சிம்மம்
சிம்மம்: பாராட்டுகள் குவியும்
மற்றவர்களின் மனோநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுப்பீர் கள். மனதில் உதித்ததை மறைக்காமல் பேசுவதால் நண்பர்கள் உங்களுக்கு அதிகமில்லை. புதன் 8ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து பேசும் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உதாசீனப்படுத்திய உறவினர், நண்பர்கள் இனி உங்களை புரிந்துகொண்டு விரும்பி வந்து பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு புதுத் தீர்வு காண்பீர்கள். சில இடங்களில் வளைந்து கொடுத்தும், சில நேரங்களில் மௌனமாக இருந்தும் சாதித்துக் காட்டுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சனியும் ராகுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள்மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியில் நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும்.
கடன்காரர்களை கண்டு அஞ்சினீர்களே! இனி கவலை வேண்டாம். வட்டியுடன் அசலையும் கொடுக்கும் அளவிற்கு குடும்ப வருமானம் உயரும். இளைய சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப் பார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். இந்த விஜய ஆண்டு உங்களது 10வது ராசியில் பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது உத்தியோகம் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.
27.5.2013 வரை குருபகவான் 10ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்துசெல்லும். உங்கள்மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
மகளின் கல்யாணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். மகனுக்கு இருந்த அலட்சியம், கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். வீண்பழி, வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்களெல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடிவரும். ஐப்பசி மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து பலவீனமடைவதால் விபத்து, ஏமாற்றம், மனஇறுக்கம், உடல் நலக்குறைவு வந்துபோகும். பணப்பற்றாக்குறையும் ஏற்படும்.
இக்காலக்கட்டத்தில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வருடம் முழுக்க கேதுபகவான் ராசிக்கு 9ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். பிதுர்வழிச் சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு வீண் டென்ஷன், கணுக்கால், முழங்கால் வலி வந்து செல்லும். தந்தைவழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கன்னிப் பெண்களே! போலியாக பேசுபவர்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்புகளும் உண்டு. திருமண முயற்சி கூடிவரும்.
மாணவ மாணவியர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பள்ளி மாற வேண்டி இருக்கும்.
வியாபாரிகளே! தொட்டது துலங்காமல் நஷ்டப்பட்டீர்களே! பாக்கியை வசூலிப்பதும் போராட்டமாக இருந்ததே! வேலையாட்கள் சரியாக அமையாமல் அவஸ்தைப்பட்டீர்களே! இந்த வருடத்தில் அந்த நிலை எல்லாம் மாறும். வணிகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் கடையை நவீனமயமாக்குவீர்கள். லாபமும் கூடும். ஹார்ட்வேர், ஹோட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! அடிக்கடி இடமாற்றத்தால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சூழ்ச்சியாலும் மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே! இனி உங்கள் கை ஓங்கும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். வேறுசில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.
கலைத்துறையினரே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! நகைச்சுவையாகவும் நாசூக்காகவும் பேசி மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செல் வாக்கு கூடும்.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைக்கு தீர்வு கிடைக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனின் உதவி கிட்டும். உளுந்து, வேர்க்கடலை, சவுக்கு வகைகளால் லாபமடைவீர்கள்.
இந்த விஜய வருடம் விழுந்து கிடந்த உங்களை தலை நிமிரச் செய்வதுடன், புதிய பதவியாலும் பணவரவாலும் சமூகத்தில் புது கௌரவத்தை பெற் றுத் தரும்.
பரிகாரம்:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையிலுள்ள பழையசீவரம் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்று தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு காலணியும் குடையும் வாங்கிக் கொடுங்கள்.