626 மனம் போல வாழ்வு.
627 மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி
628 மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
629 மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
630 மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
631 மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
632 மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
633 மற்றவர்கள் கோடி கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தாரோடு கூடிப்பழகுவதே கோடிப் பெருமை
634 மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
635 மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
636 மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
637 மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
638 மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
639 மவுனம் கலக நாசம்
640 மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
641 மாடம் இடிந்தால் கூடம்.
642 மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
643 மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
644 மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
645 மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
646 மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
647 மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
648 மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
649 மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
650 மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.