Author Topic: குரு பெயர்ச்சி பலன்கள் -2013  (Read 3962 times)

Offline kanmani

மேஷம்

 வசதியும் வளமும் அதிகரிக்கும்

தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வதோடு சேர்ந்த லட்சிய நோக்கோடு தக்க விதத்தில் செயலாற்றி, வாழ்க்கையில் சாதனைகள் புரிவீர்கள். இதுவரை  உங்கள்  ராசிக்கு பாக்ய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய  வீர்ய  ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். மூன்றாம் இடத்திலிருந்து உங்களுடைய களத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவற்றைப்  பார்க்கிறார்.  இதே வேளையில் கேது ராசியிலும் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள்.

குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான ரிஷபத்திலிருந்து பல்வேறு நன்மைகளை தந்தார். இந்த நிலையில் 3ம் இடமான மிதுனத்திற்குச்   செல்கிறார். அவரால் முன்புபோல் நற்பலன்களை தர முடியாது. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும்போது குரு குடும்பத்தில் பல்வேறு பிரச்னையை   உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் ஏற்படும். தீயோர் சேர்க்கையால் அவதிகள் உருவாகலாம். இதைக்கண்டு அஞ்ச வேண் டாம். குரு  இருக்கும் இடம் சாதகமாக இல்லாவிட்டாலும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதகமாக அமையும். அதன்மூலமும் நன்மையும்  அடைவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தாரிடமும் வீண்  பேச்சை  தவிர்க்கவும். வீட்டில் பொருட்கள் திருட்டுபோக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது.  இளைய சகோதர  சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். பணப் பிரச்னைகள் உங்களை  திக் குமுக்காட வைத்தாலும்  அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். 

பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கு  வதற்குண்டான வலுவை குரு அளித்திடுவார். வசதியும் வளமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு மேம்படும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த  பிரச்னைகள் நீங்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர்  புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உடல்நலனை  பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்கநிலை மறையும்.

திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ளப் பார்ப்பீர்கள். வேலைப்பளு குறையும். சிலர் இழந்த  பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி  மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க  வாய்ப்புண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே  மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கூடவேயிருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள். 

வியாபாரிகள் வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். உங்கள் வியாபாரத்தை   விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும் பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசின் உதவி கிடைக்கும். உடன்  பணிபுரிவோரால் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பார்கள். பதவிகள் வந்து சேரும்.

மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆகஸ்ட், செப்டம்பர்  மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைத்த  காரியங்கள் அனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றுங்கள். முடிந்தவரை ராகு - கேது தலங்களுக்குச் சென்று  வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் ஸ்ரீகந்தர்ப ஜனகாபாங்க வீக்ஷணாய நம’’ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லுங்கள்.

மலர் பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு சாத்துங்கள்.

Offline kanmani

ரிஷபம்

பேரும் புகழும் கிடைக்கும்

கவர்ச்சிகரமான தோற்றமும் கனிவான பேச்சும் கொண்டவர்கள் நீங்கள். நவகிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் வல்லமை கொண்டவர் என்று  போற்றப்படும் சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானாதிபதியான குரு  பகவான், உங்களுடைய ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். இரண்டாம் இடத்திலிருந்து உங்களுடைய ருண ரோக  ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், கர்ம தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் ருண ரோக ஸ்தானமான 6ம் ராசியில் சனியும்  ராகுவும் விரய ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ளார். குரு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். பணவரவு புதிய  இனங்களில் வந்து சேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை மதிப்பார்கள். வீடு, வாகனம், நிலம் போன்றவற்றில் நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. பூர்வீகச் சொத்தில் வருமானம்  அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவி  கிடைக்கும். ஆயுள் ஸ்தானத்தில் குருபார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் நீங்கும்.

தந்தைவழி உறவினர்களிடம் இருந்து  வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்.  தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும். கடல்சார் பொருட்கள், க ட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர்.

உத்யோகஸ்தர்கள் அதிலும் அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளை குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, வி ரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பை பெறுவர். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெண்கள் குடும்பத் தேவைக்கான பணவசதிகள் கிடைத்து சந்தோஷமான வாழ்வு நடத்துவர். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள்  திட்டமிட்டுப் படித்து தேர்ச்சி காண்பர். படிப்புக்கான பணவசதியும் சீராக கிடைத்து வரும். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இந்த குருப்பெயர்ச்சி பொன்னான காலமாகும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத  தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. புதிய வாய்ப்புகள் வ ரும். பாராட்டும் பணமும் குவியும். முடிந்தபோதெல்லாம் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.

பெண்களுக்கு தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக  எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்கப் பழகுங்கள். வாழ்க்கைத் துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலை வரும்.

அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்களின்  செல்வாக்கைப் பெறுவீர்கள். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு அரசு உதவி கிடைக்கும். இயற்கை உரத்தை பயன்படுத்தி அதிக லாபமீட்டுவீர்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். அடகில் இருந்த நகை மீண்டும் வீடு வந்து சேரும் தைரியத்துடன் வெற்றிகளை குவிக்கும் ஆண்டு இது.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை சுண்டல் செய்து வழங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் ஸ்ரீகலிதோஷஹராய நமஹ’’ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகை மலரை பெருமாளுக்கு சாத்தி வழிபடவும். பெருமாள் கிருபையால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

Offline kanmani

மிதுனம்

குழந்தை வரம் கிடைக்கும்

நன்றாக சிந்தித்து செயல்பட்டு வேலையை செவ்வனே முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே. நீங்கள் நவகிரகங்களில் ஞானத்தை வாரி வழங்கும்  புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசும் ஆற்றல் உடையவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு  ருண ரோக ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான், உங்களுடைய விரய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு இடம்  பெயர்கிறார். உங்கள் ராசியில் நின்று பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். இதே வேளையில்  பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் ராசியில் சனியும் ராகுவும் லாப ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் இடம் பெற்றுள்ளார். ராசியில் குருபகவான் அமர்வது ஜென்மகுரு என்கிற நிலையாகும். இதனால் மனக்  குழப்பமும் செயல் தடுமாற்றமும் அவ்வப்போது தலைதூக்கும். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில்  பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகும்.  வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகனப் பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். உங்களின் வாரிசுகள் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர்.

அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை  நிறைவேற்ற உதவும். தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்துப் போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைப்பட்டிருந்த திருமணம், கல்வி எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். எந்தப் பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என்று  அங்கலாய்த்துக் கொண்டே இருந்தவர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும்.

கடுஞ்சொற்கள் பேசுவதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். தைரியத் தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள். ஆனால், உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருந்து கொண்டே இருக்கும். இனி அந்த பயமெல்லாம் வேண்டாம்.  படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. வீடு, வாகனம் சிறப்பாக அமையும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து  வந்த கசப்பு நீங்கும். மழலை பாக்யம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பார்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வந்துபோகும்.  வாழ்க்கைத் துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போங்கள்.

வியாபாரிகள் லாபத்தை தக்க வைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பீர்கள். வெளியூர் பயண த்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு  ஆகியவற்றை பின்பற்றுவது அவசியம். உத்யோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமத நிலையைச் சந் திப்பார்கள். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம்.  குடும்பப் பெண்கள் சிக்கனத்தை பின்பற்றுவதால் கடன் தொல்லையிலிருந்து  தப்பிக்கலாம்.

கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. கடன் கொடுக்கவும் கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. மாணவர்களின்  படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப மற்றும் மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு  வழிவகுக்கும். அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத் துக் கொள்ள போராட வேண்டியது வரும். சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். தலைமையைப் பற்றி விமர்சிக்காதீர்கள். 

அரசாங்க அதிகாரிகளிடம் மோதல் போக்கைக் கைவிடுவது நல்லது. கலைஞர்கள் வரும் வாய்ப்புகளை கவனமாக தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்வது சிறப்பைத் தரும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். கால் நடைகளை கவனமாகப் பராமரியுங்கள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிகளை தொடும் ஆண்டு இது.

பரிகாரம்:

புதன்கிழமைகளில் சிவாலயத்திற்குச் செல்லுங்கள். செல்வங்கள் குவியும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் ஏக அனேக அக்ஷர கிருதியை நமஹ’’ என்ற மந்திரத்தை தினமும் 18 முறை சொல்லுங்கள். 

மலர் பரிகாரம்:

தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்ப்பணியுங்கள். நன்மைகள் குவியும்.
« Last Edit: May 11, 2013, 11:44:55 AM by kanmani »

Offline kanmani

கடகம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

எதற்கும் கலங்காத மனமும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதவர்கள் நீங்கள். வருங்கால முன்னேற்றம் பற்றியே எப்பொழுதும் சிந் தித்துக் கொண்டிருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான், உங்களுடைய  லாபஸ்தனாத்திலிருந்து விரய, மோக்ஷ ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். 12ம் இடத்திலிருந்து உங்களுடைய சுக ஸ்தானம், ருண ரோக ஸ்தானம்,  ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். இதே வேளையில் சுக ஸ்தான 4ம் இடத்தில் சனியும் ராகுவும் தொழில் ஸ்தானத்தில் கேதுவும் இ ருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் குருபகவான் உள்ளார்.

கடந்த பெயர்ச்சியில் ஆதாய இடத்திலிருந்து தாராள பணவரவு, அளப்பரிய நன்மைகளை  வழங்கினார். குருவின் இப்போதைய பெயர்ச்சி நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியை தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை மேற்கொள்வது அவசியம். வீடு, மனை, சுபகாரியம், நற்செய ல்கள் செய்வதற்கு இருந்த தடை யாவும் நீங்கும். வாரிசுகளின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில்  அவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். பூர்வீகச் சொத்திலிருந்து சுமாரான வருமானம் உண்டு. உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.  இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள்.

வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதிக்காக தியானம்,  தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள், பிணக்குகள் போன்றவை நீங்கி புதிய விதமான உறவு கள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களின் வாக்கு வன்மை கூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும்  எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளாப்பில் கவனம் தேவை. தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட  வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள். தூங்கப்  போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம்,  சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும் நடைமுறைச் செலவில்  சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.

வாடிக்கையாளர்களின் விருப்பத் தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்கவைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு,  தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலருக்கு பணியிட மாற்றம், ஒழுங்கு  நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சக பணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும்  அதற்கேற்ப வருமானமும் கூடும். சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. பிறரை நம்பி எந்த வேலையையும்  ஒப்படைக்காதீர்கள்.

மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. தியானம் மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை பழகுவது மன ஒருமைபாட்டிற்கு உதவி  செய்யும். பெற்றோர், ஆசிரியர் வார்த்தைகளை மதித்து நடப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு  மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும். விவசாயிகள் அதிக மகசூலால் மகிழ்வார்கள்.

பரிகாரம்:

முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வாருங்கள்.  பௌர்ணமியன்று நிலாவை நோக்கி 10  நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் கற்பூர வீடி காமோத ஸமாகர்ஷ திகந்தரா’’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறுங்கள். 

மலர் பரிகாரம்:

பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு எலுமிச்சம்பழ சாறால் அபிஷேகம் செய்து வர, மனம் தெளிவடையும்.

Offline kanmani


சிம்மம்

 சிரமங்கள் நீங்கும்

சொல்லும் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்பீர்கள். ஆத்மகாரகனாகிய சூரியனை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்கள். எந்த விதமான சிரமங்களையும்  சமாளித்து வாழ்வில் வெற்றிக் கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம்  மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய தொழில் ஸ்தனாத்திலிருந்து லாப ஸ்தான ராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள்  ராசிக்கு 11ம் இடத்திற்கு வரும் குருபகவான் தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானம், பூர்வ புண்ணியஸ்தானம் களத்திரஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார்.

பதினொன்றாம் இடத்திற்கு வந்துள்ள குருபகவான் மிகுந்த ஆதாயமான பலன்களை தருவார். கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமங்கள் அனை த்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழியும் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினரின்  அனைத்து தேவைகளும் நிறைவேறும். உங்களைப் புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு  அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத் தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள்.

எதைப் பேசினாலும் அவமானம், எதைச் செய்தாலும் தலைகுனிவு என்று கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த நிலை இப்போது மாறும். உங்களது  யோசனைகளை அலுவலகத்திலும் குடும்பத்திலும் ஏற்றுக் கொள்வார்கள். உங்களது மேலான யோசனைகளை சொல்லத் தயாராகுங்கள். சொன்ன  வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன்பு யோசித்து கொடுக்கவும். தைரியமோடு  இருப்பீர்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம்  தேவை.

பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள  வேண்டாம். மெதுவாக எடுத்துச் சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது  நல்லது. 
கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.  சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். வேலை இடமாற்றம், பதவி உயர்வும் ஏற்படும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். எதிர்காலத்  தேவையைக் கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும்.  பணிச் சுமையிலிருந்து விடுபட்டு நிம்மதி காண்பீர்கள்.
மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வியில் வளர்ச்சி காண்பார்கள். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். படிப்பை முடித்துவிட்டு,  வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு இதுநாள்வரை செய்து வந்த சமூகப் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவியும்  பொறுப்பும் தாமாக வந்து சேரும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு வாரிசுகள் தங்களாலான உதவிகளை செய்வார்கள்.  எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றப் பாருங்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்  . வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உடனிருந்தே தொல்லை கொடுத்தவர்கள் ஒதுங்கிச் செல்வர். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். யார் ந ல்லவர், யார் கெட்டவர் என்பது புரியவரும். பணத்தை சேமிப்பதோடு புண்ணியத்தையும் சேமிக்க சேவைகள் செய்வீர்கள்.விவசாயிகள் வழக்கத்தை  விட கூடுதலாக உழைக்க வேண்டி வரும்.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமையன்று  சிவன் கோயிலுக்குச் சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம் செய்து விளக்கேற்றி வழிபடுங்கள். முடிந்தவர்கள் சூரியனார் கோயி லுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசனம் செய்வதும் நன்மையை தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

தினமும் ஆதித்யஹ்ருத்யம் அல்லது புருஷ ஸூக்தத்தை பாராயணம் செய்யுங்கள்.

மலர் பரிகாரம்:

எருக்க மலரை சிவனுக்கு மாத சிவராத்திரி அன்று அர்ப்பணம் செய்து வணங்கி  வர, வெற்றிகள் குவியும்.

Offline kanmani

கன்னி

 தேவைக்கேற்ப பணவரவு உண்டு

இனிமையாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். வித்தைக்குரியவரும் நரம்புகளுக்கு உடையவருமாகிய புதன் உங்களை ஆட்சி  செய்கிறார். நற்செயல்கள் செய்து தன்னை பிறருக்கு உணர்த்துவீர்கள். எந்த விதமான பொறுப்புகளையும் தனக்கே உரிய பாணியில் செய்து  முடிப்பீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான், உங்களுடைய பாக்கிய ஸ்தனாத்திலிருந்து தொழில்  ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 10ம் இடத்திலிருந்து தன, வாக்கு குடும்ப, சுக, ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதே  வேளையில் தனவாக்கு குடும்ப ஸ்தானங்களில் சனியும் ராகுவும் ஆயுள் ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி இப்போது பத்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலங்களில் அளப்பரிய  நற்பலன்களை குருவருளால் பெற்றிருப்பீர்கள். பத்தாம் இடத்து அமர்வால் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். பத்தில் குரு  பதவிக்கு இடர் என்பது ஜோதிட சாஸ்திர மொழி என்றாலும் ஜென்ம ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் கோட்சார குரு அமர்வதால்  கஜகேசரி யோக பலனைத் தரும். எனவே, நன்மையும் சிரமமும் கலந்த பலன் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும்  சிரமங்களை குறைத்து விடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள்.

நல்லவர்களின் ஆலோசனையை கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு  விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிகட்டுவீர்கள். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர்.  ஆடம்பரப் பொருட்களை வாங்காதீர்கள். தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத் திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த  பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தித் தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளை சந்திப்பீர்கள். கணவன் - மனைவியிடையே  கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர்  கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை இருக்கும். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்குச் சேமித்து வைக்கும் நேரமிது. புதிய ஒப்பந்தங்களை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். சகப் பணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பரிந்து நடப்பது மிகவும் அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும்.

பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும் உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த  பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனையையும் காண்பர். பணப் பரிவர்த் தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியமாகும். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பணவசதி சீராகக் கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும்.

வெளிநாட்டில்  பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் மக்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பைப்  பெறுவதில் தாமதம் உண்டாகும். குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.  விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் இருக்கும். மூலிகை இனங்கள் லாபம் தரும்.

பரிகாரம்:

புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

தினசரி ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாராயணம் செய்யுங்கள்.

மலர் பரிகாரம்:

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகும். நன்மைகளை கிடைக்கப் பெறுவீர்கள்.

Offline kanmani

துலாம்

புதிய வாய்ப்புகள் தேடிவரும்

கடமையே கண்ணாகக் கொண்டு காரியத்தை முடிப்பீர்கள். அசுர குரு என்றழைக்கப்படும் சுக்கிரன் உங்களை ஆட்சி செய்கிறார். உங்கள் ராசிக்கு  தைரிய, வீர்ய ஸ்தானம் மற்றும் ருண ரோக ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். கடந்த காலத்தில் இருந்த  குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும் புதிய நம்பிக்கையும்  ஏற்படும். ஓடிப் போகிறவருக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பது ஜோதிட சாஸ்திர மொழி. எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். அந்த அள வுக்கு பாதுகாப்பை இந்த குரு பெயர்ச்சிக் காலம் தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்புகளும் வாசல் கதவைத் தட்டும்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்டபடி திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். பிள்ளைகள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாதவர்களுக்கு தகுந்த பணி கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக  இருக்கும்.

ஆடம்பரச் செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பைப்  பெறுவர்.
வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளை கடக்க வேண்டியிருக்கும். 
வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர்.  அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில்  உயரிய பலன்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர்.

திட்டமிட்ட காலத்திற்குள் பணியை எளிதாகவும் சீக்கிரமாகவும் முடிப்பீர்கள். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கைமுறை
தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச் சேர்க்கையும் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதலாக ஆர்டர் கிடைத்து உற்பத்தியையும் விற்பனையையும் பெருக்குவர்.  இளம் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவர். ஆராய்ச்சி மாணவர்கள்  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சிக்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில்  முன்னுரிமை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடி
வரும். உடன் பணி புரிவோர்கள் உங்களின் பணி சிறக்க உதவி புரிவார்கள். எதிரியை வெல்லும் திறனை அறிவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும்.  அரசு
அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு உற்பத்தித் திறனும் விற்பனையும் கூடும். தள்ளித் தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் குரு  நடத்தி வைப்பார். ஆகவே எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள்.

வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ரொம்ப நாட்களாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். இயந்திரங்களை கையாளும்போதும் டூவீலரில் செல்லும் போதும் கவனம் தேவை. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகள் குவியும். சிலர் விருது பெறும் வாய்ப்பும் இருக்கிறது. விவசாயிகளுக்கு அரசு உதவி கிடைக்கும். கால்நடைகளை கவனமாக பராமரியுங்கள். இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயத்தை பாரம்பரியமாக்குவீர்கள்.

பரிகாரம்:

வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனுக்கு நெய் விளக்கேற்றி வணங்குங்கள். தினமும் முன்னோர்களை  வணங்குங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘தினசரி ‘ராம ராம’  என்ற தாரக மந்திரத்தை சொல்லவும். கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் வில்வத் தளங்களை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர மனதில் மகிழ்ச்சி பூக்கும்.

Offline kanmani

விருச்சிகம்

குடும்ப ஒற்றுமை மேம்படும்

உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடையத் துடிப்பீர்கள். தைரியத்தை வழங்குபவன் என்றழைக்கப்படும் பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி  நாயகனாக கொண்டவர் நீங்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மிதுனத்தில் பெயர்ச்சியாகி அனுகூலக் குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைப்பார். ஏழரைச் சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவற்றை தருவார். இருப்பினும் குருவின்  பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும்.

குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான  வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார்.  இந்த சமயத்தில் பேச்சுதான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தம்பி, தங்கைகள் அவர்களுடைய  சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர்.  பிள்ளைகள் படிப்பில் தேர்ச்சி பெறுவர்.

உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக உள்ள  இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் எச்சரிக்கையோடு இருங்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சியை பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் தி ருமணம், படிப்புச் செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவத்தையும் நன்மையையும் பெற்றுத் தரும்.
தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள்.

தொழிலதிபர்கள் உற்பத்தி பொருட் களின் இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழு த்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின்  உதவியால் சிலருக்கு தொழில் தாக்கு பிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். உ த்யோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது  நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

 பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப் பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருளை கொடுக்கவும்,  வாங்கவும் கூடாது. கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதிற்கு ஆறுதல் தரும். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான  விற்பனையைக் காண்பர். நடைமுறைச் செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கத் தையும் வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும்.

சாகச விளையாட்டுகளில் ஈடு படக் கூடாது. மாணவர்கள் திட்டமிட்டு படிப்பதன் மூலம் வெற்றிகளைக் குவிக்க முடியும்.  அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம்  வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்கலாம். ஆதரவாளர்கள் உங்களை வி ட்டு விலகிச் செல்லலாம். அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால்தான், அரசுத் தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்துவது நல்லது. விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான  மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.

பரிகாரம்:

செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுங்கள். இலுப்பை எண் ணெயில் வீட்டில் விளக்கு ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

தினசரி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்:

செவ்வாய்தோறும் செவ்வரளி மாலையை அம்மனுக்கு சாத்தி வணங்குங்கள்.

Offline kanmani

தனுசு

கௌரவப் பதவிகள் கிட்டும்

சராசரி மனிதனாகப் பிறந்து தங்களது நற்செயல்களின் மூலமாக புகழையும் பெருமையையும் அடைவீர்கள். நவகிரகங்களில் சுபத்தை வழங்குபவரான  குருதான் உங்களை ஆட்சி செய்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு மற்றும் சுக ஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய ருண ரோக  ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தான ராசிக்கு இடம் பெயர்கிறார். கடந்த ஒரு வருட காலமாகவே சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள், இந்த  சமயத்தில் அவற்றிலிருந்து ஓரளவு விடுபடுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த செயல் சுணக்கம் இப்போது மாறி சுறுசுறுப்பை பெறுவீர்கள்.

குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் ஆதாயமும் பணவரவு உண்டு. 7ம் பார்வை ராசியில் பதிவதால் மனத் துணிவு, தெளிவான  சிந்தனைத் திறன் ஏற்படும். 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் புகழ், அந்தஸ்த்தைப் பெறுவீர்கள். அக்கம் பக்கத்தாருடன் அன்பு வளரும்.  தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவார்கள். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. பிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களை  செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பிலும் கௌரவமான நிலையை அடைவர். பூர்வீகச் சொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உய ரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

நிர்ப்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரி செய்வீர்கள். ஜெனன கால ஜாதக சந்திரனுக்கு ஏழில் கோசார குரு அமர்ந்து கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி,  அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்ப வாழ்வு சிறக்க  பாடுபடுவர். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். எவ்வளவு வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே  என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.

லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்றுச் செய்யுங்கள். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு  நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள்  நிறைவேறும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தியை அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். வியாபாரச் சங்கங்களில் சிலருக்கு கௌரவமான பதவி வரும். உத்யோகஸ்தர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக முடித்து பதவி  உயர்வு, புதிய பொறுப்பு சலுகைகளை பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன் மதிப்பு கிடைக்கும்.

பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வும் சலுகைகளும்  கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பை கிடைக்கப் பெறுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில்  வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும். மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்து தேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர்.

அரசியல்வாதிகள் கடந்தகால குறைபாடுகளை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந் துசேரும். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும். கலைஞர்களே! இது வரை இருந்த சோம்பல் நீங்கி  சுறுசுறுப்பாவீர்கள். பாராட்டும் விருதுகளும் குவியும். புதிய வாய்ப்புகள் உங்கள் மனக்கவலையை நீக்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விவசாயிகள் லாபத் தால் குளிர்வீர்கள்.  மரப்பயிர்கள் பணம் தரும்.

பரிகாரம்:

வியாழன் தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று குரு பகவானை வணங்கி வரவும். கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.
 
சொல்ல வேண்டிய மந்திரம்:

தினசரி தேவாரத்தை பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்:

வியாழன் தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

Offline kanmani

மகரம்

சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்

நிதானத்தோடு எந்த காரியங்களிலும் இறங்கி நினைத்த இலக்கை எட்டிப் பிடிப்பவர்கள் நீங்கள். குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ளார். குருவின் ஆறாம் இட அமர்வு உங்கள் வாழ்வியல் நடைமுறையில் சில  சிரமங்களை எதிர்கொள்ள வைப்பார். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக நல்ல பலன்களும் ஏற்படும். மிதுனத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பத்தாம் இடமான தொழில், 12ம் இடமான கூடுதல் செலவு, இரண் டாம் இடமான குடும்பம், வாக்கு, பணவரவு ஆகிய இடங்களை பார்க்கிறார். பணவரவு குறையும் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற  கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம்.

அதேசமயம் வருமானம் வருவதற்கான வாசலையும் குருபகவான்  திறந்து வைப்பார். ஆகவே நெருக்கடிகளை சமாளித்து விட முடியும். தைரிய சிந்தனையும் மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் வரலாம். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை  காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.  பிள்ளைகள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்து கொள்வர். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத் தரும். இலக்கு களை அடைய முயற்சிகளை இரு மடங்காக்குங்கள். வெற்றிகள் உங்களைத் தேடிவரும் காலமிது.

உங்களின் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரைப்பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்கக்  கூடும், கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். எந்தக் காரியத் திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன்  கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்களின் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதைச் செய்ய மறவாதீர்கள். உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை.

வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். புதிய நண் பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது. உங்கள் வியாபாரத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகளைச் செய்வீர்கள்.  ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால்  தொழில் சிரமங்கள் விலகும். புதிய தொழில் நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும். புதிதாக தொழில் துவங்க வி ரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம்.

வியாபாரத்தை தக்கவைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு கிடங்குகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட  சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும். சிலருக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். நினைத்த துறையில் கல் லூரியில் இடம் கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில்  வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் அதை பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும். தலைமை உங்களிடம் பகிர்ந்து  கொள்ளும் விஷயங்களை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. கலைஞர்கள் போராடி வெல்வீர்கள். விவசாயம் சிறக்க குலதெய்வ வழிபாட்டை செய்து வரவும். மகசூல் பெருகும்.மகிழ்ச்சி மலரும்.

பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் சிவன் கோயிலுக்குச் சென்று, தேங்காய் விளக்குப் போட்டு  நடராஜரை வணங்கி வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் ஏகரூபாயை நம’’  என்ற மந்திரத்தை 18 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் சிவன் கோயிலில் அருளும் அம்பாளுக்கு பிச்சிப்பூவை அர்ப்பணித்து மூன்று முறை வலம் வரவும். பொன்னான  காலம் கனிந்து வரும்.

Offline kanmani

Re: குரு பெயர்ச்சி பலன்கள் -2013
« Reply #10 on: May 11, 2013, 11:54:27 AM »

கும்பம்

 தொட்டதெல்லாம் பொன்னாகும்

வாக்குறுதி என்பது சத்தியத்தியத்திற்குச் சமமானது என்பதை தாரக மந்திரமாக கொண்டு வாழ்வீர்கள். நவ கிரகங்களில் கர்ம பலனின் மூலமாக  வசந்தத்தை வழங்குபவர் என்றழைக்கப்படும் சனியை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான்  பெயர்ச்சியாகி அனுகூல பலன் தருகிற ஐந்தாம் இடத்தில் வருகிறார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் விலகி, வளர்ச்சிப் பாதையில்  நடைபோடுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான  ஆதாயம், ஒன்றாம் இடமான ராசி ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும்.

சாதனை  நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். குடும்பத்திற்கான முக்கிய தேவைகள்  நிறைவேறும். சகல சௌபாக்கிய வசதிகளையும் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்யத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல  பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது.

எந்த இடத்திற்குச் சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி  அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்துக்  கொள்ளுங்கள். உங்களின் நன்மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். செலவுகளைப்பற்றி கவலைப்படும் சமயமும் வந்து விட்டது. ஆடம்பரச்  செலவுகள் வேண்டாம். இளைய சகோதரரின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது.

முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம்.  கோபம் கூடவே கூடாது. ரத்த சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண் பர்கள் மூலம் அனுகூலம் உண்டு. எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கமாக வெற்றி கிடைக்கும்.  தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பணி செய்யும் இடத்தில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு, அயலூர் செல்ல  வேண்டியது வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்யத் தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலத்தில் செய்யாமல் நீண்ட காலமாகச் செய்யுங்கள். தாய்  தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பியுங்கள்.

தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக  கிடைக்கும். உபரி வருமானமும் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி  பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர்கள் மூலம் விற்பனை உயரும். லாப  உயர்வு சேமிப்பை உருவாக்கும். பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள்.

கர்ப்பிணிகள் தகுந்த சிகிச்சை, ஓய்வை பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு  பெறுவர்.
மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்தினால் மாநிலத்திலேயே முதல் ராங்க் பெறலாம். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில்  முன்னுரிமை உண்டு. படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில்  வரவேற்பைப் பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு எதுவும் வராது. கலைஞர்களுக்கு பொற்காலம். நீங்கள் எதிர்ப்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் வாய்ப்புகள் வரும். சரியாக பயன்படுத்தப் பாருங்கள். விவசாயிகள்  தொட்டதெல்லாம் பொன்னாகும்.

பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தாமரைப்பூ சாத்தி வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

தினமும் மாலை வேளையில் லலிதா திரிசதி பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் விநாயகருக்கு மரிக்கொழுந்தை சாத்தி வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

Offline kanmani

Re: குரு பெயர்ச்சி பலன்கள் -2013
« Reply #11 on: May 11, 2013, 11:56:21 AM »
மீனம்

 பணமும் பாராட்டும் குவியும்

பிறர் செய்ய முடியாத செயலை எடுத்து வியூகங்கள் வகுத்து முடித்துக் காட்டும் வல்லமை பெற்றவர்கள் நீங்கள். குருவை ஆட்சி நாயகனாக கொண் டவர்கள். தாமரை இலை தண்ணீர் போல பல விஷயங்களில் ஒதுங்கி இருப்பீர்கள். குரு தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 4ம் இடத்திலிருந்து உங்களுடைய ஆயுள் ஸ்தானம்,  தொழில் ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். இதே வேளையில் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் ஆயுள் ஸ்தானத்தில்  சனி, ராகுவும் இருக்கிறார்கள். குருவின் நான்காம் இட அமர்வு சில சிரமங்களுக்கு மத்தியில் சுப பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் கு ருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம்.
 
மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடத்திலும் அன்பாகப் பேசுங்கள். பணவரவு  சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதானம் விபத்துகளில் இருந்து காக்கும். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன்  நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும்போது அலட்சியம் செய்யாமல், உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

கணவன், மனைவி கு டும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவீர்கள். வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான  சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிப்பதால் சேமித்த பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவ துமான நிலைமை வரும். இளைய சகோதரரோடு சின்னச் சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை என்று குழப்பமான  சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். ஆனால், இந்த பெயர்ச்சியால் சின்னச் சின்ன குழப்பங்கள் அனைத்தும் மறையும்.

உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விசேஷங்கள் நடக்கப் போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள்.  பாதியில் விட்ட படிப்பைத் இப்போது தொடர முடியும். படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாயார், தாய்வழி உறவினர்களுடன்  இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும்.  பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரமிது. மு ன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு  நீங்கி, அன்பு மலரும்.  நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து  மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும்.  புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம்  சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம்.  உத்யோகஸ்தர்கள் பணியை  விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலு கைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன் மையைத் தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும்.

படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். மாணவர்கள் பெற்றோரை மதித்து செயல்படுவது  அவசியம். புதிய நன்பர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் செய்யாத விஷயங்களுக்கு அவப்பெயர் வரக்கூடும். கவனமாக இருங்கள். கலைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை பயிரிடுவதில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை 9 முறை வலம் வரவும். காகத்திற்கு தினமும் எள்  கலந்த சாதம் வைப்பது நல்ல பலனைத் தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

சிவபுராணம் பாராயணம் செய்யவும். கோளறு பதிகம் சொல்லவும்.

மலர் பரிகாரம்:

வியாழக்கிழமை தோறும் சாமந்தி மலரை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர, தடைகள் தகரும். நன்மைகள் அதிகரிக்கும்.