FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: gab on October 28, 2012, 11:19:45 PM

Title: Aalukkoru Veedu (ஆளுக்கொரு வீடு)
Post by: gab on October 28, 2012, 11:19:45 PM
பாடல்: அன்பு மனம் கனிந்த பின்னே
திரைப்படம்: ஆளுக்கொரு வீடு
பாடியவர்: பி.நி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1960



அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?

மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிடலாமோ?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிடலாமோ?
உறவானது மனதில் ஆ ஆ மணமானது நினைவில் ஒ ஓ இதை
மாற்றுவதார் மானே வையகம் மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில் இதை
மாற்றுவதார் மானே வையகம் மீதில்

அஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

காதலுக்கே உலகமென்று கனவில் கண்டேனே நான்
கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே
காதலுக்கே உலகமென்று கனவில் கண்டேனே நான்
கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு

அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
Title: Re: Aalukkoru Veedu (ஆளுக்கொரு வீடு)
Post by: gab on October 28, 2012, 11:21:14 PM
பாடல்: ஊருக்கெல்லாம் ஓரே சாமி
திரைப்படம்: ஆளுக்கொரு வீடு
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1960

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

ஊத்துக்கெல்லாம் ஓரே காத்து ஓரே காத்து ஓரே தண்ணி
ஓரே வானம் ஓரே பூமி ஆமடி பொன்னாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்
எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்
யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

தானந்தா தானா தைதன்னேனா தானந்தா தானா தானே தந்தேனா
தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

பாடு பட்டோம் கொஞ்சமுமில்லே பலன் வெளஞ்சசா பஞ்சமுமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ அருள்புரிவாளே அம்மா அருள் புரிவாளே
அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா
ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா