தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

சிக்குன்குன்யா.......பன்றி காய்ச்சல்

(1/1)

Global Angel:
சிக்குன்குன்யா.......பன்றி காய்ச்சல்


சிக்குன்குன்யா என்று ஒரு காய்ச்சல் திடீரென்று செய்திகளில் ' ஹீரோ ' வாக இருந்தது. சிக்குன்குன்யாவை பற்றி பேசாதவர் இருந்திருக்க முடியாது அந்த அளவிற்கு அதன் உக்கிரம் தாண்டவமாடியது.

இப்போது " swine flue " என்ற பன்றிக்காயச்சல்.

மேற்சொன்ன இரண்டுக்கும் ஒரு வித்தியாசம், சிக்குன்குன்யா என்பது கொசு கடியினால் ஏற்ப்பட்டது என்றது செய்திகள். பன்றி காய்ச்சலோ ஒருவித வைரசினால் பரவுவதாக சொல்லப்படுகிறது.

பன்றி காய்ச்சல் பன்றிகளின் மூலம் பரவுவது கிடையாது என்பது உறுதி என கூறப்படுகிறது.

பறவை காய்ச்சல் பரவிய போது பறவைகளை கொன்று குவித்தது போல, இந்த முறை பன்றிகளை கொன்று குவிக்க கூடும்.

தென் இந்திய உணவு வகைகளில் எதையுமே குறைந்த பட்சம் பத்திலிருந்து பதினைந்து நிமிடமாவது வேக வைப்பது என்பது தான் சமையல் முறையே. இதனால் காய்களில் இருக்கும் விட்டமின்கள் ஆவியாகி விடுவதாக கூறும் அறிவியலை நாம் படித்து கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் எத்தனை சதவிகிதம் பேர் அரை வேக்காட்டில் காய்களை சமைத்து சாப்பிடுகின்றனர் ?

மாமிச வகைகள் என்றால் நிச்சயம் நன்றாக வேக வைத்தால் மட்டுமே மென்று சாப்பிட வசதி, மட்டும்மில்லாது, நன்றாக வேக வைப்பது நமது பழக்கமும் கூட. இதனால் 99.9% கிருமிகள் அழிக்கப்பட்டு விடுவது உண்மை. இதனால் பலவித நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்கிறோம் என்பதும் உண்மை.

நன்றாக வேகவைத்து ( பன்றியை ) சாப்பிட்டால் பன்றி காய்ச்சல் வரவே வாய்ப்பு இல்லையாம்.

பன்றி சாப்பிடாதவர்களுக்கு வேக வைப்பதில் பிரச்சினை இல்லை என்றாலும், தொற்றிலிருந்து காப்பாற்றி கொள்வது எப்படி என்பதை கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம்.

நமது ஊரில் உள்ள ஒரு கெட்ட பழக்கம், உணவு சாப்பிடுவது கையால், பல காரியங்களுக்கு பயன் படுத்திய கையை சோப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருப்பதே இல்லை, அதிலும் ஹோடேலில் சாப்பிடுவதென்றால் பலருக்கும் கையை சுத்தம் செய்யும் பழக்கமே இருப்பது இல்லை. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இருப்பதில்லை என்று சொல்லலாம்.

காலணிகள் அணிந்து நடக்கும் பழக்கம் என்பது நாகரீகம் என நினைத்தாவது காலணிகள் அணிந்து நடப்பது ஒரு விதத்தில் சுகாதாரமானதே. ஆனால், வீட்டுக்குள்ளும் அதே காலணியை பயன் படுத்துவதை என்னவென்று சொல்லுவது ? வீட்டிற்கு வரும் சில விருந்தாளிகள் அல்லது தெரிந்தவர்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு வரும் பழக்கம் இல்லாதவர்கள் வீட்டிற்குள் வரும் போது அருவருப்பு ஏற்ப்படுவதுடன் , அவர்களிடம் எப்படி இதைப்பற்றி சொல்வது என்ற குழப்பம் வேறு. இதை தான் தர்மசங்கடம் என்பார்கள்.

காலணியை அணிந்து நடப்பதால் கால் மிக சுத்தமாக இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டாலும், வீட்டிற்கு வந்த பின் கால்களை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்த பின்னர் படுக்கையின் மீது கால்களை வைப்பது, [ சிலர் சிறிய குழந்தைகளை காலின் மீது உட்கார வைத்து கொண்டு விளையாடுவார்கள் ], போன்றவற்றை செய்வதினால் நீங்கள் உங்கள் கால் மூலம் சுமந்து செல்லும் கிருமிகளை வீட்டிலும் பரப்பாமல், முக்கியமாக சிறிய குழந்தைகளுக்கு, ஓரளவு தொற்று வியாதிகளில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும்.

சிகுன்குன்யா கொசுவானாலும், பன்றிக்க்காயச்சலை உருவாக்கும் வைரசாக இருந்தாலும், அதன் வரலாற்றை பார்த்தால், ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் மக்களை தாக்கி, கொன்று இருப்பது தெரிய வருகிறது. ஆனால் ஏனோ இவற்றிக்குஇன்னும் மருந்து கண்டு பிடிக்க படாமல் இருப்பது, துரதிஷ்டவசமானது.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் சமூக விரோதிகள், சில படித்த விஷமிகள், அதாவது பயோ- டெக்னாலஜி கல்வியை தீவிரமாக படித்தவர்கள் , இது போன்ற மக்களை கொல்லும், கொசுக்களை, வைரஸ்களை உருவாக்கி அவற்றை குறிப்பிட்ட ஊர்களில் பரவ விடுவதன் மூலம், ஒரு வெடி குண்டை போட்டால் எத்தனை பேர் செத்து மடிவார்களோ அதில் ஒரு பகுதியையாவது அழிக்க முடியும் என்ற குறிக்கோளில் தங்களது ஆற்றலை தவறாக பயன் படுத்தி, நாச வேலையை ஏன் செய்ய கூடாது என்பது எனது யூகம்.


இப்படிப்பட்டவர்களை கண்டு பிடிப்பது ஒருவித சவால்தான், என்றாலும் இப்படியும் ஏன் இருக்க கூடாது என்ற கோணத்தில் கண்டுபிடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

எந்தவித காய்ச்சலுக்கு மருந்து இன்னும் கண்டு பிடிக்கவில்லையோ, அத்தகைய தொற்று நோய்களை திடீர் திடீரென்று பரப்பி பலரை சூறையாடுவதை நிச்சயம் தவிர்க்க முடியும் என்பது எனது நம்பிக்கை.

Navigation

[0] Message Index

Go to full version