காதலெனும் சொல்லை கொண்டு வந்து
உன் காலடி சேர்த்தவன் நான்தானே
கல்லென நெஞ்சமும் உள்ளது போல்
அதை கண்டு கொள்ளாமலே நீ இருந்தாய்
எப்படி உன்னை ஈர்ப்பதென்று யோசித்து பார்த்தே ஒன்றுணர்ந்தேன்
உன்னை ஈர்த்திட யோசித்ததை நான்
வேறு துறைகளில் செய்திருந்தால்
நற்பெயர் பல பெற்றுவிட்டு இங்கு
நலமுடன் நானே வாழ்ந்திருப்பேன்
விஞ்ஞானி மெய்ஞ்ஞானி என்று பல
பட்டமும் என்னுடன் சேர்ந்திருக்கும்
எப்படி ஆக வேண்டிய நான்
இப்படி ஆகி போனேனே..