விருச்சிகம்
குடும்ப ஒற்றுமை மேம்படும்
உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடையத் துடிப்பீர்கள். தைரியத்தை வழங்குபவன் என்றழைக்கப்படும் பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர் நீங்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மிதுனத்தில் பெயர்ச்சியாகி அனுகூலக் குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைப்பார். ஏழரைச் சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவற்றை தருவார். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும்.
குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். இந்த சமயத்தில் பேச்சுதான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். பிள்ளைகள் படிப்பில் தேர்ச்சி பெறுவர்.
உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் எச்சரிக்கையோடு இருங்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சியை பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் தி ருமணம், படிப்புச் செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவத்தையும் நன்மையையும் பெற்றுத் தரும்.
தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள்.
தொழிலதிபர்கள் உற்பத்தி பொருட் களின் இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழு த்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்கு பிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். உ த்யோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப் பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருளை கொடுக்கவும், வாங்கவும் கூடாது. கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதிற்கு ஆறுதல் தரும். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனையைக் காண்பர். நடைமுறைச் செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கத் தையும் வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும்.
சாகச விளையாட்டுகளில் ஈடு படக் கூடாது. மாணவர்கள் திட்டமிட்டு படிப்பதன் மூலம் வெற்றிகளைக் குவிக்க முடியும். அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்கலாம். ஆதரவாளர்கள் உங்களை வி ட்டு விலகிச் செல்லலாம். அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால்தான், அரசுத் தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்துவது நல்லது. விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.
பரிகாரம்:
செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுங்கள். இலுப்பை எண் ணெயில் வீட்டில் விளக்கு ஏற்றவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
தினசரி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்:
செவ்வாய்தோறும் செவ்வரளி மாலையை அம்மனுக்கு சாத்தி வணங்குங்கள்.