், வண்டி மாடு எட்டி வச்சு முன்னே போகுதம்மா என்றும் versatileஆக பாட முடிகிறது என ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயச்சந்திரனின் குரல் தான் இந்த பாடலில் பிரதானம், ஜானகி சில நிமிடங்கள் மட்டுமே பாடியிருந்தாலும் அப்படியே மனதை Sweep செய்து போய்விடுவார்.
திருமணமாகி பிரிந்து செல்லும் அண்ணன் தங்கை உறவை வெகு அழகாக உணரவைக்கும் வரிகளை வைரமுத்து எழுதியிருப்பார். இன்னமுமே ஊர்புறங்களில் தங்கையை வழியனுப்பி வைக்கும்பொழுது கண்கலங்கி நிற்கும் அண்ணன் தங்கைகளை நான் கண்டிருக்கிறேன். அந்த உறவு சொற்களில் விளக்கிவிடமுடியாத பேரழகான உறவு.
இந்த பாடலில் அமைந்த எனக்கு மிகவும் பிடித்த factualஆன ஒரு வரி, "சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே. தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே". எத்தனை உண்மையான வரிகள். இருப்பது ஒரு இடம் என்றாலும், பெண்களுக்கு காலம் முழுக்க நெஞ்சில் பிறந்த வீட்டை சுமந்து நிற்கும் நிலை தானே.
இந்த பாடலை எல்லா அண்ணாஸ்க்கும், அண்ணாசோட செல்ல தங்கைகளுக்கும் டெடிகேட் பண்றேன்.
இந்த படத்தில் அமைந்த மற்ற ஒலித்தடங்கள்,
1. மானூத்து மந்தையில - எஸ்.பி.பி, சசிரேகா
2. ஆத்தங்கரை மரமே - சுஜாதா, மனோ
3. தென்கிழக்குச் சீமயிலே - சித்ரா, மலேசியா வாசுதேவன்
4. எதுக்கு பொண்டாட்டி - ஷாகுல் ஹமீது, சுனந்தா, டி.கே.கலா
நன்றி RJ