20
« Last post by TiNu on May 21, 2024, 12:02:51 AM »
கடவுளின் படைப்பில்,
உலகின் அதிக நிகழ்வுகள்.. அடங்கி நிற்பது இரண்டு இரண்டாகவே...
ஓர் நாளின் இரட்டை தோழிகள்... இரவும் பகலும்...
உயிர்களின் இரட்டை வதனம்... ஆணும் ... பெண்ணும்.....
ஒலியின் இரட்டை பிறவிகள்... சப்தமும்.. நிசப்தமும்..
ஒளியின் இரட்டை கிளவிகள் .. கரிய இருளும்.. வெண் பிரகாசமும்....
நாதத்தின் இரட்டை தோழர்கள்... ஆரோகணமும் .. அவ்ரோகணமும்..
கணிதத்தின் இரட்டை சிசுக்கள்.. எண்களின் ஒன்றும்... சுழியும்..
பூதங்களின் இரட்டை அடிநாதம்.. நீரும்... நெருப்பும்..
அண்டத்தின் இரட்டை பிரிவுகள்.. காற்றிடம்.. வெற்றிடம்..
இன்னும் பல பல.. உண்டு... இப்பிரபஞ்சத்தில்...
ஆண்டவனின் படைப்பில்,
அண்டத்தை இப்படி... ஜோடி ஜோடியாக படைத்திருக்க..
நம்முளும் உருவெடுக்கும் சில இரட்டையர்கள்..
நம் நாசிகளிலும்... இரு சுவாசங்கள் உண்டென்பர்...
இதயத்தின் துடிப்புகளும் இரண்டு.. நாளங்கள்... நாடிகள்...
விழி.,செவியின் இரட்டையர்களை..தனித்தனியே பிரித்து..
எடுத்து சொல்ல.. பல்லாயிரம் நாழிகைகள் ஆகுமே.....
மொத்தத்தில் சுருங்க உரைத்தால்.. நம் முழு தேகமுமே..
ஒன்றில் மறைந்திருக்கும்.. இரு எதிர்மறை பகுதிகளே..
இறைவனின் படைப்பில்,
பிறருக்கு நன்மை செய்து.. அதில் நிறைவுபெறும் மனம் ஒன்று..
தான் மட்டும் வாழ... பிறர் நலம்.. நோக்கா.. மனம் ஒன்று..
எல்லா மனித படைப்புகளிலும் வாழுமே .. இவ்விரு சக்திகள்..
நன்மைகள் மட்டுமே செய்து.. நல்லவனாக வாழவும் முடியாது..
தீமைகள் மட்டுமே செய்து.. கெட்டவனாக வாழவும் முடியாது..
உன் அன்பும் கருணையும் வேண்டுவோரிடம்..தெய்வமாக.. வாழ்..
உன்னிடம் அடைக்கலம் வேண்டுவோரின். துயர்துடைக்க. அரக்கனாய் வாழ்... .
என்றுமே.. நாம்.. இடம்,பொருள்,ஏவல் ஆராய்ந்து அறிந்து..
அக்கணப்பொழுதில்.. நம்முள் உறைந்திருக்கும்.. இருவரில்...
யார்.. எப்போது எப்படி.. உருவெடுத்து.. வெளிப்பட வேண்டுமென..
ஆழ்ந்து சிந்தித்து.. தீர்க்கமாக முடிவெடுத்து.. வாழ்வதே வாழ்க்கை...