காதல் விட்டு விடும் தூரம் தான்.............
எழுதுகோல் ஏந்தும் கையில் எந்திர துப்பாக்கி
எழுச்சி என்ற பெயரில் வீழ்ச்சி அடைகிறது மனித இனம்
காதல் வேட்கை கொண்ட காதலன் அல்ல நான்
ஊனமாய் போன மனித சமூகத்தின் ஊன்று கோல் நான்
கானல் நீராய் போகுமென்றால் கனவு ஏன் காண வேண்டும்
இறையடி தேடி இறைஞ்சுகையில் இறையாய் போகும் சமூகம்
எங்கே செல்கிறது என் மனித இனம்?
விடியும் காலை என் அஸ்தனமா என்கிற பயம்
இதில் எங்கே பெண்ணே என் காதல் மனம்
நட்பு என்கிற பெயரில் கற்பை சூறையாடும் கயவனல்ல நான்
நட்பை மதமாய் மதிக்கும் மனிதன் நான்
உன்னுடன் வாழ்வதை மட்டும் சுமக்க விருப்பம் இல்லை
என் நாட்டின் மானுடம் காக்க புறப்படும் எனக்கு வானமே எல்லை
உயிர் என்ன விலை பொருளா நண்பி ?
உன் வீடும் என் வீடும் நம் நாடும் வீழ்ந்துகொண்டு இருக்கையில்
நீயும் நானும் காதல் மட்டும் பேசி களிக்க முடியுமா
உன்னை நான் நட்பின் தோழியாய் பாவித்தேன்
உன்னை போல் தோழியாய் யாருமில்லை எனக்கு
காதல் கை விட்டு நட்புக்கு கை கோரு
காதல் கடலாய் ,வானமாய் இருக்கலாம்
இழந்த உயிரை மீட்டு தருமா உன் காதல் ?
இழப்பின் சோகம் கண்ணீரின் வரிகள்
என் இனத்தின் ஆறா வடுக்கள்
புறப்படு என்னோடு புது யுகம் படைக்க
காதலனாய் கை கோர்த்து நடப்பதை விட
நண்பனாய் நாட்டின் நலம் நாடுவோம்
விதி என்று வீட்டில் அடைந்தால் சதியின்
சாகச வலையில் சிக்கி போகும் எதிர் காலம் !
சுயநலத்தில் சொர்க்கம் கண்ட நாம் பொது நலம் மறந்து போனோம்
ஆண் என்பவன் வெறும் பெண் பித்தனாய் சித்தரிக்க பட்டுவிட்டோம்
இதோ ..இந்த சித்திரத்தை பார்ப்போருக்கு மனதில் தோன்றுவது
ஆண் , ஒரு பெண்ணை கைவிட்டு செல்லும் கயவனாய் தானே
என் போன்று ஒரு ஆண் மகனும் இருப்பான் என்று இந்த சமூகம் புரியட்டும்
பெண்கள் காதல் மட்டும் செய்யும் போக பாவை அல்ல என்று
சமூகத்திற்கு சவாலாய் நாம் இருப்போம்
சமூக சிந்தனை வந்துவிட்டால் ....
..... காதல் விட்டு விடும் தூரம் தான் ..