எவ்வளவோ முயன்றும் செல்வியால் சரத்திடம் உரையாட
முடியவில்லை.இவ்வளவு எளிதில் தன்னை வேண்டாம் என முடிவு
எடுக்கும் அளவிற்கு அவன் அன்பு மாறிப்போனதா? அவன் அப்பா
அல்லது அன்னை இவர்களில் யாரேனும் சரத்தை கட்டுப் பாட்டில்
வைத்திருக்கிறார்களா? இல்லை இந்த இரண்டு மூன்று
ஆண்டுகளில் வேறு பெண் யாரேனும் பிடித்திருக்குமோ?
என்றெல்லாம் அவள் மனம் அலைபாயத் துவங்கியது.வேறுவழியே
இல்லை நேரில் சந்தித்து நடந்தவற்றைக்கூறி சமாதானம் செய்தால்
நிலைமையை சரி செய்யலாம் என்றெண்ணி அவன்
சென்டருக்கு சென்று காத்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள்
வருவதும் போவதுமாய் இருந்தனரே தவிர சரத் அங்கு வந்த
பாடில்லை. வேறு எண்ணில் இருந்து தான் அவனது சென்டரின் முன்
காத்திருப்பதாகத் தெரிவித்தாள்.அவன் தொடர்பினை ஏற்ற போதும்
மூச்சு கூட விடவில்லை. ஒரு நாள் முழுதும் செலவழித்துக் சரத்
மனமிரங்கி வருவதாய் தெரியவில்லை.அவ்விடத்தை விட்டு
ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அவளுக்கு எத்தனை நாட்கள்
நான் அழைத்த மறுகணம் எல்லாவற்றையும் விட்டு காண
வந்த நாட்கள் அனைத்தும் கண்முன்னே தோன்றின.தன்னை
ஏமாற்றும் நோக்குடன் பழகுபவனாய் இருந்தால் அவனுடைய
அப்பாவிடம் கூற வேண்டிய அவசியமில்லை ,பதிவுத்திருமணம்
செய்யக்கூறும் அவசியமில்லை.தவிர்க்கும் காரணத்தை தெரிந்தே
ஆக வேண்டும் என எண்ணினாள்.அதே சமயம் வீட்டில் நிலைமை
இன்னும் மோசமானது. அவளை அழைத்து அடிக்கடி திருமணம்
செய் என கட்டாயப்படுத்த ஆரம்பித்தனர். 'உனக்கு வரன் வந்து கொண்டே
இருக்கிறது .பார்க்க அழகில்லை என்றால்கூட பரவாயில்லை. எல்லா
உறவுகளிடமும் அமைதியாக பழகும் குணமும் ,அழகும் ,படிப்பும் நிறையவே
இருக்கிறது. உன்னை வேண்டாமென்று சொல்லும் அளவுக்கு அவனுக்கென்ன
தகுதி இருக்கிறது,அவனே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவன் நமக்கு முன் நிமிர்ந்து
நிற்கக் கூட பயப்படும் ஓர் இனத்திலிருந்து வந்தவன்.காமராஜர் ஆட்சியில்
தான் இனப்பாகு பாடு மறைந்து அவர்கள் அடையாளமும் மறைந்தது.சரி
சாதி பெயரைவிடு குணத்தை பார் உன் குணத்திற்கு சிறிது ஒத்துழைத்தால்
கூட நாங்களே உன்னை அவனிடம் ஒப்படைக்கிறோம்.இனி எங்கள்
குடும்பத்திற்கும் உனக்கும் ஒன்றுமில்லை என எழுதிக்கொடுத்துவிட்டு
நீ புறப்படு' என்று அவள் தாத்தா அவருடைய மனத்தாங்கள்களைக்
ககொட்டித் தீர்த்தார்.அப்போதுதான் செல்விக்கு சாதி என்ற ஒன்று பற்றிய
விழிப்புணர்வு வந்தது.தாழ்த்தப்பட்ட அவன் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த
அவளைக் கேட்டு வந்தால் உயிருக்குக் கூட ஆபத்தாகலாம் என்று எண்ணி
சரத்தின் அன்னை தான் அவனை வரவிடாமல் செய்திருக்க வேண்டும்
என்பதைப்புரிந்து கொண்டாள்.'சாதி என்பதைப்பற்றி சரத்திற்கும்,
அவன் குடும்பத்தாருக்கும் படிக்கும்போதே தெரியுமே! ஏன் அவனது தந்தை
அவனைத் தடுக்கவில்லை? ' என்று கேட்டாள்.'அவர்களுக்கு இதுதான்
தொழில் ..உயர்சாதி பெண் பையன்களைத்திருமணம் செய்து தன்
இனத்தினை அதிகரிக்கும் நோக்கில் இருப்பவர்கள்.ஏன் உன் அழைப்பை
ஏற்கவில்லை? உனக்கு குடும்பம் ஆள் பலம் அதிகம் என்பதை இப்போதுதான்
தெரிந்து கொண்டு ஓடிவிட்டான் 'என்ற பதில் கூறினர்.
'உனக்கு இன்னும் ஒரு வருடம் தான் அதற்குள் இதிலிருந்து மீண்டு வந்து
திருமணம் செய்ய வேண்டும் . இல்லை அவன்தான் வேண்டும் என்றால்
அவன் உனக்காக எத்தனை துன்பம் தாக்கினான் ? இந்த பிரச்சினையில்
எவ்வளவு துணையாக நிற்கிறான் என்பதை மட்டும் சிந்தித்து முடிவெடு'
என்று அனுபவத்தில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் முன்மாதிரியாக திகழும்
அவளது தாத்தா கூறி அனுப்பி விட்டார்.
செல்விக்கு இப்போதுதான் என்ன நடக்கிறது ? எனப்புரியவே ஆரம்பித்து.
அவனை இனி தொடர்பும் கொள்ள இயலாது. நிலைமையை நாம் மட்டும்
நின்று சரி செய்யவும் முடியாது என நம்பிக்கையைக் கைவிட்டாள்.இரண்டு
ஆண்டு இந்த வலியில் இருந்து அவள் மீள் முடியாமல் வேலைக்குச் சென்று
வந்தாள்.காலப்போக்கில் அவள் கண்களில் சரத்தின் நினைவு நின்று
போனாலும் நீங்கவில்லை.அந்த வருடம் அவளுடன் பயின்ற தோழி
ஒருத்தி அவள் திருமணத்திற்கு அழைக்கும் நோக்கில் தொடர்பு
கொண்டாள். செல்வியும் வருவதாய் கூறினாள். அப்போது அந்த தோழி
'தான் சரத்திடம் பேசியதாகவும் அவன் உன்னை சம்மதம் வாங்கி விட்டு
தொடர்பு கொள்ளச் சொன்னான்.நீ தான் அவனைத் தவறாகப் புரிந்து
கொண்டாய்' எனவும் தெரிவித்தாள்.'சம்மதிக்க வைக்க முதலில்
விரும்பியவன் என்று ஒருவன் உடன் இருந்தால்தானே! காரணமே
சொல்லாமல் தவிர்த்து மனதை வேதனைப்படுத்திய அவனை எவ்வாறு
நம்புவது ? 'என்ற நம்பிக்கை தோய்ந்த குரலில் பதில் கூறினாள்.
சிறிது நாட்களுக்கு பின் செல்விக்கு முற்றிலும் தெரியாத அழைப்புகள்
அவள் கைப்பேசிக்கு வந்து கொண்டே இருந்தது. செல்வி அப்படிப்பட்ட
அழைப்புகளை ஏற்பதில்லை.தொடர்ந்து ஒரே எண்ணில் இருந்து
அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அவள் மனதிற்கு தெரியும் அது
யாராக இருக்கும் என்று . மனதில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அழைப்பை
ஏற்றாள். மறுபுறம் வந்த குரல் 'உனக்கு கல்யாணம் ஆகி விட்டதா?
வேலைக்கு போரதானே? நான் உன்னிடம் என்ன கூறினேன் ?
உனக்கு நினைவில் இல்லையா? ' என அடுக்கடுக்காய் கேள்விகள்
மட்டுமே வந்தது.சம்மந்தமில்லாமல் யார் தன்னிடம் இப்படி
பேசுவார்கள் என்று தெரிந்து வேண்டும் என்றே ' எப்ப யார்
சிக்குவாங்க ?வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு இப்படி எத்தனை
பேர் கிளம்பி வந்துருக்கீங்க ? ' என்று கேட்டு விட்டு இணைப்பைத்
துண்டித்தாள்.
செல்வியின் மனம் வலிகள் ,வேதனைகள்,தகாத வார்த்தைகள்
அத்தனையும் தாங்கி தாங்கி மரத்தே போனது.அந்த அழைப்பில்
இருந்து வந்த குரல் சரத் என்பதை உணர்ந்தும் அவள் அவனை
சந்தேகப்படவும் இல்லை வெறுக்கவும் இல்லை. காதலன் என்ற
ஒரே உறவிற்காக அவள் இழந்த நட்புகள்,பட்ட கஷ்டங்கள் ,
வாங்கிய வார்த்தைகள் எதுவுமே சரத் தெரிந்து கொள்ள
விரும்பவில்லை. அவனை எப்படி இவ்வாறு வளர்த்தனர்?
ஒருவர் தனக்காக கஷ்டப்படுகிறார் எனத் தெரிந்தும் அவருக்குத்
துணையாக நிற்க முடியாத அளவுக்கு அவன் மனம் கல்லாக இருந்ததே!
அவன் வாழ்க்கையில் யாருக்கு துணையாக இருப்பான்?'
என்று அனைத்தும் யோசித்து விட்டு தான் அந்த பதிலை
உரைத்தாள்.
சரத் வளர்ப்பிலே தாயன்பை இழந்து மாற்றாந்தாய் மூலம் துன்பத்திற்கு
ஆளானவன்தான்.ஆனால் அதே துன்பத்திலிருந்து தப்பித்து செல்லவே
அவன் எண்ணியிருந்தான். சரத் அப்பாவிடமும் பேச்சு வார்த்தை கிடையாது.
அதன் பிண்ணனியும் தெரியாது.பள்ளிப்படிப்பு முடியும் வரை யார்
பேச்சைக்கேட்டு யாருடைய கண்காணிப்பில் வளர்ந்திருப்பான்.
சரத் வளர்ந்து வர உதவிய வளர்ப்பு அம்மா கண்காணிப்பில் என்றால்
அங்குதானே தங்கியிருக்க வேண்டும்.எது நல்லது எது கெட்டது என்று
நமக்கு சின்ன சின்ன விஷயம் கூட அப்பா அம்மா உடன் இருந்து தான்
வளர்த்தனர்.சரத் யார் பேச்சையும் சிறிதும் மதித்து நடந்து கொண்டதில்லை
அவன் அப்பாவைக் கூட அவன் இவன் என்று கூறுவதை பலமுறை
கேட்டிருக்கிறாள்.இப்படி பல குணங்கள் விசித்திரமாக இருந்தது.
சில குணங்களை மாற்றும்படி கூறினாலும் மறைப்பானே தவிர
மாற்றப்போவதில்லை....
செல்வியும் சரத்தை வேண்டாம் என்றே நினைத்திருந்தாள்.
அதற்கு ஒரே ஒரு காரணம் செல்வியால் நண்பர்களை இழந்து
சுதந்திரத்தை விட்டுக்கொடுத்தது போல் பெற்றோரையும் இழந்தால்
வாழ்க்கை முழுதும் அவன் கட்டுப்பாட்டிலே சென்று இருக்க
வேண்டி நேரிடலாம்.ஒருவேளை சரத் தன்னிடம் பேச நேரிட்டால்
அதன்பின் நிலைமையை என்ன செய்வதென்று மற்றோர் எண்ணமும்
இருந்தது. ஆனால் மூன்றாண்டுகள் ஆகியும் தெரியாத எண்ணில்
இருந்து அழைப்பு வருமே தவிர துணிவுடன் பிரச்சினைகளை
எதிர்கொள்ள சரத் முற்படவில்லை.அதன் பின் அவள் குடும்பத்தில்
யாரெல்லாம் அவளை வார்த்தைகளால் வேதனைப் படுத்தினார்களோ
அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து பிரச்சினை வர ஆரம்பித்தது.
செல்வியின் தந்தைக்கு விபத்தில் ஒரு கால் பாதிக்கப்பட்டது.அவளின்
பாட்டிக்கும் கீழே விழுந்ததில் கால் எலும்பு 3 முறைக்கும் மேல் முறிவு
ஏற்பட்டது.அனைவர்க்கும் பெண் பிள்ளையை கஷ்டப்படுத்தியதால் தான்
அடுத்தடுத்து அசம்பாவிதம் நடப்பதாக எண்ணினர்.செல்வியை அழைத்து
'என்னதான் நடக்கிறது.. உண்மையை உள்ளபடி கூறு ..உன் பாவத்தை
நாங்கள் வாங்க விரும்பவில்லை.'என்று கேட்டனர். அதுவரை விதி ,
கர்மா ,பழி , பாவங்கள் பற்றிய அறிவு ஏதும் இல்லாதவள் நடந்த அனைத்தும்
கூறினாள்.' உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் அவனிடம் இருந்து
எந்த தகவலோ தொந்தரவோ கிடையாது' என்று முடிவினைக் கூறினாள்.
இருந்தும் அவள் எப்போதெல்லாம் மனம் நொந்து அழுகிறாளோ
அப்போதெல்லாம் குடும்பத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதை
உணர்ந்தாள்.அவளுக்கும் கர்மா விதி இவற்றின் மேல் நம்பிக்கை
வளர்ந்தது. 'உணர முடியாத ஏதோ ஓர் சக்தி நம்மை சுற்றி இருக்கிறது
அதுதான் தன்னைச் சார்ந்தவர்களுக்கு துன்பத்தை தருவதை
உணர்ந்தாள்.இவர்களுக்கே இப்படி என்றால் தனது இந்த நிலைக்கு
காரணமானவனும் துன்பப் படுவான் அவன் விதியை அவனே
அனுபவிப்பான்' என்றே எண்ணிக் கொண்டாள்.
மற்றவர் மனது நோகப் பேசுவது ,திருமண ஆசை காட்டி ஏமாற்றுவது
தன்னால் ஒருவருக்கு துன்பம் வந்தால் தனக்கும் அதற்கும்
தொடர்பில்லாதது போல் செல்பவர்கள், கோபப்படும் போது
வார்த்தைகளால் ஒருவரை வதைப்பது இவற்றிற்கு யார்
தண்டனை கொடுப்பார்? என்ற தைரியத்தில் பலரும் தவறு
செயவதுண்டு.இவை அனைத்தையும் உங்கள் உள்மனது பதிவு
செய்தே வைத்திருக்கும்.அதன் வீரியம் எப்போதெல்லாம்
அதிகரிக்குமோ அப்போதெல்லாம் குற்றத்தை செய்தவர்
தகுந்த காலங்களில் தண்டனை பெறுவர்.எனவே தங்களின் மனதிற்கு
உறுத்தலாக இருக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.
குறிப்பாக விரும்பி திருமணம் செய்ய விளையும் அனைவருமே
யாருடைய மனதையாவது உடைக்க வேண்டிய சூழல் இன்னும் நம்
நாட்டில் இருக்கத்தான் செய்கிறது.மதம் ,இனம்,மொழி இவை
அனைத்தைப்பற்றிய செய்தி எதுவும் எங்கும் கிடையாது. எங்கே,எப்போது
யாரால் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியாது.அதனைத் தீவிரமாக
பின்பற்றும் நபர்கள் இருக்கும் வரை அந்த வட்டங்களை தாண்டி
நாம் எதனையும் யோசிக்கவோ அடையவோ நினைப்பது பல
அசம்பாவிதங்களையும் பல உயிர்களையும் பலி வாங்கதான்
செய்யும்.எனவே ஒரு நபரை விரும்புவது கூட பாவச்செயல்தான்
நாம் அவருடன் சேரமுடியாவிட்டால் அவரது வேதனையும்
பாவங்களாய் நம்மைப் பின் தொடரும் என்பதை உணர்ந்து
செயல்படுங்கள்...
மேற்கண்ட கதையில் நடந்த அத்தனையும்,அனைத்து
உறவுகளும் , நிகழ்வுகளும் கற்பனையல்ல நிஜமாக
நடந்த நிகழ்வுகள்....
முற்றும்......