Author Topic: விஜய வருட(தமிழ் புத்தாண்டு - 2013) பொது பலன்கள்  (Read 2222 times)

Offline kanmani

மேஷம்

மேஷம்: சொத்து சேரும்

சின்னச் சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் வல்லவர்கள். சுயமரியா தையையும் சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்காத நீங்கள், மொழி, இனப் பற்று அதிகமுள்ளவர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியின் சாரத்திலே இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் அந்தஸ்து உயரும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். இந்த விஜய வருடம் உங்களுக்கு 2வது  ராசியில் பிறப்பதால் பக்குவமாகப் பேசி பல விஷயங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் ஓரளவு கூடும்.

27.5.2013 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாத கமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆனால், 28.5.2013 முதல்  வருடம் முடியும் வரை 3ம் வீட்டிற்கு குரு செல்வதால் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடி யாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும்.

இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர் களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துபோகும். என்றாலும் தந்தைவழியில் உதவி கள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வருடம் பிறக்கும்போது சுக்கிரனும் செவ்வாயும் வலுவடைந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும். இந்த ஆண்டிலே  உங்கள் கனவு இல்லம் அமையும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 18.10.2013 முதல் 16.11.2013 வரை பலவீனமடைவதால் இக்காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கியம் பாதிக்கும். அவர்களின் பழக்க, வழக்கங்களை கண்காணியுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் மூக்கை நுழைக்க வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க கேது பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றை கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி  தலைச்சுற்றல் வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு முழுக்க சனியும் ராகுவும் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத் தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை வீட்டிற்குள் அனும திக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். இருவ ரும் ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது. ஆனி மாதத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புது வேலை அமையும். 12.8.2013 முதல் 7.9.2013 வரை சுக்கிரன் மறைவதால் அக்காலக்கட்டத்தில் சிறு விபத்துகள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பரா மரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 19.8.2013 முதல் 10.10.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமாகி சனியின் பார்வையை பெறுவதால் இக்காலக்கட்டத்தில் உடல் நிலை பாதிக்கும்.

சகோதரங்களுடன் கருத்து மோதல் வரும். பண விஷயத்தில் ஏமாற்றங்கள் ஏற்படும். விஐபிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலக்கட்டத்தில் வீடு, மனை வாங்குவது, விற்பதில் கவனமாக செயல்பட வேண்டும். சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டா லும் கிடைக்கும் வேலையில் சேருவது நல்லது. அயல்நாடு செல்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! மறதி, தூக்கம் அதிகரிக்கும். அலட்சியம் கூடும். கடினமாக உழைக்காவிட்டால் தோல்விகளை சந்திக்க நேரிடும். எனவே  தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரிகளே! போட்டிகள் கடுமையாக காணப்படும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்யுங்கள். அதிக வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். புதிய துறைகளிலும் ஈடுபட வேண்டாம். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வெடிக்கும். கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, ஆவணி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். தை, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அனுபவமுள்ள நல்ல வேலை யாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சாஃப்ட்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். தை  மாதத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கண்டகச் சனி தொடர்வதால் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் நிர்வாகத்திடமிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். என்றாலும் கடின உழைப்பாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பாலும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் உண்டு. கம்ப்யூட்டர் உள்ளிட்ட தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை கொடுக்கும். கோஷ்டிப் பூசல் அதிகரிக்கும். மேடையில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு எதிர்க்கட்சியினரை ஆதாரமில்லாமல் வசை பாடாதீர்கள்.

கலைத்துறையினரே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால் யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களைவிட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! வாய்க்கால் தகராறு, வரப்புத் தகராறை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம். பூச்சித் தொல்லை அதிகரிக்கும். மரப்பயிர்களும் தோட்டப் பயிர்களும் ஆதாயம் தரும்.   

இந்த விஜய ஆண்டு எதிர்நீச்சல் போட வைப்பதாகவும் பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், நண்பர்கள், உறவினர்களின் உண்மைத்தன்மையை அளக்க உதவுவதாகவும் இறுதியில் விடாமுயற்சியால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

திருவள்ளூருக்கு அருகேயுள்ள காக்களூர் ஆஞ்சநேயரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். சாலையோர, குடிசைப் பகுதியில் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். தடைகள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
« Last Edit: April 07, 2013, 01:29:12 AM by kanmani »

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #1 on: April 07, 2013, 01:06:03 AM »
ரிஷபம்

ரிஷபம்: புதிய பதவி வரும்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். உள்ளார்ந்த அன்புடன் எல்லோரையும் நேசிக்கும் நீங்கள், தவறு செய்தால் தாயாக இருந்தாலும் தட்டிக் கேட்பீர்கள். பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும்.

பிதுர்வழிச் சொத்தை பெறுவதில் இருந்த போராட்டம் விலகும். வாய்தா வாங்கி தள்ளிப்போய் கொண்டிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி  முடிக்கும் அளவிற்கு வருமானம் உயரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகுவும் 6ம் வீட்டில் இருப்பதால் வேற்று மொழிக்காரர்கள் மற்றும் வேற்று மதத்தைச் சார்ந்தவர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசியிலேயே இந்த விஜய வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. சரும நமைச்சல், தேமல், நரம்புச்சுளுக்கு வரக்கூடும். உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. 27.5.2013 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை,  காய்ச்சல், காது வலி வரக்கூடும். எப்பொழுதும் காய்ச்சிய தண்ணீரையே குடிப்பது நல்லது. 28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி வருடம் முடியும் வரை 2ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன் மனைவி  ஒன்று சேர்வீர்கள்.

உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரியநோய் இருப்பதைப் போன்ற பிரமையிலி ருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். படித்தும் பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலையில்லாமல்  திண்டாடினீர்களே! புதுவேலை அமையும்.   திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவ சிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனமறிந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

மகனை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் அவர் ஆசைப்பட்ட  கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அடகிலிருந்த  நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
இந்த ஆண்டு முழுக்க கேது பகவான் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய  தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தி யாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  7.9.2013 முதல் 3.10.2013 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலவீனமடைவதால் சிறுசிறு வாகன விபத்துகள், மனஉளைச்சல், வீண்பழிச் சொல் வந்துநீங்கும். 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலேயே செவ்வாய் நீடிப்பதால் இக்காலக்கட்டத்தில் மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை லென்ஸ் வைத்துப் பார்த்து தப்பு கண்டு பிடிக்காதீர்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு ஏற்படக்கூடும்.

பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கூடாப்பழக்கம் தொற்ற வாய்ப்பிருக்கிறது. உடன்பிறந்தவர்கள் ஆதரிப்பார்கள் என்றாலும் சில நேரங்களில் போட்டி, பொறாமைகள் வரக்கூடும். கர்ப்பிணிப்  பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சொத்து விற்கும்போதும் ஒரே தவணையாக பணத்தை கேட்டு வாங்கப்பாருங்கள். ஏனெனில் சிலர் முன் பணம் தந்துவிட்டு ஆறு அல்லது எட்டு மாதத்திற்குப் பிறகு உங்கள் இடத்தை வாங்கிக் கொள்வதாக இழுத்தடிப்பார்கள்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணைவர் அமைவார்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு.
வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் இனி முரண்டு பிடிக்க மாட்டார்கள். ஆனி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின்  ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டிட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புது  கிளைகள் தொடங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! 28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் வேலைச்சுமை குறையும். உங்களைவிட கல்வித் தகுதியில், வயதில் குறைவானவர்களிடமெல்லாம் அசிங்கப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள். மேலதிகாரியுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக்கூடும். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பட்டிதொட்டியெங்கும் நீங்கள் பரவலாக பேசப்படுவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சல் பெருகும்.  பாதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள். ஊரில் மரியாதை கூடும்.
   
இந்த விஜய ஆண்டு வெற்றிப் பாதையில் விஜயம் செய்ய வைப்பதுடன், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும் வாரித் தருவதாக  அமையும்.

பரிகாரம்:

செங்கல்பட்டு, வேடந்தாங்கலுக்கு அருகேயுள்ள திருமலைவையாவூர் மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை ஏகாதசி திதி அன்று தரிசியுங்கள்.  ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #2 on: April 07, 2013, 01:08:13 AM »

மிதுனம்

மிதுனம்: புது வீடு வாங்குவீர்கள்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான  சுக்கிரன் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். தைரியமாக சில  முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய காலி இடத்தை விற்று புது வீடு,  மனை வாங்க திட்டமிடுவீர்கள். விஐபிகளுக்கு நெருக்கமாவீர்கள். புதுப் பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடனின் உதவியும் கிடைக்கும்.

புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். விலை உயர்ந்த  தங்க நகைகள், ரத்தினங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்களின் நட்பால் உற்சாகமடை வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காமல் அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யப் பாருங்கள்.

28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும்.  பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை களை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்பெக் ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சுவலி வந்து நீங்கும்.  நேரம் கடந்து சாப்பிடுவதையும் வெளி உணவுகளையும் தவிர்க்கப் பாருங்கள். அல்சர் வரக்கூடும். 
சாதாரணமாக பேசப்போய் சண்டையில் முடியும். குடும்பத்திலும் வாக்குவாதங்கள் வந்துபோகும்.

கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது. மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, ஹார்மோன் கோளாறு வந்து செல்லும். ஓய்வெடுக்க முடியா தபடிக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம்விட்டுப் பேசி தீர்க்கப் பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய  முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்.  யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாக  சிக்கிக் கொள்வீர்கள்.

வருடம் முடியும் வரை சனியும் ராகுவும் 5ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவு களை எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை உணர்வீர்கள். அவ்வப்போது அடிவயிறு வலிக்கும். கெட்ட கனவுகள் வந்துபோகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கு டும்பச் சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.  மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண் டாம். சொத்து வரியை தவறாமல் செலுத்தி விடுங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.

உங்களின் சத்ரு, லாப ஸ்தானாதிபதியான செவ்வாய் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் தொடர்வதால் இக் காலக்கட்டத்தில் அலைச்சல், வீண்பழி, தாயாருக்கு மருத்துவச் செலவு வந்துசெல்லும். வீட்டில் குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் அடைப்பு என்று அ டுக்கடுக்காக செலவுகள் வரும். வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண் டாம். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும்.
 
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள்.

மாணவ மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை பேச்சைக் குறைத்து பாடத்திலிருக்கும் சந்தேகத்தை  தயக்கமின்றி ஆசிரியரிடம் கேளுங்கள். கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்காமல் முதல் வரிசையில் வந்து அமருங்கள். விளையாடும்போது சிறுசிறு  காயங்கள் ஏற்படும். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களின் நட்பைத் தவிர்க்கவும்.

வியாபாரிகளே! சித்திரை, ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுக்க கேது லாப வீட்டில் நிற்பதால் அனுபவ அறிவை பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஆனாலும் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப் பாருங்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். கடையை வேறு வசதி யான இடத்திற்கு இனி மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களும் வர வாய்ப்பிருக்கிறது. ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி-இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள்.

உத்தியோகஸ்தர்களே!  அடிக்கடி  விடுப்பில் செல்லாதீர்கள். நீங்கள் விடுப்பில் இருக்கும் நாட்களில் அலுவலகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். சில நாட்களில் சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களின் குறைகளை அதிகாரியிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் திறமையை மூத்த அதிகாரி  குறைத்து மதிப்பிடுவார். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட  ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, கார்த்திகை மாதத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் உண்டு.
 
அரசியல்வாதிகளே! பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சகாக்களிடம் கவனமாகப் பழகுங்கள். பதவி உண்டு. தலைமையின் ஆதரவு உண்டு.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வீண் வதந்திகளும் கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும்.

விவசாயிகளே! அரசாங்கத்தால் சில சலுகைகள் கிடைக்கும். வீட்டில் தள்ளிப்போன விசேஷங்கள் இந்த ஆண்டு நடந்தேறும். இரவு நேரத்தில் வயலுக்கு  செல்லும்போது கைவிளக்குடன் செல்லுங்கள். பாம்பு குறுக்கிட வாய்ப்பிருக்கிறது.   

இந்தப் புத்தாண்டு பொருளாதார வகையில் உங்களை பின்தங்க வைத்தாலும் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்கும்.

பரிகாரம்:

நெல்லை மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி தலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கையை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #3 on: April 07, 2013, 01:09:26 AM »

கடகம்

கடகம்: குடும்பத்தில் குதூகலம்  பிறக்கும்

வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மாறாதவர்கள். பதவி, பணத்திற்கு வளைந்து கொடுக்காத நீங்கள்,  பந்த பாசத்திற்கு அடிமையாவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப் பதால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். விஐபிகள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவீர்கள். பதவிகள் தேடி வரும். சுருங்கிய முகம் மலரும்.  உடல் நிலை சீராகும். சுக்கிரனும் சூரியனும் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் தொடங்குவதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.  வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். குருவும் சந்திரனும் லாப வீட்டில் நிற்கும்போது இந்த விஜய வருடம் பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவு களை எடுப்பீர்கள். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை  மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். உடன் பிறந்த வர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதாக  வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பரின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.

மகனின் கூடாப்பழக்கம் விலகும். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் 27.5.2013 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பாட்டன் சொத்துக்கள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 12ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

பைனான்ஸ் தொழில்  செய்பவர்கள் தகுந்த பத்திரம், ஆவணம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர் களை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது  நல்லது. தந்தையாருக்கு நெஞ்சு வலி, அசதி, சோர்வு வந்து போகும். அவருடன் அவ்வப்போது மனத்தாங்கல் வரும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். இந்த ஆண்டு முழுக்க சனியும் ராகுவும் 4ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும்.

மனை வாங்கும்போது வில்லங்க சான்றிதழ், தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும் போதும் சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிக ழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு  மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.
இந்த ஆண்டு முழுக்க கேதுவும் 10ம் வீட்டிலேயே தொடர்வதால் சிறுசிறு அவமானம், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் தொடர்வது உங்களுக்கு பெரிய பலமாகும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படுவீர்கள். சிலர் தனிக்குடித்தனம் செல்வீர்கள். வீடு, மனை சேரும். பணத்தட்டுப்பாடும் வந்து நீங்கும்.  இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கெட்ட  நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.   

மாணவ மாணவிகளே! விளையாட்டுத்தனம் வேண்டாம். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். விரும்பிய  கோர்ஸில் சேருவீர்கள். 

வியாபாரிகளே! சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பற்று வரவு உயரும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி கடன் தர வேண்டாம். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும்போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப்  பாருங்கள். துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். என்றாலும் கேது 10ம் வீட்டில் தொடர்வதால் உத்தியோகத்தில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு பயம் இருக்கும். அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். காணாமல்போக வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும்.  வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம் கூடும். மார்கழி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வரும்.     

கலைத்துறையினரே! விருதுக்கு உங்கள் பெயர் தேர்ந்தெடுக்கப்படும். உங்களின் கற்பனை விரியும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளே! வெறும் பேட்டி, வெத்துப் பேச்சை எல்லாம் தவிர்த்து விட்டு தொகுதி மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகேட்டு உதவப் பாருங் கள். மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் உட்கட்சி பூசல் வெடிக்கும்.

விவசாயிகளே! நெல், உளுந்து, வேர்க்கடலை பயிர்கள் பூச்சித் தொல்லையால் கொஞ்சம் பாதிக்கும். கரும்பு, வாழை ஆதாயம் தரும். தேக்கு, தென்னை மரங்களும் லாபம் தரும்.

இந்த விஜய வருடம் வளைந்து கொடுத்துப் போவதாலும் கடின உழைப்பு மற்றும் தொலை நோக்குச் சிந்தனையாலும் வெற்றியை தரும்.

பரிகாரம்:

விழுப்புரத்திற்கு அருகேயுள்ள மயிலம் முருகனை சஷ்டி திதியன்று தரிசியுங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #4 on: April 07, 2013, 01:10:43 AM »

சிம்மம்

சிம்மம்: பாராட்டுகள் குவியும்

மற்றவர்களின் மனோநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுப்பீர் கள். மனதில் உதித்ததை மறைக்காமல் பேசுவதால் நண்பர்கள் உங்களுக்கு அதிகமில்லை. புதன் 8ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த  ஆண்டு பிறப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து பேசும் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும். அயல்நாடு செல்ல  விசா கிடைக்கும். உதாசீனப்படுத்திய உறவினர், நண்பர்கள் இனி உங்களை புரிந்துகொண்டு விரும்பி வந்து பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு  புதுத் தீர்வு காண்பீர்கள். சில இடங்களில் வளைந்து கொடுத்தும், சில நேரங்களில் மௌனமாக இருந்தும் சாதித்துக் காட்டுவீர்கள்.

உங்கள் ராசிக்கு  3ம் வீட்டில் சனியும் ராகுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். உங்களின்  இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள்மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் ஆட்சி  பெற்றிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியில் நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.  உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள்,  வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும்.

கடன்காரர்களை கண்டு அஞ்சினீர்களே! இனி  கவலை வேண்டாம். வட்டியுடன் அசலையும் கொடுக்கும் அளவிற்கு குடும்ப வருமானம் உயரும். இளைய சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப் பார்கள்.  வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். இந்த விஜய ஆண்டு உங்களது 10வது ராசியில் பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள்  உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல  சம்பளத்துடன் புது உத்தியோகம் அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.   

27.5.2013 வரை குருபகவான் 10ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ,  வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்துசெல்லும். உங்கள்மீது  சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.  28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

மகளின் கல்யாணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். மகனுக்கு இருந்த அலட்சியம், கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். வீண்பழி, வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும்.  ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்களெல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள்  வெற்றியடையும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடிவரும். ஐப்பசி மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து பலவீனமடைவதால் விபத்து, ஏமாற்றம், மனஇறுக்கம், உடல் நலக்குறைவு வந்துபோகும். பணப்பற்றாக்குறையும் ஏற்படும்.

இக்காலக்கட்டத்தில் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வருடம் முழுக்க கேதுபகவான் ராசிக்கு 9ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். பிதுர்வழிச் சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு வீண் டென்ஷன், கணுக்கால், முழங்கால் வலி வந்து செல்லும். தந்தைவழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கன்னிப் பெண்களே! போலியாக பேசுபவர்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்புகளும் உண்டு. திருமண முயற்சி கூடிவரும்.   

மாணவ மாணவியர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கவிதை, கட்டுரைப்  போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பள்ளி மாற வேண்டி இருக்கும்.

வியாபாரிகளே! தொட்டது துலங்காமல் நஷ்டப்பட்டீர்களே! பாக்கியை வசூலிப்பதும் போராட்டமாக இருந்ததே! வேலையாட்கள் சரியாக அமையாமல் அவஸ்தைப்பட்டீர்களே! இந்த வருடத்தில் அந்த நிலை எல்லாம் மாறும். வணிகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் கடையை நவீனமயமாக்குவீர்கள். லாபமும் கூடும். ஹார்ட்வேர், ஹோட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.   

உத்தியோகஸ்தர்களே! அடிக்கடி இடமாற்றத்தால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சூழ்ச்சியாலும் மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே!  இனி உங்கள் கை ஓங்கும். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். வேறுசில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். 

கலைத்துறையினரே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விருது கிடைக்கும். 

அரசியல்வாதிகளே! நகைச்சுவையாகவும் நாசூக்காகவும் பேசி மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செல் வாக்கு கூடும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைக்கு தீர்வு கிடைக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனின் உதவி  கிட்டும். உளுந்து, வேர்க்கடலை, சவுக்கு வகைகளால் லாபமடைவீர்கள்.   
 
இந்த விஜய வருடம் விழுந்து கிடந்த உங்களை தலை நிமிரச் செய்வதுடன், புதிய பதவியாலும் பணவரவாலும் சமூகத்தில் புது கௌரவத்தை பெற் றுத் தரும்.

பரிகாரம்:

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையிலுள்ள பழையசீவரம் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்று தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு காலணியும்  குடையும் வாங்கிக் கொடுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #5 on: April 07, 2013, 01:12:04 AM »
கன்னி

கன்னி: சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! உங்கள் ராசிக்கு  9ம் வீட்டில் இந்த விஜய வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். அடுக்க டுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். 

27.5.2013 வரை சுக, சப்தமாதிபதியான குருபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப  நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை வேலை என்றிருந்தீர்களே! இனி  குடும்பத்திற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று  குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களை எடுத்து நடத்துவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும்.

பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும் விமர்சனங்களும்  வீண்பழியும் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு  காசோலை தரவும். மனைவியின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். தாயாருக்கு கை, கால் வலி, சிறு அறுவை சிகிச்சைகள்  வந்து செல்லும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். முக்கிய கிரகங்கள் 8ம் வீட்டில் மறைந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் வந்து நீங்கும்.

எதிர்காலம் குறித்த கவலைகளும் பயமும் வந்துசெல்லும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் வரும். வாகனத்தை இயக்கும்போது கவனத்தை சிதறவிடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்தப்பிரச்னையாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு கோர்ட், கேஸ் என்று போகாமல் பேசியே சுமுகமாக முடிக்கப் பாருங்கள். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். சகோதர, சகோதரிகள் கோபப்படுவார்கள். அன்பால் வசப்படுத்துங்கள். இந்தாண்டு முழுக்க பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமே என இப்போது நினைப்பீர்கள்.

முரட்டுத்தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பல் ஈறு வலிக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். இந்தாண்டு முழுக்க ராகு 2ம் வீட்டிலும் கேது 8ம் வீட்டிலும் தொடர்வதால் கடுகடுப்பாகப் பேசாதீர்கள். சில சமயங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப்போய் அது விபரீதமாக முடியும். எந்தவொரு விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

நீங்களே நேரடியாகச்  சென்று முடிப்பது நல்லது. இரவு நேரத்தில் தொலை தூரப் பயணத்தில் வாகனத்தை இயக்க வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். கண் பார்வையை  பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்களும் தோல்வி மனப்பான்மையும் தலைதூக்கும். அநாவசியமாக அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வறட்டு கௌரவத்திற்கும் போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால் இக்காலகட்டத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் நலக்குறைவு வந்துநீங்கும். சகோதர வகையிலும் சங்கடங்கள் வரும். வேனல் கட்டி, பைல்ஸ் வந்து நீங்கும்.         
                 
கன்னிப் பெண்களே! கனவுத் தொல்லை, முகப்பரு, தலைமுடி உதிர்தல் வந்து செல்லும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் பெற்றோரை கலந்தாலோசிப்பது நல்லது. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.   

மாணவ மாணவியர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். அன்றன்றைய  பாடங்களை அன்றே படியுங்கள். விரும்பிய கோர்ஸில் போராடிச் சேர்வீர்கள்.

வியாபாரிகளே! போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெளிநாட்டு நிறுவனம், புகழ் பெற்ற நிறுவனம் என்று விளம்பரங் களை நம்பி தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாகச் சுட்டிக் காட்டி திருத்துங்கள். வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பங்குதாரர் விலகுவார். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.   
   
உத்தியோகஸ்தர்களே! 28.5.2013 முதல் குரு 10ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப் பார். அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல் லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழி யர்களுடன் அளவாகப் பழகுங்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. உங்களின் உரிமையையும் சலுகையையும் தக்க வைத்துக் கொள்ள வழக்குத் தொடுக்க வேண்டி வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். 

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். வெளியாகாமல்  இருக்கும் படம் ரிலீசாகும்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. ஜெயிக்கும் அணியில் இடம் பிடிப்பீர்கள். தலைமையைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள்.

விவசாயிகளே! குறுகியகாலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் அனுசரித்துப் போங்கள். எலி, பூச்சித் தொல்லை வந்து நீங் கும். வாழை, மக்காச்சோளம், மா, பலா வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

இந்த விஜய ஆண்டு பிரச்னைகளை தந்து பெரிய மனிதராக்குவதுடன் ஓரளவு பணவரவையும் நிம்மதியையும் தரக்கூடியதாக அமையும்.

பரிகாரம்:

வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசிபைரவரை தரிசித்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு மோர், பானகம் என  ஏதாவது கொடுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #6 on: April 07, 2013, 01:13:10 AM »
துலாம்

துலாம்: திறமைகள் வெளிப்படும்

கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவர்கள். ஒற்றுமை உணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள். உங்களின் ராசிநாதனான சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள்  யாவும் தடையின்றி முடியும். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். அழகு, இளமை கூடும். புதுத் தெம்பு  பிறக்கும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வீடு  கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்தின் பங்கைக் கேட்டு வாங்கு வீர்கள். மனைவி நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த பொருளை வாங்கித் தருவீர்கள். இந்த விஜய வருடம் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்கு பின்புதான் முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்து கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். இரண்டாம் முயற்சியில் சில  வேலைகள் முடியும். வீட்டில் குடிநீர்க் குழாய், கழிவு நீர்க்குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துசெல்லும்.

உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் முக்கிய கிரகங்கள் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் பலம், பலவீனம றிந்து செயல்படப் பாருங்கள். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மனைவியுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்து செல்லும். அரசுக் காரியங்கள் தாம தமாக முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துபோகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். உடன் பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சொத்து வாங்கும்போது பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ்கள் எல்லாம் சரியாக  இருக்கிறதா என்று பார்த்து வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது.

27.5.2013 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை, சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின்  நட்பை இழக்க நேரிடும். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசமுடியாத நிலையும் வந்துபோகும். 28.5.2013 முதல் உங்களின் பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு  கிடைக்கும்.

பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 21.5.2013 முதல் 6.7.2013 வரை செவ்வாய் உங்கள்  ராசிக்கு 8ம் இடத்திலும் மற்றும் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை 12ம் வீட்டில் மறைவதாலும் இக்காலகட்டத்தில் சிறுசிறு விபத்துகள், பொருள்  இழப்பு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும். முன் கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுக்க உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சிலர் புதுமனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனி தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும்.

வாயுப் பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த வருடம் முடியும் வரை உங்களின் ராசிக்குள்ளேயே ராகுவும் 7ம் வீட்டில் கேதுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்துசெல்லும். இரும்பு, நார், சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவரு டன் மோதல்கள் வந்துபோகும். மனைவிவழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். முக்கிய விஷயங்களை நீங் களே நேரடியாகச் சென்று செய்வது நல்லது. 
 
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுக மாகும் நபர்களிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.   

மாணவ மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்று வார்கள். கவிதை, கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். 

வியாபாரிகளே! குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும்.  புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பங்கு தாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் அயல்நாட்டுத் தொடர்பு டைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது. கொடுக்கல் வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.   

உத்தியோகஸ்தர்களே! 10.7.2013 முதல் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வ ரும். உங்கள்மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு  பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

விவசாயிகளே! அதிக விளைச்சல் இருக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்க்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து  வகைகளால் லாபமடைவீர்கள்.   
 
இந்த விஜய வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் முணுமுணுக்க வைத்தாலும் மையப்பகுதி முதல் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருச்செங்கோடு தலத்தில் அருளும் அர்த்தநாரீஸ்வரரை தரிசியுங்கள். ஏழை மாணவர்களின் படிப்புக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #7 on: April 07, 2013, 01:14:19 AM »

விருச்சிகம்

விருச்சிகம்: சத்தமில்லாமல் சாதிப்பீர்கள்

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்தக் காலம், பொங்கி எழுந்தால்தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை அறிந்தவர்கள்  நீங்கள். தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கும் நேரத் தில் இந்த விஜய வருடம் பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வரும். மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த  ஆண்டு பிறப்பதால் அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

உங்களின் ஜீவனாதிபதியான சூரியன் வலுவாக 6ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாக சாதிப்பீர்கள்.  மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். பேச்சில் முதிர்ச்சி வெளிப் படும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு  கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். சொந்தவீடு வாங்குவீர்கள். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். சகோதரர்  ஆதரவாக இருப்பார்.

என்றாலும் வருடம் பிறக்கும்போது சுக்கிரனும் உங்கள் ராசிக்கு 6ல் மறைந்து கிடப்பதால் வாகன விபத்துகள், பணப்பற்றாக்குறை, தொண்டை புகைச்சல், கழுத்து வலி, மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து போகும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். மனைவிவழி உறவினருடன் மனக்கசப்பு வரும். ஆனால், உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில்  இந்த ஆண்டு பிறப்பதால் குடும்ப ஒற்றுமை பாதிக்காது. 27.5.2013 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவான் 7வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும் நண்பர்கள்,  உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை சொல்லி சொந்த பந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும்.  குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கு வீர்கள். ஆனால் 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலை கள், ஒருவித பய உணர்வுகள் வந்துசெல்லும். உங்களை சிலர் விமர்சிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். 

அவர்களிடம் கனிவாக நடத்து கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாக பராம ரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். வாயுத் தொந்தர வால் நெஞ்சுவலி வரக்கூடும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். இந்த ஆண்டு முழுக்க சனி 12ல் மறைந்து விரையச் சனியாக தொடர்வதாலும் ராகுவும் 12ம் வீட்டில் நிற்பதாலும் வீண்பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.

அவருக்கு முதுகுத் தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்துசெல்லும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதம் வெடிக்கும்.  சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். கேது இந்த ஆண்டு முழுக்க 6ம் வீட்டிலேயே தொடர்வதால் விஐபிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். வெளி மாநில புண்ணிய தலங்களுக்கும் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், வேற்று மொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. சித்தர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். போராடி நல்ல வேலையில் அமர்வீர்கள்.

மாணவ மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும்.

வியாபாரிகளே! புது ஏஜென்சி எடுப்பீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரச னைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர் கள். ஆவணி மாதத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மார்கழி, தை மாதங்களில் புதுக்கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை  விட வேண்டாம். பெரிய அளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். புரோக்கரேஜ், சினிமா, சிமென்ட், பெட்ரோ-கெமிக்கல், மருந்து, மர வகைகளால்  ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரிகளிடம் பக்குவமாக பேசி சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களைப்பற்றி அவதூறான கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக்கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் புது அதிகாரியின் ஒத்துழைப்பால் நெருக்கடிகளை முறியடிப்பீர்கள். என்றாலும் சித்திரை, வைகாசி, ஆவணி, தை மாதங்களில் அதிரடி முன் னேற்றங்கள் உண்டு. அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். பெரிய பொறுப்புகள் தேடிவரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் மனஉளைச்சலை  ஏற்படுத்துவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.

கலைத்துறையினரே! தெலுங்கு, ஹிந்தி மொழிக்காரர்கள் உதவுவார்கள். ஒருபுறம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். மற்றொரு புறம் உங்களின் திற மையால் சாதித்துக் காட்டுவீர்கள். 

அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க  வைக்கும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண்டாம். பூச்சித் தொல்லை குறையும். பம்பு செட் அவ்வப் போது பழுதாகும். கரும்பு, சவுக்கு, தேக்கு, கொள்ளு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

இந்த விஜய ஆண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதன் மூலம் முன்னேற வைப்பதுடன் வருங்காலத் திட்டங்களில் ஒன்றிரண்டை நிறை வேற வைப்பதாகவும் அமையும். 

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #8 on: April 07, 2013, 01:15:30 AM »
தனுசு

தனுசு: கடன் பிரச்னை தீரும்

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், தராதரம் அறிந்து  பழகுவீர்கள். உங்களின் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் 5ல் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால் உங்களை தலைநிமிர  வைக்கும். செயலில் வேகம் கூடும். கொஞ்சம் வளைந்து கொடுத்தால் வானம்போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். வருமானம் உயரும். பிரபலங் களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும். பாதியில் நின்ற  வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள்.

அனுபவப் பூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை கு றைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்னைகள்  ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சூரியன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துபோகும். படிப்பின் பொருட்டு அவர்களை கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும் மனக்கசப்பும் வந்துபோகும். வழக்கில் வழக்கறிஞரை மாற் றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிநாதனான குருபகவான் 27.5.2013 வரை 6ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசி தீர்க்கப் பாருங்கள். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டை சரியாக பூட்டிக் கொண்டு செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தரவும் வேண்டாம், வாங்கவும்  வேண்டாம்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித்தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக்  காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு பகவான் 7ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் காரண காரியம் இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டீர்களே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த வர்கள் ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.

சதாசர்வ காலமும் மருந்து மாத்திரை என்றிருந்த உங்கள்  மனைவியின் நோய்கள் குணமடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியில் ஒரு கிரவுண்டு வீட்டு மனையாவது வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.  தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தங்கள் தவறை உணர்ந்து வலிய வந்து உறவாடுவார்கள். 19.8.2013 முதல் 10.10.2013 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் பலவீனமடைவதால் இக்காலக்கட்டத்தில் பிள்ளைகளால் அலைச்சலும் பண விஷயத்தில் ஏமாற்றங்களும் வந்து நீங்கும்.

உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது. சொத்துப் பிரச்னைக்கு சுமுக மான தீர்வு காண்பது நல்லது. என்றாலும் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் 10ம் வீட்டிலேயே நிற்பதால் பூமி, மனையால் லாபம் உண்டு. இந்த ஆண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலேயே நீடிப்பதால் சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். கனவுத் தொல்லையும் அதிகரிக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்திற்காக சிலரின் சிபாரிசை
நாடுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். ஆரோக்கியம் சீராகும். தள்ளிப்போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். 
 
மாணவ மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத் திறன் வளரும். அரசுத் தேர்வில் மதிப்பெண் கூடும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்வீர்கள். சில நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தழைக்கும். வைகாசி, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். விசுவாசமாக நடந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்ட்வேர், ஹோட்டல், ஸ்பெகுலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! சோர்வு, களைப்பு நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அலுவலகத்தை நவீன மயமாக்குவீர்கள். உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். பேச்சில் மட்டும் கடுமை காட்டுவதை தவிர்த்து விடுங்கள்.   

கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். அரசாங்கத்தால் சில சலுகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! போராட்டம், உண்ணாவிரதத்தை எல்லாம் சிறப்பாக நடத்தி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கட்சி மேலிடம் உங்கள் ஆதரவாளர்களை முக்கிய பதவியில் அமர வைக்கும். தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். 

விவசாயிகளே! மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். புதிதாக நிலம் வாங்குவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். காய் கறி, பயிறு வகைகளால்  ஆதாயம் அடைவார்கள். இயற்கை விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தாண்டு ஏமாற்றம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் நீண்ட கால கனவுகளை நனவாக்கி அடுத்தடுத்து சாதிக்கத்தூண்டுவதாக அமையும்.

பரிகாரம்:

தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி எனும் தலத்தில் அருளும் வேதபுரீஸ்வரரை தரிசியுங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #9 on: April 07, 2013, 01:25:59 AM »

மகரம்

மகரம்: திட்டங்கள் நிறைவேறும்

பூவைப்போல் புன்சிரிப்பும் மெல்லிய மனதும் கொண்ட நீங்கள் சில நேரங்களில் புயலாக சீறிப் பாய்ந்து புரட்சி செய்வீர்கள். உங்களின் பிரபல யோகா திபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விஜய ஆண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வசதியும் கூடும். புதிய  சிந்தனைகள்
உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.  கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டிற்குத் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. உங்களை சுற்றியி ருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள். கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர்  பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். 

27.5.2013 வரை உங்களின் சேவகாதிபதியும் விரயாதிபதியுமான குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு கூடும். கல்வி யாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை சிறப்பாக  நடத்துவீர்கள். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர் கள். வாகன வசதிகள் பெருகும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். ஆனால், 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு 6ம் வீட்டில் மறைவ தால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் அலைச்சலும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும்.

குடும்பத்தில் சாதாரண பிரச்னையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். ஒருவருக்கொ ருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை தவறான பாதைக்குத் தூண்டுவார்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதா ரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப் பாருங்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள்  அதிகரிக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சிலர் உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். விலை  உயர்ந்த ஆபரணங்கள், பணத்தை கவனக் குறைவால் இழக்க நேரிடும். விஐபிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.   
     
உங்களின் ராசிநாதனான சனிபகவான் இந்த விஜய வருடம் முழுக்க 10ம் வீட்டிலேயே உச்சம் பெற்றுத் தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல்  வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு  வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம் இருக்கும். மேலதிகாரி  உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுவார். மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்பட வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க ராகுபகவான் 10ம் வீட்டிலும் கேது ராசிக்கு 5ம் வீட்டிலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவெடுப்பதில் தடுமாற்றமும் வந்து செல்லும்.

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண் டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்தைப் பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும். யாருக்காகவும்  ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். முன்பின் தெரியாதவர்கள் யாரேனும் உங்களுக்கு உதவுவதாக முன்வந்தால் உடனே நம்பி ஏமாற வேண் டாம். நயமாகப் பேசுகிறார்கள் என்று குடும்ப அந்தரங்க விஷயங்கள், சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆனால் புகழ்பெற்ற  புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் பிறக்கும். 

செவ்வாய் பகவான் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்கால கட்டத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படும்.  வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். அவருடன் கருத்து மோதல்களும் வந்து  செல்லும். உடன்பிறந்தவர்கள் அவ்வப்போது கோபப்பட்டாலும் பாசம் குறையாது. பிதுர்வழி சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். ஒரு சொத்தை விற்று  மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்தவரையே மணம் முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள்  நண்பர்களாக அறிமுகமாவார்கள்.
   
மாணவ மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் போராடிச்சேர்வீர்கள். சிலர் நன்கொடை கொடுத்து சேரும் சூழ்நிலை வரும். சிலர் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் தங்கி படிக்க வேண்டியது வரும். 

வியாபாரிகளே! லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிவீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சித்திரை மற்றும் வைகாசி  மாதத்தின் முற்பகுதி வரை பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். ஆனி மாதத்தில் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும்.
 
உத்தியோகஸ்தர்களே! நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும் மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலையைப்  பார்க்க வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு படித்துப் பாருங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது  வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளை  போராடிப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால் வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத் தால் ஆதாயம் உண்டு. 

அரசியல்வாதிகளே! சபை நாகரீகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை அடக்கி வாசிக்கச்  சொல்லுங்கள்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற கொஞ்சம் செலவு செய்ய வேண்டி வரும். வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் கோர்ட்டு, கேஸ்  என்று போகாமல் சுமுகமாக பேசி தீர்க்கப் பாருங்கள். எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள்.

இந்த விஜய வருடம் அவ்வப்போது உங்களை அலைகழித்தாலும் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை ஏகாதசி திதியன்று சென்று தரிசித்துவிட்டு வாருங்கள். நீங்கள் ஆரம்பக் கல்வி படித்த பள்ளிக் கூடத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #10 on: April 07, 2013, 01:27:10 AM »
கும்பம்

கும்பம்: பண வரவு அதிகரிக்கும்

நியாயமாக தனக்குக் கிடைக்க வேண்டியதைக் கூட சில நேரங்களில் விட்டுக் கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின் மீது அதிகமாக பாசம் வைப்பீர்கள்.  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தவர்களே! செவ்வாய் 3ம் வீட்டில் வலுவாக ஆட்சிபெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத் தாண்டு பிறப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில்  வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர் கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ரத்த சொந்தங்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.   

உங்களின் சப்தாமதிபதியான சூரியன் வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த விஜய வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப் பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். 27.5.2013 வரை உங்களின் தன, லாபாதிபதியான குருபகவான் ராசிக்கு 4ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல்  அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்துபோகும். தாய்வழி சொத்துப் பிரச்னையில் கோர்ட்டு, கேஸ் என்று போகாமல் சுமுகமாக பேசித் தீர்க்கப் பாருங்கள்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். யாருக்காகவும்  சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 5ம் வீட்டிற்கு  குரு செல்வதால் அதுமுதல் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிக ளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம்  கிடைக்கும். மகளுக்கு தள்ளிப்போய் கொண்டிருந்த திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்த நிறுவனத் தில் அமையும்.

குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் மரியாதை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். எப்போதும் மருந்து மாத்திரை என்றிருந்த தாய் குணமடைவார். உங்கள் ராசிநாதன் சனிபகவான் இந்த ஆண்டு முழுக்க உச்சம் பெற்று 9ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான் மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். இந்தாண்டு முழுக்க ராகுவும் 9ம் வீட்டிலேயே நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். தந்தையாருக்கு நெஞ்சுவலி, சர்க்கரை நோய், கை, கால்வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கல் வரும்.

வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தால் சில நல்ல நட்பை இழந்து விடாதீர்கள். இந்த ஆண்டு முழுக்க கேது பகவான் 3ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோபலம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண்விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக  நினைத்துக் கொண்டு உங்களோடு கருத்து மோதல்களுடன் இருந்து வந்த பழைய நண்பர் இப்போது வலிய வந்து பேசுவார். உங்களைச் சுற்றியிருப்ப வர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.         

செவ்வாய் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை 8ம் வீட்டிலேயே தொடர்வதால் இக்காலகட்டத்தில் நெருப்பு, மின்சார சாதனங்களை கவனமாகக்  கையாளுங்கள். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும்போது தாய் பத்தி ரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களுடன் பிணக்குகள் வரும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. வேலைச் சுமை அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நல்ல வரன் அமையும். விடுபட்ட பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.  வேலை கிடைக்கும்.                         

மாணவ மாணவிகளே! நினைவாற்றல் பெருகும். போட்டி, பொறாமைகளுடன் பழகிய சக மாணவர்கள் திருந்துவார்கள். உங்களுடைய தனித்திறமை களை அதிகரித்துக் கொள்வீர்கள். விளையாட்டு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.   

வியாபாரிகளே! தொழிலில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூடுதல் லாபம் கிடைக்கும். அனுபவமிக்க பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். ஆவணி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புதிய பங்குதாரர்கள் அமைவார்கள். பழைய சரக்குகளை அசல்  விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். விஐபிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.

உத்தியோகஸ்தர்களே! வழக்கில் வெற்றி பெற்று பெரிய பதவியில் அமர்வீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மூத்த  அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆடி மாதங் களில் சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை,  மார்கழி மாதங்களில் சம்பளம் உயரும். புது பொறுப்புகளும் சலுகைகளும் கிடைக்கும். உங்கள் அலுவலகம் நவீனமாகும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு மதிப்பு, மரியாதை கூடும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின்  நம்பிக்கையை பெறுவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்க கடன் உதவிகள் கிடைக்கும். பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரைக் காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

தொட்ட காரியங்கள் துலங்குவதுடன், சாதித்துக் காட்டும் வருடமாக இந்த விஜய வருடம் உங்களுக்கு அமையும்.

பரிகாரம்:

சென்னை - மாமல்லபுரம் பாதையிலுள்ள திருவிடந்தை லட்சுமி வராகப் பெருமாளை சனிக்கிழமையன்றோ அல்லது திருவோண நட்சத்திரத்தன்றோ  தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

Offline kanmani

Re: விஜய வருட பொது பலன்கள்
« Reply #11 on: April 07, 2013, 01:27:45 AM »
மீனம்

மீனம்: உதவிகள் கிடைக்கும்

மென்மையும் விட்டுக் கொடுக்கும் மனமும் எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக் கூடியவர்கள்.  ஆழமாகவும் அகலமாகவும் யோசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது இந்த விஜய வருடம் பிறப்பதால் இடைவி டாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும் சமயோஜிதமாகவும் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில்  பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். குடும்பத்தில் சுப  நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

உங்களின் சுக, சப்தமாதிபதியான புதன் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கணவன்-மனைவிக்குள்  மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள்  செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்மாமன், அத்தை வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிநாதனான குருபகவான் 27.5.2013 வரை 3ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க  வேண்டி வரும்.

உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரை கடிந்து கொள்வீர்கள்.  சரும நமைச்சல், நரம்பு சுளுக்கு, யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில்  அமர்வதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரிடம் கோபப்படாதீர்கள். அவருக்கு ரத்த அழுத் தம், செரிமானக் கோளாறு, கை, கால்வலி வந்துபோகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். 

தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழிச் சொத்தை போராடிப் பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினா லும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்து சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. சொத்து வாங்கும்போது பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். அசிடிட்டி, வாயுக் கோளாறு வந்துபோகும். இந்த ஆண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 2ல் தொடர்வதாலும் 8ல் ராகு நீடிப்பதாலும் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம்.

எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள். சாதார ணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் காதுவலி வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்ஸ்யூரன்சை குறிப்பிட்ட காலத் திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
 
இந்தாண்டு முழுக்க சனியும் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துபோகும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். நெடுநாட்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். வெளி உணவுகள், லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. இயற்கை உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பணம், நகை களவுபோக வாய்ப்பிருக்கிறது. எனவே, குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டுச் செல்வது நல்லது. கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். 

கன்னிப் பெண்களே! காதலை தள்ளி வையுங்கள். சிலரின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைகளை அலட்சியப் படுத்தாதீர்கள். தடைப்பட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும்.

மாணவ மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பள்ளிமாற வேண்டிய நிர்ப்பந்தம்  உண்டாகும்.
         
வியாபாரிகளே! இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள். போட்டிகளை முறியடிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும். சிலர் தன் பங்கைக் கேட்டு வழக்கு தொடுப்பார்கள். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை தொழிலில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். அவ்வப்போது சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஆவணி, மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று வரவு உயரும். 

உத்தியோகஸ்தர்களே! ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில்  முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி தவறான வழிகளை கையாண்டாலும் நீங்கள் நேர்ப் பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். வைகாசி, ஆவணி, மார்கழி, தை மாதங்களில் சம்பளம் கூடும். புது  பொறுப்புகள் வரும். புது வேலையும் அமையும். 

அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை விமர்சித்துப் பேச வேண்டாம். வறட்டு கௌரவத்திற்காக சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். விளைச்சலை பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து கண்ட கண்ட உரங்களை பயன்படுத்த வேண்டாம். நெல், கடலை, உளுந்து, கீரை வகைகளால் ஓரளவு ஆதாயமடைவீர்கள்.
தைரியத்தாலும், விருப்பு, வெறுப்பற்ற நடுநிலை முடிவுகளாலும் தர்மசங்கடமான நிலைகளை சமாளித்து முன்னேறும் வருடமிது.

பரிகாரம்:

கோவில்பட்டி, விளாத்திக்குளத்திற்கு அருகேயுள்ள ஜமீன் கரிசல்குளத்தில் அருள்பாலிக்கும் பகளாமுகி தேவியை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த  பிள்ளைகளுக்கு இயன்ற அளவு உதவுங்கள்.