கல்யாணமாம் கல்யாணம்
ஊரு கூடி தேர் இழுக்கும்
எங்க வீடு கல்யாணம்
ஜாதிசனம் அத்தனையும் கூடி நின்னு
குதூகலிக்கும் கல்யாணம்
பொட்டப்புள்ள பொறந்ததுமே
சேர்த்து வச்ச தங்க காசு
பத்திரமா எடுத்து வந்து
இதமா பதமா நெருப்பிலிட்டு
பொன்தாலி செய்வாங்க
பொண்டுபுள்ளைக சேர்த்துக்கிட்டு
ஊருவோலம போவாங்க
வாழ வரும் மவராசி கை நிறைய
வலைப்பூட்டு பூட்டி வருவாக
வாழ்வாங்கு வாழவேணுமின்னு
குத்தவச்ச குமரி அவ
அரளிப்பூவா சிவந்து இருப்பாளே !
தாய் மாமன் சீருவரிசை கொண்டு வர
அங்கம் நாண விழிநீர் சொரிவளே !
ராஜாதிராஜன் அவன்
மல்லுவேட்டி காட்டும் சூரன் அவன்
வெட்கத்தில் கருத்த தேகம் சிவந்து போக
அல்லியவள் அஞ்சனவிழி பார்த்து
விரல் தீண்டி தந்திடுவானே சீலைபட்டு
ஆலமர விழுதாய் அரசமர கொழுந்தாய்
வாழவேண்டி பூசை ஒன்னு செஞ்சுபுட்டு
கருக்கலில் கண்விழித்து
வஞ்சிமகள் கொளவையிட்டு
வளர்த்திடுவாக அக்னி தாயவளே !
மஞ்ச பூசின மல்லுவேட்டி கட்டி
மரகதவள்ளியவள் மைவிழியில் மயங்கி
சிரிக்கும் விழியுடன் கண்ணியவள்
கரம்பற்ற காளையவன் காத்திருக்க ,
மதியெங்கும் மஞ்சள் பூசி
மாமன் தந்த கூறைபட்டுடுத்தி
மேனியெங்கும் தங்கநகை பூட்டி
கார்கூந்தலில் தாழம்பூவும் சூடி
புன்னகையும் மென்னையுமாம்
அன்னமென நாணம் கூடி
அன்னநடையிட்டு வந்த மங்கையவள் !
முப்பெரும் தேவர்களும் மலர்தூவ
மூவுலகும் வாழ்த்துக்கூற
குலமகள் கோதையவள்
காரிகையின் செங்கழுத்தில்
மங்கலநாண் பூட்டி
சிறை பூண்டான்
சிங்கமவன் !