FTC Forum
Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: benser creation on January 03, 2012, 01:46:01 AM
-
http://www.youtube.com/v/S9eimeWz31g
indha video patriya ungal karuththai youtube la yum post pannuga friends
-
kalnenjam yaaruku neraiya iruko avanga than easya marapanga.... enaku therinji pasangaluku sanjalam athigam so kadhal vayapatta meendu varuvathu rombave kadinam than...
-
உண்மையாகவே காதல் கொண்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எளிதல் மறக்க மாட்டார்கள் ..... ஏதாவது காரணத்திற்காக பிரிந்தாலும் மனதின் ஆழத்தில் அந்த காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் .. காதலித்தவர்கள் நல்லவட்களோ கெட்டவர்களோ எப்படி இருந்தாலும் அதுதான் உண்மை ... ஆண்கள் எளிதில் தங்கள் காதல் வயப்பட்டதை ஒத்து கொள்வார்கள் தோல்விக்கு அப்புறமும் ..... ஆனால் பெண்கள் ஒத்து கொள்ளமாட்டார்கள் ...... ஏனென்றால் ஒரு ஆண் தான் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் தாக்கு வரும் மனைவி மனதாலும் கூட களங்கம் இல்லாதவளாக இருப்பதைத்தான் விரும்புவான் .... எனவே எந்த சந்தர்பத்திலும் பெண் தான் காதலித்ததை சொல்ல மாட்டாள் ... அதற்காக அவள் காதலை மறந்தவள் ஆகமாட்டாள் ... இதயத்தின் ஓரத்தில் அது வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
இபொழுது எல்லாம் காதல் கையில் இருக்கும் மொபைல் போன் போல ஆகிடிச்சு புதிது புதிதாய் வர வர மாத்துவது போல காதலையும் மாத்திக் கொள்கிறார்கள் ....... இது பால் இன வேறுபாடின்றி ஆண் பெண் இரு பாலாரலையுமே நடத்தப்படுகின்றது ... என்னை கேட்டால் ஒன்று தான் சொல்வேன் .. உண்மை காதல் மறக்கப்படுவதில்லை மரணிக்கும் வரை
-
ஏஞ்சல் கடைசியில் சொன்ன விதம் அருமை காதல் அழிவதில்லை மரணிக்கும் வரை.அப்புறம் ஒன்னு தன் புருசனுக்காக மறைக்கப்படுகிறது காதல் இது சிறிக்கும் விதமாக இருக்கு not is the point அப்போ ஒத்துகுறிங்க பெண்கள் வேற கல்யாணம் பன்னிக்கிறத ..........
-
ஏன் ஆண்கள் திருமணமே பண்ணிகிரதில்லையா ... பெண்கள் தனியாக வாழ சமுதாயம் ஒத்துக்காது அதன் பார்வை வேறு ..... எனவே கல்யாணம் கட்டயாமகிறது பெண்களுக்கு அனால் ஆண்கள் ...? உங்கள் கதையா பார்த்தால் ஆண்கள் வேற கல்யாணம் கட்டி நல்லா இருப்பாங்க பெண்கள் நினசுகிடே வனவாசம் இருக்கணும்னு சொல்ல வாரீங்களா ...?
ஏனம்மா பெண்கள் மனதுக்குள புகுந்து ஆராய்ச்சி பண்ணின போல அறிக்கை விட கூடாது ஓகே . ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் ....ஆனால் மறந்து போகிறார்களா இல்லையா என்பது நீங்கள் நிரூபன படுத்த முடியாது மறதி என்பது மனம் மூளை சமந்தபட்ட விடயம் ..
இப்படி வீடியோ காட்சி படங்கள் போட்டு பெண்கள் தாங்கள் நினைத்துக்கொண்டே இருபதகா ஸ்கீன் போட்டால்தான் உலகம் நம்பும் போல என்ன கொடுமை இது ....?
இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் .... உங்க பொண்டாட்டி உங்க கிட்ட வந்து ஏங்க .... நன் உங்கள கல்யாணம் பண்ணிக்க முதல் ஒருத்தங்கள லவ் பணினேன் 2 வருசமா.... அப்புறம் அவர் வேற திருமணம் செய்திட்டார் ... நான் 2 வருஷம் கழிச்சு உங்கள கல்யாணம் பணினேன் எண்டு சொன்னா..... உங்க மனநிலை எப்படி இருக்கும் ? இதை நீங்க எப்படி எடுதுபிங்க ..... ஏன் கல்யாணம் கடினே எண்ணிய நீ அவனையே நினச்சிட்டு ஒவையார் கணக்கா இருந்திருக்கணும்னு சொல்லி இருபின்களோ
சும்மா நூல் விட வேணாம் ...
-
இந்த காலத்துல காதலிக்காத பெண் கிடைக்கிறது கஸ்டம் அதனால என் மனைவி யார காதலிச்சா அது முக்கியம் இல்லை இனி என்னை காதலிக்க வைக்கனும் அதான் வாழ்க்கைக்கு முக்கியம் வனவாசம் போக சொல்லல ஆண்கள் மேலையும் தவறு இருக்கலாம் ஆனால் பெண்கள் மறந்து விட்டு சமுதாயத்த காரணமா சொல்றது எந்த விதத்துல நியாயம் ஆமா தெரியாம தான் கேக்குறேன் காதலிக்கும் போது ஊரு சுத்தும் போது கண்ணுக்கு தெரியலையா அந்த சமுதாயம் சும்மா பீலா விடாதிங்க
-
அதை நீங்க காதலிச்சு ஊர சுத்துற பொண்ணத்தான் கேட்கணும் .... :)
-
இளகிய மென்மையான இதயம் கொண்டவர் என்ற கூடுதல் தகுதி உடையதாலோ என்னவோ
எதையும் (குறிப்பாய் காதலை ) எளிதில் மறக்கும் பெரும் சக்தி பெற்றிருகின்றனர் பெண்கள். .
சிறு பிள்ளைதனமாக ஒருவர் ,இருவர், சிலர் பற்றி பெருமை பீற்றிகொள்ளாமல்,பெரும்பான்மை யை
கருத்தில் கொள்ளுங்கள் !பெரும்பான்மையே பேசப்படும், போற்றப்படும்,கருத்திலும் கொள்ளப்படும் .
-
உண்மையாகவே காதல் கொண்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எளிதல் மறக்க மாட்டார்கள் ..... ஏதாவது காரணத்திற்காக பிரிந்தாலும் மனதின் ஆழத்தில் அந்த காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் .. காதலித்தவர்கள் நல்லவட்களோ கெட்டவர்களோ எப்படி இருந்தாலும் அதுதான் உண்மை .
unmai thaan angel pirinthaalum maraka mudiyathu athu aanaka irunthaalum pennaga irunthaalum
intha topic la elithil marakurathu yarunu keta athai namaala sola mudiyathu
oru aanaga irukurathaala nan solalaam aangal elithil marapathilllai nu
ana pengal manasula ena irukunu epadi theriyum
kaathal tholvi adaintha pala aangal kudichutu athaiye nenaichuturukaanga, pengal apadi ila
athey pola pala aangal than kaathalai marakaamal aana athukunu kudikama veliya kaatikama irukaanga
avingalam veliya katikalangurathukaaga nama antha aangalum kathalai maranthutanganu sola mudiyuma
so intha kelvi ku pathil solanum na athuku pengal manasula ena irukunu therincha matum than sola mudiyum
athu nadakaatha kaariyam
aanal kathalithu vitu pirinthu selvathu yar nu keta kandipa athu pengal than athikam
oru payana kaathalichutu aana oru sila kaaranangalukaaka inorurai katikuranga
intha visayathil pengal than athikam enpathu en karuthu
-
ஏஞ்சல் இது ஒரு பதிலா ஊரு சுத்துரவங்ககிட்டதான் கேக்கனும்னா நான் அவங்ககிட்ட கேக்கலையே என் கேல்விக்கு தாங்கள் தானே பதில் அளித்தீர் தங்களிடம் தானே பதில் கேட்கமுடியும் ;D ;D ;D சும்மா பேச தெரியாம பேசாதிங்க
-
பென்செர் காதலித்து ஊற சுத்துற பழக்கம் எனக்கு இல்லை ..... எனக்கு இருந்தால்தானே அதற்க்கு என்னால் பதில் கொடுக்க முடியும் ... எனவேதான் என்னை விடுத்து காதலித்து ஊர் சிட்டுபவர்களை கேட்க சொனேன் ... நீங்கள் எண்ண வேண்டுமானாலும் கேட்கலாம் ... ஆனால் பதில் சொல்வதும் சொல்லமால் விடுப்பதும் என் உரிமை எனக்கு தெரிந்ததி நான் சொனேன் ... தெரியாததை அடுத்தவரிடம் கேட்டு அதாவது தெரிந்தவர்களிடம் கேட்டுக்க் கொள்ளுங்கள் என்று கூறுவதில் தப்பு என்ன இருக்கிறது ...? :)
பேச தெரியாம இங்க யாரும் பேச வர மாட்டங்க ..... எனக்கு பேச தெரியலேன்னா கத்து கொடுக்க போறிங்களா ...? முதல் விளங்கி கொள்ளுங்க மத்தவங்க எண்ண சொல்லி இருக்காங்கனு ... அவங்களுக்கு தெரியாததை அவங்க கிட்ட கேட்ட தெரியலை தெரிஞ்சவங்ககிட்ட கேட்க சொல்லித்தான் சொல்லுவாங்க ... :)
-
காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா.??
இங்கே எனது சில சொந்த கருத்துகளை/வாதங்களை பதிவு செய்துள்ளேன்.நான் வாதமாக கருதி எழுதிய கருத்துக்களில் தங்களுக்கு முரண்பாடுகள்/புண்படுத்தல்கள் இருந்தால்அதற்காக மனம் வருந்துகிறேன்!!
மறந்தால் அதற்கு/அந்த உறவுக்கு பெயர் ”காதல்” இல்லை. தான் காதலித்தவனையோ/காதலித்தவளையோ எளிதில்/கஷ்டப்பட்டு/இஷ்டப்பட்டு எப்பிடியாகினும் மறக்கும் நிலை வருமானால் அங்கு அவர்களுகிடையில் “காதல்” இருந்ததாகவோ,அவர்கள் காதல் வயப்பட்டதாகவோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
“உண்மையாகவே காதல் கொண்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எளிதல் மறக்க மாட்டார்கள் ..... ஏதாவது காரணத்திற்காக பிரிந்தாலும் மனதின் ஆழத்தில் அந்த காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்......” Posted by: Global Angel
ஏஞ்சல் உங்களிடம் ஒரு கேள்வி>>>> உண்மையாகவே காதல் கொண்டவர்களின் மனசுக்கு பிரிவை நினைக்கும் சக்தியே இருக்காது:இதில் எப்படி அவர்கள் ”மனதில் அந்த காதல் பிரிந்த பிறகும் வாழ்ந்து கொண்டு இருக்கும்” என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும?
ஒருவரை காதலிப்பதற்கு வேண்டுமானால் காரணங்கள் பல இருக்கலாம்.பிரிவற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்கமுடியும்.அது இயற்கை மரணம்தான்.இது காலத்தின் நியதி.
”இளகிய மென்மையான இதயம் கொண்டவர் என்ற கூடுதல் தகுதி உடையதாலோ என்னவோ எதையும் (குறிப்பாய் காதலை ) எளிதில் மறக்கும் பெரும் சக்தி பெற்றிருகின்றனர் பெண்கள்........ “ Posted by: aasaiajiith>>>>>>>>>>>>
>>> ஆம்,காதல் என்ற பெயரில் பழகிய உறவை மறக்கதான் வேண்டும்.அதற்கு பெரிதாக பெண்களிடம்/ஆண்களிடல் சக்தி ஒன்றும் இருக்கவேண்டிய அவசியமில்லையென்பது என் கருத்து.(பெண்களை விட ஆண்களே நியாபக சக்தி குறைந்தவர்கள் என்று பலதரப்பட்ட விஞ்ஞான்ஆய்வுகள் குறிப்பிட்ட செய்தி உங்கள் காது,கண்களுக்கு எட்டவில்லை போலும்.) பெண் என்றாலே மென்மை:மென்மைதான் பெண்மை:இது ஒன்றும் கூடுதல் தகுதி இல்ல,இயற்கையாக பெண்மைக்கு சொல்லப்படும் வரைவிலக்கணமேயிது.
“aanal kathalithu vitu pirinthu selvathu yar nu keta kandipa athu pengal than athikam
oru payana kaathalichutu aana oru sila kaaranangalukaaka inorurai katikuranga
intha visayathil pengal than athikam enpathu en karuthu ”.......
றெமோ <<இது உங்கள் சொந்த அனுபவத்தில் வெளிபாடாக இருந்தால் அதற்காக வருத்தபடுகிறன்.
’pengal than athikam oru payana kaathalichutu aana oru sila kaaranangalukaaka inorurai katikuranga ’....றெமோ இதை வாசிக்கும்போது பரிதாபம்தான் வருகிறது.தயவுசெய்து இதை எல்லாம்”காதல்”என்று சொல்லாதீர்கள்.ஆணும்,பெண்ணும் காதலிக்க தொடங்கி எதுவந்து தடுத்தாலும் எதிர் நீச்சலடிச்சு,விட்டுக்கொடுக்கவேண்டிய இடத்துல தங்களுகுள்ள விட்டுகொடுத்து,துயரத்தின் விளிம்பு வரை போய் கடைசில ஒன்று சேர்ந்து வாழ்க்கையை ருசிக்க தொடங்குறவங்க காதலிச்சோம் என்று சொல்லாம்., ஆணும்,பெண்ணும் பழகிவிட்டு பிரிந்தபின்பும்,அவர்களுக்குள் ”காதல்” என்ற ஒன்று நிகழாத போதும் கூட ஏன் அதை ”காதல்”என்று சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.இருவர் மனதிலும் காதல்,காதலுக்கேயுரிய அம்சங்களுடன் சமமாக ஊடுருவியிருதால் பிரிவு ,மறத்தல் என்னும் நிலை சாத்தியமற்றது.
ஆகவே ரெமோ,,,, ”காதல்” என்ற சொல்லை பொருத்தமான இடத்தில் பயன்படுத்தினால் அந்த வார்த்தையும், அதற்குரிய அர்ததமும் என்றும் உயிர் பெறும் என்பது எனது விமர்சனம்..
புரிதலாலும்,நம்பிக்கையாலும் இருமனம் ஒருமனமாகி வாழ்வின் அந்தம் வரை அன்புருப்பெற்றதே ”காதலாம்”. பிரிந்தால் அவர்கள் கொண்டது காதல் இல்லை.ஆணும் பெண்ணும் சிலகாலம் பழகிவிட்டு பிரிந்தபின் ”காதலித்தோம்” சில காரணங்களுக்காக /சந்தர்ப்பம் சூழ்நிலை எங்களை ”பிரித்துவிட்டது” என்று சொல்வது எல்லாம் பாவம:வெறும் பொய் வேலை:இவர்கள் காதலித்திருந்தால் பிரியவே முடியாது:அப்படி் பிரிந்தால் அங்கு அவர்களுக்குள் ”காதல்” நிகழ்ந்ததாக அர்த்தம் இல்லை.
ஒரு ஆணும்,பெண்ணும் நெருக்கமாகவும், சுதந்திரமாகவும் பழகுவதற்கு,பிறர் தங்கள் உறவை தவறகாக விமர்சனம் செய்துவிடக்கூடாது என்பற்காக ”காதல்” என்ற பெயர் சூட்டி,நாகரிகமென்று நினைத்து பேசி ,பழகிவிட்டு அலுத்ததும் பிரிவது ஒருவகை:
உண்மை அன்பிற்காக,வாழ்கைக்காக ”காதல்” ஒருமுறை என்ற கொள்கையில் ஒரு ஆண்/பெண் காதலிப்பதாக சொல்லி, அதே பேச்சு,அதே பழகல், பிறகு சிலகாலத்தின் பின் ”எங்களுக்குள்ள misunderstanding/parents othukala or othuka matanga/suitஆகல/... ” என்ற வார்தைகளை சொல்லிவிட்டு ஆணும்,பெண்ணும் தங்களை தாங்களே நியாயபடுத்தி, சமாதானப்படுத்தி,தங்களை சுற்றியுள்ளவர்கள்(frnds,wellwishers) கேட்கும் கேள்விகளில் இருந்தும் தப்பித்து பிரிவது இன்னொருவகை:
மேலே குறிப்பிட்ட இரண்டு வகைகுள்தான் “காதல்” என்ற மேடைபோட்டு,அதில் பிரிவு என்ற ”நாடகமும்” அரங்கேற்றப்படுகிறது.
காதல் என்று சொல்லப்படும் இந்த ஆண்,பெண் பந்தத்தின் முழுமையை,அடிவருடியை தெரிந்து,புரி்ந்து வாழ்க்கைமுழுவதும் அதை அனுபவிப்பவர்களே கா(காலமெல்லாம் காத்திருந்து)த(தவித்திருந்து)ல்(லயிக்கும் இன்பம்)/காதலர்கள் என்ற சொல்லை சொல்ல கூடிய தகுதியுடைவர்கள் என்பது எனது சொந்த எண்ணக்கரு.
”காதலுக்கு பிரிவு இல்லை”,”பிரிந்தால் அது காதலும் இல்லை”. இது இப்படியிருக்க மறப்பவர் ஆணோ/பெண்ணோ அவரை காதலித்தவராக கருத முடியாது. எனவே இங்கு “ஆண்,பெண் இருவரில் எவர் காதலை எளிதில் மறப்பர்”?என்ற பிற கேள்விக்கே இடம் இல்லை. ;D ;D
-
பாரதி காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேர்கின்றார்களா?? சேரவில்லை என்றால் அவர்கள் காதலிக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க்க முடியாது ..... அப்போ கண்ணனை காதலித்த மீரா பொய்யா ..... இன்றும் சேரமுடியாத காதலுக்காக ஏங்குபவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது நீங்கள் இப்படி சொல்வது எப்படி தகும் . :(
-
ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி ;D ;D
-
பாரதி நல்ல அருமையா விளக்கம் சொல்லி இருக்கிங்க ஆனால் ஒன்னு மட்டும் ஏத்துக்க முடியாது பிரிந்தவர்கள் எல்லாம் உன்மையா காதலிக்க வில்லை என்பதை அப்புறம் இன்னும் ஒன்னு இங்கே ஆணா பெண்ணா இதான் கேள்வி இது எதுவுமே தேவை இல்லை என்பது அவசியம் இல்லை என்பது அவசியம் இல்லாத ஒன்று என கருதுகிறேன்
-
ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.
பென்செர் தெளிவோடதன் பேசுறிங்களா....? நீங்கள் பதிந்த பதிவை மீண்டும் சரியாக படிங்கள் ....
உண்மையாகவே காதல் கொண்டவர்கள் கடைசிவரை மறக்க மாட்டார்கள் என்று கூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன் .... :D
-
கண்ணனை காதலித்த மீரா பொய்யா????ஏஞ்சல் உங்களது இந்த வினாவின் பதில் மிக எளிது.சைவசமய குரவரான அப்பர் இறைவனுக்கு தான் அடிமை என்றும்,சுந்தரர் சிவனை தோழனாக நினைத்தும் இறைபக்தியை எப்படி வளர்த்தார்களோ ,அதே மாதிரிதான் மீராபாய்,ஆண்டாள் இருவரும் கிருஷ்ணபக்திக்காக காதலனாய் இறைவனை கற்பனை செய்து பக்திபாக்களை இயற்றினர்.இவர்கள் எல்லாம் சாதாரண மனித உலக சிற்றின்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்கள்.ஆகவே இவர்களிக்கும் மானிடர்களின் காதலுக்கு பேரின்பத்தையே அனுபவித்ததாக கூறப்படும் இவர்களை ஒப்பிடுவது பொருத்தமற்றது என்று நினைகிறன்.
" காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேர்கின்றார்களா?? சேரவில்லை என்றால் அவர்கள் காதலிக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க்க முடியாது ....."Posted by: Global Angel
ஏஞ்சல் உங்களது இந்த கேள்விக்கான பதிலை ஏற்கனவே பதிவுசெய்துள்ளேன்.
காதல் என்று சொல்லப்படும் இந்த ஆண்,பெண் பந்தத்தின் முழுமையை,அடிவருடியை தெரிந்து,புரி்ந்து வாழ்க்கைமுழுவதும் அதை அனுபவிப்பவர்களே கா(காலமெல்லாம் காத்திருந்து)த(தவித்திருந்து)ல்(லயிக்கும் இன்பம்)/காதலர்கள் என்ற சொல்லை சொல்ல கூடிய தகுதியுடைவர்கள் என்பது எனது சொந்த எண்ணக்கரு.
காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேராவிடினும் ஒருசிலர் சேருகின்றர்தானே! பிரிந்தவர்கள/மறந்தவர்கள்/ஏங்குபவர்கள்/காதலில் சேர்ந்தவர்கள் என்று எல்லோரையும் காதலித்தார்கள் என்றால் அப்போ காதல் என்றால் தான் என்ன?காதலோட தனித்துவம் தான் என்ன?காதலின் முழுமை என்ன?
-
பாரதி உங்கள் கருத்துகள் நன் ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் நீகள் சொல்வதெல்லாம் காதலில் இருவருமே பற்றுஉறுதியோடு இருந்தால்தான் சாத்தியம் .. ஆனால் காதலில் பலவகை உண்டே கை கிளை பெருந்திளை ஒரு தலை காதல் இப்படி பல உண்டே அங்கே பொருந்தாத காதலிலும் உண்மையான நேசத்துடன் ஒரு ஆணை பெண்ணோ இல்லை பெண்ணை ஆணோ காதலிதார்களே.. காதல் என்பது நீங்கள் சொல்வது போல் காத்திருத்தல் தனித்திருத்தல் லயிதிருதல் தான் அது ஏன் ஒரு தலை காதலில் கூட அது தானே நீங்கள் சொல்வது ஒரு தலை காதலில் 100 % பொருந்த கூடியது .....அங்குதான் மன மாற்றத்துக்காக காத்திருப்பார்கள் தான் காதலிபவர்களை கற்பனையில் எண்ணி லயிதிருபார்கள் அதிகம் ....
காதலோட தனித்துவம் என்னவென்றால் புரிந்துணர்வுதான் ..... நன்றாக புரிந்து கொள்வதுதான் ..... அது வேறு எந்த உறவினால் கிடைக்கும் திருமண உறவில் இருக்காது.... உதாரணமாக நாம் வாழும் சமுதாயம் காதலை அவளவாக ஏற்று கொள்வதில்லை .... காதல் விலக்கபட்ட சமுகத்தில் இருந்து இருவர் காதல் கொள்கின்றார்கள் .... சமுக குடும்ப காரணமாக காதலன் காதலியிடம் பிரிவை வலியிருதும் போது ...அவன் நலத்துக்காக விட்டுக்க் கொடுகின்ற அந்த புரிந்துணர்வு தான் காதலின் தனித்துவம் ... அங்கே காதல் அழியவில்லை மேருகூட்டாப்ப்படுகிறது ..... அவன் நினைவில் அவள் மும்தாஜ் அவன் மனதில் அவளுக்கு தாஜ்மஹால் கட்டப்பட்டுவிடும் .... காதலில் ஒன்று சேர்ந்தால்தான் அது காதல் என்று இல்லை ... தனித்திருந்த போதும் நினைவுகளில் லயிதிருபதே காதல்...
இப்படியான காதல் சேராது போனால் அது துன்பம் .....சேர்ந்தால் அதுதான் காதலின் முழுமை ...
( இது காதல் பற்றிய பாரதிக்கான எனது பதில் ..... இது இந்த விவாதத்துக்கான ( மறப்பது ஆண்களா பெண்களா ) பதில் அல்ல )
-
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டு - அதில்
பஞ்சம் இல்லா காதல் கொண்டு
வஞ்சி (காதலி) கொடி அவளே தஞ்சம் என்று
அவள் கொஞ்சும் நெஞ்சில் தஞ்சம் கொண்டிட
அஞ்சுகமே ,மஞ்சள்மலரே ,பஞ்சவர்ணமே என்று
அவ்வஞ்சியை கொஞ்சி மகிழ்வித்து ,மகிழ்ந்த
நெஞ்சில் நஞ்சிட்டு வஞ்சித்தாள் வஞ்சி
அந்த வஞ்சிக்கப்பட்ட வாலிபனின் வேதனை கெஞ்சல்களில்
ஒரு சில வரிகள்
எம்மா உன்னால் காதலன் நானம்மா
என்னை முன்னாள் காதலன் ஆக்கியதேனம்மா
நெஞ்சுக்குள்ளே உன்னை பதித்தேன் நான்
என் நெஞ்சை புதைத்து வதைத்தும், ஏன் ?
அடி உன் இதயம் காத்தேன் பொக்கிஷ பெட்டி போல்
என் இதயம் எறிந்தாய் குப்பை திட்டிக்குள்
என் காதலில் ஏதும் குறையை கண்டாயா ?
என் காதலையே குறையாய் கொண்டாயா ?
மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன் நான்
இறந்தாலும் நினைவை இழக்க மாட்டேன் நான் ...
-
ஏன்மா ஏஞ்சலு நீங்க தெளிவா இருகேலா முதல்ல ;D ;D ;D நீங்கள் பதிந்த பதிவை மீண்டும் சரியாக படிங்கள் ....
இது இப்ப சொன்னது உண்மையாகவே காதல் கொண்டவர்கள் கடைசிவரை மறக்க மாட்டார்கள் என்று கூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன் .... :D
[/quote] இது முன்னாடி சொன்னது பையனால ஏமாற்றப்பட்ட எவளவோ பெண்கள் இருகின்றார்கள் .... அனால் யாரும் வெளியே சொல்லுவதில்லை .... காரணம் பையனுக்கு காதல் தோல்வி என்றால் பரிதாபமாக பார்க்கும் சமுகம் பெண்களுக்கு தோல்வி என்றால் தீண்ட தகாத பொருளை பார்ப்பது போல் பாகின்றார்கள் ..... இல்லையேல் பெண்கள்தான் அதிகம் காதல் தோல்வி அடைகின்றார்கள் என்பது தெரிய வரும் ..
-
Quote from: Global Angel on January 01, 2012, 10:10:08 PM
பையனால ஏமாற்றப்பட்ட எவளவோ பெண்கள் இருகின்றார்கள் .... அனால் யாரும் வெளியே சொல்லுவதில்லை .... காரணம் பையனுக்கு காதல் தோல்வி என்றால் பரிதாபமாக பார்க்கும் சமுகம் பெண்களுக்கு தோல்வி என்றால் தீண்ட தகாத பொருளை பார்ப்பது போல் பாகின்றார்கள் ..... இல்லையேல் பெண்கள்தான் அதிகம் காதல் தோல்வி அடைகின்றார்கள் என்பது தெரிய வரும்
இந்த கருத்து விவாதத்தில் என்னால் இன் முன்வைக்க படவில்லை
என்னால் இங்கே பதியபடாத வாதத்தை நீங்கள் இங்கே காட்டுவது உகந்ததல்ல பென்செர்
நான் சொனது.
Quote
ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.
இதைதான் ... தரமற்ற கேள்வி கணைகள் தொடுபதைதான் சொன்னேன் ....
இங்கே பதிவிட படாத கருத்துகளை அவர்கள் சொனாதாக வேற பதிவுகளில் இருந்து பிரதி பண்ணுவதை தவிர்த்து கொள்ளுங்கள் அல்லாத பட்சத்தில் இந்த விவாதம் மேற்கொண்டு வாதிக்க அனுமதிக்க படாது என்பதை அறிய தருகின்றேன் .( வீணான மன கசப்புகளை தவிர்க்க )
-
ஹெல்லல்லோ ஏஞ்சல் இங்கே பதிய படாத பதில் இல்லை தான் இதே வாததுக்கு வேறு பகுதியில் நீங்கள் சொன்ன பதில் இதானே எங்க இருந்தாலும் தாங்கள் கூறிய பதில் தானே இதை சுட்டி காட்டுவதில் என்ன தவறு இருக்கு அப்ப இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கிறீர்கள் உண்மைய ஒத்துகொள்ளாமல் தப்பி ஓட இது நல்ல வழி போல ;D ;D ;Dஇந்த விவாதம் மேற்கொண்டு வாதிக்க அனுமதிக்க படாது என்பதை அறிய தருகின்றேன் .( வீணான மன கசப்புகளை தவிர்க்க ) முடிந்தால் வாதிட்டு வெற்றியை தளுவுங்கள் மனகசப்புக்கு இங்க என்ன வேலை????? சரியான பதிலை அளிக்காமல் இந்த வாதத்தை நீக்கினாலும் அதுவே எனக்கு கிடைத்த வெற்றி தானே....!!! 8) 8) 8)
-
அப்படியே இருக்கட்டும் தரமற்ற உங்கள் கேள்விகளுக்கு ( உர சுத்தமா எப்டி சொல்லுவிங்க ) நான் பதில் சொல்ல தயாரில்லை ..... ஏற்கனவே பொது ஒளிபதிவு பத்தி சொல்லியாச்சு உங்கள் விதண்டா வாதத்தை தொடர நான் தயாரில்லை ...
அவசர படாதிங்க நான் சொனது இந்த விவாத களத்தில் ஒருவரால் பதிவு செய்யபடாததை நீங்கள் இங்க பிரதி செய்தால்தான் இந்த விவாதம் அனுமதிக்கப்பட மாட்டாதுன்னு சொனேன் ...... தரமற்ற கேள்விகளை கேட்டு விவாத களம் மூட படுவதால் வெற்றி கிடைகபெறாது முதல்ல பொறுமையா படிக்கணும் பொறுமை முக்கியம் கருத்துகளை சொல்வதற்கு மட்டுமல்ல காதலுக்கும் ...
:)
-
எதை தறமற்ற கேள்வி என்று சொல்ரீங்க (ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே இது ஒரு டாபிக்( அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.) இதையா...???? இது தறமற்ற கேள்வியா இதில் என்ன அநாகரிகமான வார்த்தை இருக்கு இதே ftc forum ல் தானே தாங்கள் கூறியது இதே வீடியோவிற்க்கு...???அது உன்மை தானே...???இடம் வேறு என்றாலும் சம்மந்தம் என்னவோ ஒன்று தான் 3 ஆண்கள் ஆசை அஜீத் ரெமோ பென்சர் இவர்கள் அங்கே கூறியதை தான் இங்கேயும் கூறியிருக்கிறார்கள் தங்களை போல் இடத்திற்க்கு தக்கவாறு கருத்தை மாற்றி கொள்ளவில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேம் 8) 8) 8)
-
vaadhippadharkaaga vaikkapatta oru vidaiyaththai vaaadhikka vendum
vendumaanaal vivaadhikkavendum , vaadhathin moolamaagavo vivaadhathin moolamaagavo
mudikka murpadavendumey ozhiya , munnukkupinn muranaana thagavalgalaalo, illai maraimuga mirattalgaalo
mudikka muyalvadhu muraiyaa enna matravarkey vittuvidugirein..
-
பெயரை பொறுத்தோ , வகிக்கும் பதவியை பொறுத்தோ ,பாலினம் பொறுத்தோ ,
வயதை பொறுத்தோ அல்லாமல் நறுக்கென பதிக்கும் கருத்தை பொறுத்து
நிறுத்தம் வேண்டுமா ,திருத்தம்வேண்டுமா என முடிவெடுக்க பொருத்தமான நடுநிலை
கருதும் ஒருதரோ ,சிலரோ வேண்டும் ! அதுவரை கருத்துமோதல்கள் தவிர்க்கப்படமுடியாதது ....
-
ஆசை அஜித் மிரட்டல் கிடையாது வழக்குதான் .... ஒரு பெண்ணை பார்த்து உனக்கு ஊரு சுத்தின அனுபவம் இல்லை நீ எப்டி பேசலாம் என்றால் அது தரமான கேள்வியா ? விபச்சாரம் செய்பவள்தான் விபச்சாரம் பத்தி பேசலாமா .... அப்படி ஒரு கருவை பத்தி வாதித்தால் அது பற்றி அனுபவம் இல்லை அன்பவதோடு விட்டு வந்து பேசுன்னு சொல்லுவார்கள் போல் இருக்கே இதை ஏற்று கொள்கின்றிர்களா ஆசை அஜித் ? ஒரு பெண்ணை பார்த்து எப்டி நீ கேட்கலாம் என்று கேட்க வேண்டிய நீங்களே அவருக்கு சதமகா கருத்துகளை சொல்வது வருந்த தக்கது ,
இங்கே என்னால் முன் வைக்க படதா கருத்தை நான் சொந்தகா பென்செர் வேறு பகுதில் சொன்ன ஒரு பொதுவான கருத்தை எடுத்து வந்து நான் சொனதாக இங்கே பெச்டுவது வாதத்தின் முரனானா போக்கு .... அதன் ஒழுங்கை மீறுவதாகும் ..... விவாதகளம் எனும் பகுதியில் நான் கூரியவற்றுக்குதன் எதிர் வாதம் பண்ண வேண்டுமே தவிர நான் சிறு கதையில் கூறியதோ பொது ஒளிபதிவில் கூறியதோ கவிதை பகுதியில் கூறியதையோ அல்ல .....அதைத்தான் வலியுறுத்தினேன் ....
ஒழுங்கை மீறும் எந்த விவாதமும் அனுமதிகபடமாடது இது எனக்கும் பொருந்தும் இங்கு பதிவு மேற்கொள்ளும் எவருக்கும் பொருந்தும்.
எனவே இங்கே பதிவினை மேற்கோளும் வாதங்களுக்கே பிரதி வாதம் செயுங்கள் ... அன்றி வேறு பகுதியில் கூறபட்ட பொதுவான கருத்துகளை இங்கே எடுத்து வந்து விதண்டாவாதம் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள் ....
இதற்கு மேல் இந்த விடயத்தை பற்றி பேச வேண்டாம் ... மறப்பது ஆண்கள பெண்கள என்று மட்டும் வாதியுங்கள் போதும் .....
இதற்க்கு மேல் உங்களால் கேட்கப்படும் எந்த கேள்விகளுக்கும் நான் பதில் தர மாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
நன்றி
-
Kadhalai maranthavargal kadhalarkalum kidaiyathu.. kadhalaal marakka pattavargal kadhalar allaathavargalum kidaiyathu.. unmai kadhaluku thoolvi yenbathe kidaiyathu.. enaku oru paadal ninaivuku varukinrathu antha padalin varigalai nan ingu thangaludan pagirnthuka aasai padukiren itho,,,,
Ambalaikum Pombalaikum Avasaram,
Atha Kaathalunu Solluraanga Anaivarum..
Kathal Oru Kannamboochi Kalavaram,
Athu Eppothumae Bothaiyana Nelavaram..
Ambalaikum Pombalaikum Avasaram,
Atha Kaathalunu Solluraanga Anaivarum..
Kathal Oru Kannamboochi Kalavaram,
Athu Eppothumae Bothaiyana Nelavaram..
Appo Aanum Ponnum Othumaiya Irunthuchu
Athu Kaathalilae Olagathayae Maranthuchu
Athu Vaazhtha Pothilum Illa Erantha Pothilum
Athu Pirinjathey Illa, Athu Maranjathey Illa..
Thenam Jodi Jodiyaai, Inga Seththu Kadakumdaa,
Atha Thookumbothellam En Nenju Valikumdaa..
Nee Sollum Kaathalellam Malayeri Pochu Sikku
Thumbalapola Vanthu Poguthu Intha Kaathalu
Kaathalunu Solluraanga, Kandapadi Suththuraanga
Dabbu Køranja, Mabbu Køranjaa, Thalli Pøraanga
Kaathalellamae Oru Kannaambøøchi,
Ithil Aanum Pennumae Thenam Kaanaa Pøchu,
Kaathalilae Tharkulaigal Køranje Pøchu..
Ada Unmai Kaathalae, Illa Šithappu,
Inga Oruthan Šaavuraan, Aana Oruthan Vaazhuraan..
Ada Ènnada Ulagam, Ithil Èththana Kalagam,
Inga Kaathalae Paavam, Ithu Yaar Vitta Šaabham..
Ambalaikum Pømbalaikum Avasaram,
Atha Kaathalunu Šølluraanga Anaivarum..
Inniki Kaathal Èllam Rømba Rømba Maariduchu
Kanna Paakuthu Kaiya Køøkuthu Røømu Kaekuthu
Èllam Mudinja Pinnum Friendunu Šøllikittu
Vaazhuravanga Rømba Perudaa Kaetupaaruda..
Ippa Kaathal Thøthutaa, Yaarum Šaavathey Illa,
Ada Onnu Thøthutaa, Rendu Irukuthu Ulla..
Ipa Èllam Devadaasu Èvanum Illa..
Avan Pøzhuthu Pøkkuku Oru Figure'ra Paakuraan,
Ava Šelavu Pannathaan Oru Løøsa Thaeduraa
Rendu Perumae Inga Pøiyaa Pazhaguraa
Rømba Pulichu Pøchuna Kai Kuluki Piriyiraa..
Avan Pøzhuthu Pøkkuku Oru Figure'ra Paakuraan,
Ava Šelavu Pannathaan Oru Løøsa Thaeduraa
Rendu Perumae Inga Pøiyaa Pazhaguraa
Rømba Pulichu Pøchuna Kai Kuluki Piriyiraa..
parthingala ithula yaara naama kutram solla.. thangaludaiya karuthai koorungal.. ;) :D
-
Spince neeenga yaarunu theriyalai irundhaalum
nanban enum urimaiyil oru sila varigal solla
vizhaigiren!
Thalaippai padichu purinji padhivai podureengalaa
thayavu koorndhu !
-
ஏஞ்சல் நான் அப்படி சொல்லவில்லையே ஊரு சுத்தும் போது தெரியலைல சமூகம் னு பொதுவான கருத்தை தான் நான் சொன்னேன் நீங்கள் தான் சொன்னீர்கள் எனக்கு ஊரு சுத்தும் பழக்கம் இல்லை சுத்துபவர்களிடம் கேலுங்கள் என்று நன்றாக அதை மீண்டும் படித்து பாருங்க முதல்ல உங்களுக்கு பதில் தான் கூறினேன் உங்க பெயரை போட்டு ஏஞ்சல் நீங்க ஊரு சுத்தல அப்றம் எப்டி பேசலாம் அப்டிங்குற கருத்தை நான் பதிக்க வில்லை என்பது குறிப்பிட தக்கது மேலும் வேரு ஒருவர் கூறியதோ அல்லது நானாக பொய் சொன்னதோ இல்லை உங்கள் கைபட எளிதிய பதில் தான் அது எந்த பகுதியானலும் பொதுவான கருத்தாக இருந்தாலும் கருத்து என்னவோ ஒன்று தானே..!!! அங்கு சொன்னதை ஒப்புக்கொள்கிறீர்களா.??? (எந்த வித அனுபவமும் இன்றி எப்படி சொன்னீர்கள் இதானே உங்களுக்கு அநாகரிகமான வார்த்தை னு தெரிஞ்சது) இதோ இதற்கு பதில் நான் காதலில் தோல்வி அடைந்தவன் நான் ஆண்களுக்காக பேச வந்துள்ளேன் எனக்கு அனுபவம் இருக்கு காதலில் அதே பட்சத்தில் தங்களுக்கு அனுபவம் இருக்கா...?? அனுபவம் இல்லாமல் பேச வேண்டாம் அதை தான் கூறினேன் எளிமையாக புரிந்து கொள்ளும் என்னமும் ஆற்றலும் அவசியம் 8) 8)
-
allo allo... intha topicla nanum en karuthai mun vaika virumbukiren...
boys:
benser creation
suresh
aasaiajiith
Remo
girls:
Global Angel
!~Bharathy~!
so total ah 6 peru inga intha topic ah pathi pesirukinga... nallave vivatham panirukinga... ennoda karuthayum kelunga
athavathu naama inga irunthu nilava pathu rasikalam, athu ipadi irukum apadi irukum sollalam but antha nilavuku poi patha than unmaya athu epdi irukunu solla mudiyum , nila matum illa matha planetsm apdithan...
enna solla varen puriyalaya.... athavathu nanum intha topicku karuthu sollalamnu aasai paduren but kadhal vayapattu pirinji irunthu patha than theriyum yaru marakuranga yaru marakulanu... so neenga 6 perum enna pandringana.... en alagukum, nirathukum, puthisali thanathukum porunthura pola (kuripa 22 vayasula irunthu 26kulla irukanum - itha yen solurena neenga kilaviya enkuda kothu vida kudathu parunga athan soluren) oru sumarana ponna ( anjaly, iniya ivangala pola iruntha kuda ok) enaku jodi sethu vachinganna nanga oru 2 , 3 varusham love pannitu apram etho oru fight create pani pirinjiruvom. then konja naal kalichi nengale enga 2 perayum test panni nan antha ponna maranthana illa antha ponnu enna maranthurukanu therinjikalam. apdi 2 perum marakalaina again nanga senthukuvom. apdi yarachum oruthar maranthu poirunthalum unga kelviku answer kidaichirum..
itha yen nan solurena neenga verum vaarthaiyala pesurathuku pathila oru practical exam vacha correcta result theriyum illaya athanalathan intha idea...
intha idea pudikalana solunga nan vera oru idea vachiruken.. athayum soluren
-
kunfumaster தேவையற்ற வாதம் பண்ணுவது விவாதத்திற்கு அழகா ...? விவாத கருவை மட்டும் விவாதியுங்கள்
-
adinga... nan vanthu evalo alaga oru ideava kuduthuruken.... atha vittutu alaga alagu ilayanu lollu pannikitu.....
idaila oruthar kavithai potturukaru, oruthar song potturukaru... naan matum enna pannuven enaku vara karutha poduren ... 8) 8)
-
அடிப்படையில், புரிதலில் பிழை நிகழ்ந்திருக்கு உன்புறம் ரோசா !நான் தலைப்பிற்காக தான் இப்படி பேசினேனே ஒழிய
என் கருத்தோ எண்ணமோ பெண்மைக்கு புறம்பானதோ இல்லை பெண்ணினத்திற்கு புறம்பானதோ இல்லை .
பென்செர் தான் பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாய் கருத்துக்கள்பதிவு செய்துவந்ததால் , அதனை பறைசாற்றும் விதமாக கூறினாரே ஒழிய நீ புரிந்து கொண்ட பொருள் பட கூறவில்லை .இதை அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன்.
-
மிக அருமையாக சொன்னீர்கள் ஆசை அஜித் நன்றி
நானும் பெண்களை தாக்குவதற்க்கு கருத்தை பதிக்க வில்லை இந்த விடயம் என்னுடையது என்பதற்காகவும் இல்லை பொதுவான நல்ல கருத்தை பதித்து நல்ல தீர்ப்பை பெறுவோம் நன்றி
-
ஒரு நாளைக்கு எத்தன பொண்ணுங்கள்ட்ட மொக்க போடுறோம் எத்தனை ஆண்கள பாக்குறோம்
இது தாங்க இன்னிக்கு இருக்குற உலகத்தோட வேகம் இதுல காதல் ங்கறது எங்கயும்
யார்ட்டையும் இல்லைங்க. ஒருவேள திருமணத்துக்கு பிறகு வேணா ஒரு பத்து பதனஞ்சு
வருஷத்துக்கப்புறம் அந்த புரிதல் ங்கற மனப்பான்மை வரும் போது அதாவது தாய்க்கு பின்
தாரம் அல்ல தாய்க்கு பின்னும் தாயே என்ற எண்ணம் ஆணுக்கும், கணவனே கண் கண்ட
தெய்வம், கல்லானாலும் கணவன் என்ற எண்ணம் பெண்ணுக்கும் வரும் போது யாரும்
யாரையும் மறக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சு அது மாதிரி வாழந்த்ட்டு இருக்கவங்க ரொம்ப
கம்மி...மத்தபடி சந்தர்ப்ப சூழ்நிலைன்னு வரும் போது மறக்கறது ரெண்டு பேரும் தான். வேற
ஒன்னும் இல்ல அவங்கள அவங்களே ஏமாதிக்குறாங்க...இன்னும் நிறைய சொல்லலாம்
ஏன்னா இது சாதாரண சப்ஜெக்ட் இல்ல...
-
ஐயா சித்தார்த்தா !
வழக்கம் போல வந்தவங்க பண்ற அதே வேலையை பண்றீங்க , தலைப்புக்கு தகும் தகவலை மட்டும் தருவதை
விடுத்து தேவை இல்லா கருத்தை எல்லாம் ஏன் திணிக்குறீங்க?? தலைப்பை படிங்க பின்னர் தகவலை தொடருங்கள் !
-
கம்மி...மத்தபடி சந்தர்ப்ப சூழ்நிலைன்னு வரும் போது மறக்கறது ரெண்டு பேரும் தான். வேற
Ajith avar vivatham thodarba thaaney solirukaar :o
Ovvoruvarum avarkal karuthai solkiraarkal athil ithu sari ithu thavaru ena solvatharku ethuvum ilai. namakku sari ena paduvathu matravarukku thavaraaga padalaam
athalaal ovvoruvarum thangaludaiya karuthai mattum thelivaakavum uruthiyaakavaum kooralam matravar manam punpadum padiyaana vaarthaikalai tharkalaam
Ajith ithai nan ungalai matum kurippitu kooravillai. Ungal pinnottaththai thodarnthu nan kooruvathal ungaluku kooriyathaga ninaikka vendam ithu ingu pathivitta anaivarukkum pothuvaaga kuriyathu
-
vanakkam Remo.
kooriya karuththu thevaiyaanadhaa thevaiyatradhaa enbadhu dhaan
adikOdida pattirukkindradhey thavira Sari, edhu thavaredhu ena vaathiyaar veylai yaar seidhadhu ?? :-\ thavira ottumoththa padhippugalil oru vari oru vaarthai piram manam konumpadi amaindhadhu endru idam sutti porul vilakkam koduththaal , adharku varuththamum theriviththu , thavarirku thaarmeeega poruppeytru karuththaiyum vilakkikolla thayaar, karutthu koooruvadhil irundhum vilagi kolla thayaar ! kovaththil eriyappatta kanaigal ena ninaikka vendaam !
-
Ajith ithai nan ungalai matum kurippitu kooravillai. Ungal pinnottaththai thodarnthu nan kooruvathal ungaluku kooriyathaga ninaikka vendam ithu ingu pathivitta anaivarukkum pothuvaaga kuriyathu
Ithu ungalukaaga matum kooriyathalla athanaal ungal karuththukalai neengal neekka thevai ethum ilai. ungal mel thavaru ena enakku pattal ungalukku thani thodarpil therivippen (F). Neengal ithu varai intha vivathaththil yaraiyum punpaduthiyathaga enaku theriyavillai (F) vivaathaththai neengal thodaralaam.
-
NA aasai ajitha na apdi innahanga na athula na thodarbu illatha tha pottuten aah oon na thalaipai padinaga padinga nu solringa na muthalla thalaipe thappunga na.. ;) kadhalai marappathu aangala pengala apdingirathu mukkiyam illainga na ... avanga panra kadhal unmaiya iruntha atha yean na avanga marakka poranga na..!? apdi avanga maranthanga na athuku pearu kadhalanga na sollunga parpom ;) evan oruthan unmaiya kadhalichaano avanaala antha kadhala avan saagura varaikum marakka mudiyathunga na so ippo inga na yenna solla vara na ithula aanum pennum kuripidurathu romba thappu. na solren nu thappa ninaikathinga oru veala benser r neenga yaravthu oruthavanga oru ponnu meala kadhal vayapattu manasu odanchi irukalaam...! athanaala kooda neenga ipdi oru thalaipa pottu irukalaam nalla yoschi parunga neenga panna kadhal unmaiya irunthu irukalaam aana antha ponnu kitta apdi illa. so ithe mathiri neriya pear valakai la oru ponnu unmaiya love panni antha paiyen antha ponna kalatti vittu irunthu irukalaam..! so ithula yaaraium kutham solla mudiyathu..
muthalla ungaloda manasa mathavanga kitta kudukum bothu atha avanga pathrama parthupangala nu parthukonga aprama kudunga.athuku thaan na antha song a anga kuduthen. munnalaam jodi jodi ya sethu povanga athu unma kadhalu ippo laam apdi illa oruthan sethu innoruthan uyir valuranga nu.
ne aasai ajith ne ... yenna peasurom apdingirathu mukkiyam illa yetha kurikirom apdingirathu thaan mukkiyam. muthalla tittle a mathungaiya.. kadhala maranthanga na athuku pear kadhala...!!? :P ;D
-
"kadhala maranthanga na athuku pear kadhala...!!?
avanga panra kadhal unmaiya iruntha atha yean na avanga marakka poranga na..!? apdi avanga maranthanga na athuku pearu kadhalanga na sollunga parpom evan oruthan unmaiya kadhalichaano avanaala antha kadhala avan saagura varaikum marakka mudiyathunga"
Posted by: spince
ஸ்பின்ஸ், நீங்கள் சொன்ன இந்த கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எனது வாதமும் கூட இதுவே.
-
காதலோட தனித்துவம் என்னவென்றால் புரிந்துணர்வுதான் .....
இப்படியான காதல் சேராது போனால் அது துன்பம் .....சேர்ந்தால் அதுதான் காதலின் முழுமை ...
ஏஞ்சல் ,நன்றி உங்கள் மேலான இந்த விளக்கங்களிற்கு.
-
குறிப்பு:இந்த தீர்ப்பு ஒரு தனிப்பட்ட நபரின் கருத்து அல்ல online skype வாயிலாக பல ஆண் பெண் நண்பர்களை தொடர்பு கொண்டு கருத்தை கேட்டு அறிந்த பின்னறே இந்த வீடியோ உருவாக்கப்பட்டது...இத்துடன் அந்த கருத்து கணிப்பை நேரத்தை கருத்தில் கொண்டு இணைக்க முடியவில்லை...
spince நண்பா என் மனச நல்ல பாத்துபாங்களானு தெரிஞ்சு காதலிக்கனும் னு சொல்ரிங்க சரி உறங்கினால் விழிப்போம் இது நம்பிக்கைதான் அதே போல் பெண்ணை நம்பும் சில ஆண்கள் நம்பி தானே காதலிக்கிறோம் பெண்கள் மறந்து விட்டு சமுகத்தை காரணம் சொல்ராங்க இது தான் நீதி யா...??? ஆண்கள் அப்படி சமுகத்தின் மேல் பலி சுமத்துவதில்லை அப்போ பிரிஞ்சவங்க லாம் உன்மையாண காதல் இல்லைனு சொல்லுரது தவறு ஏன்னா காதலிக்கும் போது எவரும் பிரிந்துவிடுவோம்னு யாரும் என்னி காதலிக்கிறது இல்ல சில காரணம் தான் பிரிய அப்படி இரிப்பின் எப்படி உண்மையான காதல் இல்லைனு எப்படி ஆகும்...??? உதாரணம் பெத்தவங்களுக்கு பயந்து வேறு திறுமணம் செய்யும் எத்தனையோ பெண்கள் அது உன்மையான காதல் இல்லையா...??? என் தலைப்பு மறப்பது ஆணா பெண்ணா இது தானே தவிற உண்மையான காதலா பெய்யான காதலா என்பது இல்லை கவனியுங்கள் நண்பர்களே...!!!
பாரதிக்கும் இதே பதில் தான் நான் கூறுவது பாரதி இருப்பினும் என் பாராட்டுக்கள் ஒரே மாதிரியான கருத்தை தெரிவிப்பதற்கு மேலும் வாதிடலாம் நன்றி
-
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
விவாதத்தில் அனைவரும் வாதங்களை மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். அந்த வாதம் கொடுக்கப்பட்ட தலைப்பை சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒருவர் தலைப்பை சார்ந்த கருத்துக்களை சொல்லலாம். அது மற்ற உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அமைய கூடாது. அது போல் பதில் கருத்து சொல்லுபவர்களும் விவாதத்தை மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். யாரையும் பெயர் குறிப்பிட்டு அல்லது கேலி செய்யும் விதத்தில் அமையா வண்ணம் பார்த்துக்கொள்வது நலம் . இவையே பொதுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் தொடர வழிவகுக்கும். கருத்து மோதல்கள் இருக்கலாம் அது தனிப்பட்ட நபர்களின் மோதலாக அமைவது முறையல்ல.
அப்படி தனிப்பட்ட நபர்களை இடித்துரைக்கும் அல்லது கேலி செய்யும் வண்ணம் அமைந்த பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளது.ஆரோக்கியமான விவாதத்தை விரும்புபவர்கள் இதை ஏற்றுகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த விவாதம் தொடர்ந்து
சிறப்பான முறையில் அமைய அனைவரும் ஒத்துழைக்குமாறு FORUM சார்பாக கேட்டுகொள்கிறேன்.
-
dear FORUM நீங்கள் பொதுவாக தான் சொன்னீர்கள் என்று கருதுகிறேன் தாங்கள் கூறுயது ஏற்க்க வேண்டிய விசயம் தான் இருப்பினும் ஒருவர் கேள்விக்கு தக்கவாறு பதில் அளிக்க பட்சத்தில் அதை சுட்டி காட்ட முற்படுகிறார்கள் இதில் தவறு இல்லை என கருதுகிறேன் பெயர் குறிப்பிடாமல் சொன்னால் யாரை சொல்லுகிறோம் னு தெரியாது இது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் இடமே தவிர சண்டையிடும் தளம் இல்லை என்பதை நாம் அனைவரும் மனதில் ஏற்க்க வேண்டும் மேலும் விவாதத்துக்கு ஏற்ப பதில் இல்லாமல் திசை மாறும் பட்சத்தில் FORUM ஆகிய தாங்கள் அதை சரி செய்தால் ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து..
ஏஞ்சல் கூறினார்கள் என்வாதத்தில் தவறு இருப்பதாகவும் இந்த வாதத்தை நீக்க நேரும் என்பதாகவும் கூறினார்கள் இது என்னுடைய கேள்வி என்று என்னாமல் நானும் இங்கு உறுப்பினர் என்ற முறையில் தான் வாதிடுகிறேன் என் கருத்தில் ஏதேனும் தவறுதல் இருப்பின் என்னை மட்டும் சுட்டி காட்ட வேண்டுமே தவிர இதை ஒருவரின் கருத்திற்காக நீக்க நேரும் என்னும் தகவலை அறிவித்தது வருத்தத்துக்குறியதும் ஏற்க்க முடியாததும் முறையில்லை என்பதும் இக்கணம் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி தொடர்ந்து வாதிடலாம்
-
பென்செர் விவாத பகுதியில் கொடுக்கப்பட்ட "காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..??"என்ற தலைப்பிற்கே அனைவரும் விவாதம் செய்கின்றனர். நீங்கள் கொடுத்துள்ள வீடியோவில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
GENERAL VIDEO பகுதியில் பிரசுரிக்கப்பட்ட இந்த வீடியோவில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு GLOBAL ANGEL அவருடைய கருத்தை சொல்லிருக்கலாம். . அதை இந்த விவாத பகுதியில் எடுத்துக்கொள்வது முறையாகாது.ஏனெனில் மற்ற பகுதியில் பதியப்படும் பதிவிற்குயார் வேண்டுமானாலும் அவருடைய கருத்தை சொல்லிருக்கலாம். அங்கு தலைப்பிற்கான பதில் மட்டும் இல்லாமல் அதை ஒட்டிய கருத்துக்கள் எதுவாக வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.
ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.
இது நீங்கள் கொடுத்த பதில்.
விபச்சாரத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அதில் அனுபவம் இருக்க வேண்டும் என்று இல்லை. விஷம் குடித்தால் இறக்க நேரிடும் என்பது அதை அருந்தி அனுபவித்து சொல்ல வேண்டும் என்று இல்லை.
மேலே குறிப்பிட்ட போன்ற கருத்துக்கள் எந்த ஒரு பெண்ணிடம் சொன்னாலும் கொஞ்சம் உறுத்தலாகவே தோன்றும். அதன் பின் இரண்டு முறை அவர்கள் இது போன்ற கருத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் " பென்செர் தெளிவோடதன் பேசுறிங்களா....? நீங்கள் பதிந்த பதிவை மீண்டும் சரியாக படிங்கள் ...." என்று Global Angel குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இது போன்ற பிரச்சனைகள் எழும் பொழுது அவற்றிலிருந்து விடுபட்டு விவாதத்தை தொடர செய்ய வேண்டிய முழு பொறுப்பு அவருக்கு உண்டு.
எனவே உங்களின் இந்த கேள்விக்கு அதே போன்ற பதிலை கொடுத்து, அதனால் இந்த பகுதி அர்த்தமற்ற சண்டைக்களமாக மாறுவதை தவிர்க்கும் பொருட்டு , இது போன்ற கருத்துக்களால் விவாதம் தொடர முடியாமல் இந்த தலைப்பின் விவாதம் முற்றுப்பெறும் நிலை வந்தால் அதற்கு யார் ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பதியவில்லையோ அவர்களே பொறுப்பு என்பதை உணர்த்து செயல்படுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எனவே தனி நபரை குறிப்பிடாது , ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பதிவு செய்தால் இன்னும் சிறப்புடன் இந்த விவாதம் செல்லும்.
-
FORUM , yaar endru enakku theriyavillai irundhum avar peychil oru thelivu iruppadhaiyum ,siru nadunilai thanmaiiruppadhaiyum unaramudigiradhu,indha thalaipirku padhivugal thandhadhil benser, ennai,remo vai thavira piridhoru nabhar kaal sadhavigidhamavadhu thalaippai thazhuvi pesinaargal endru ungalaal solla mudiyumaa?
-
நண்பர்களுக்கு வணக்கம் ... இது வரை இந்த நண்பர்கள் இனைய பூங்காவில் நான் கவிதை வாழ்த்து போன்ற பகுதிலேயே எனது கவனத்தை செலுத்தி வந்தேன் ... ஆனால் இன்று இந்த பகுதியில் அனைவரும் வாதிடுவதை பார்த்து அடியேனின் சில கருத்துகளையும் முன்வைத்து செல்லலாம் என்று வந்துள்ளேன் ....
இங்கே கேட்கபட்ட கேள்வி காதலை எளிதில் மறப்பது ஆண்களா பெண்களா ? இதுதான் இங்கே அவரவர் தமது கருத்தை பதுவு செய்து சென்றுள்ளார்கள் எனது கருத்தையும் நான் கூறி விடுகின்றேன் .... காதலில் மறப்பது என்பது உண்மையாக காதலித்த இருவருக்குமே பால் வேற்றுமை இன்றி அது கடினம்தான் வெளியே மறந்ததாக காட்டிகொண்டாலும் ... அவர்கள் மறக்க மாட்டார்கள் ...இங்கே பெண் மறந்து விடுவாள் ஆண் மறந்து விடுவாள் என்று வாதம் பண்ணுவது ஏற்றதாக இல்லை ... காரணம் காதல் என்பது மனது சமந்தபட்ட விடயம் எனவே அதை அவர்கள் உள்ளத்தில் சென்று யாரும் பார்த்துவிட முடியாது எனவே ஆண்தான் மறக்கின்றான் ... இல்லை பெண்தான் மறக்கின்றாள் என்று கூறுவது பொருந்தாத வாதம் என்று கூறி நிறைவு செய்கின்றேன் .
ஆசைஅஜித் எங்கேயும் உங்கள் கருத்தை தெளிவாக உறுதியாக சொல்லவில்லை வெறும் பாடல் வரிகளை இல்லை கற்பனை வரிகளை முன் வைதுளீர்கள்... பாரதி காதலை பற்றி சொனவை ஏற்க கூடியது ஆனால் சேரமுடியதவர்கள் உண்மையாகவே காதலிக்கவில்லை என்பதில் முரண் படுகின்றேன் நான் . ரெமோ உங்கள் கருத்தை நீங்கள் தெரிவித்தது நன்று என் பதில் மனதை யாரும் எடை போடா முடியாது என்பதுதான் ... குளோபல் நீங்கள் சொன்ன காதலித்தவர்கள் கடைசிவரை மறக்க மாடார்கள் என்ற karuthil எனக்கு உடன்பாடு உண்டு .. பென்செர் உங்கள் கருது பல இடங்களில் முரண்பட்டு கொள்கிறது ... காதலித்தால்தான் இங்கே பதில் கொடுக்க முடியும் என்று இல்லை ... அனுபவபாடம் கேள்வி பாடம் கண்டுணர் பாடம் இப்படி பல இருக்கு அனுபவித்துதான் சொல்ல வேண்டும் என்று இல்லை ... நடப்பதை பார்த்தும் சொல்லாம் .( forum சொன்னவை இங்கு பொருந்தும் ) spince உங்கள் கருதும் மேலோட்டமான கருத்துகள் அதே போன்று kungfumaster விவாதத்துக்கு ஒவ்வாத கருத்து பரிமாற்றம்..
இங்கே யாரும் கொடுக்கபட்ட கருத்தை விவாதித்ததாக தோன்றவில்லை தனி நபரின் தகுதி தேர்வு போல் விவாதித்து கொண்டு போகின்றார்கள் ... இந்த விவாத கருத்து வாதிட உகந்ததில்லை என்பது என் வாதம் தேசத்தில் வாதிட எவளவோ பயனுள்ள விடயங்கள் இருக்கும் போது முடிவே இல்லாத இனம் கண முடியாத காதலுக்கெல்லாம் உங்கள் கருத்துகளை நேரத்தை விரயமாக்குவது அவசியமா என்று தீர்மானித்து தொடருங்கள் இது என் தாழ்மையான கருத்துகளும் வேண்டுகோளும்
நட்புடன்
வானவில்
-
அடிப்படையில், காதலில் ஏமாற்றபட்டு ,கைவிடப்பட்ட பெண்கள் இருகிறார்கள இல்லையா என்பது இல்லையே வாதம் ? காதலை எளிதில் மறப்பது ஆண்களா? பெண்களா? அடிப்படை அஸ்திவாரத்திற்கு வருவோமே ?காதலை ,காதலனை எளிதில் மறப்பது மட்டுமல்ல மறப்பது,மறுப்பது,மறைப்பது எல்லாம் பெண்களே ! கைபுண்ணிற்கு கண்ணாடி எதற்கு ?
VAAZHUM UDHAARANAMAAI ORUVAR THAM ANUBAVATHTHAI AVASTHAIYAI
INDHA AVAIYIL AVIZHTUVAITTHU PADUM AVALAM KANDUMAA KARUTHTHAI SOLVEN ?
-
VAANAVILLIN PADHIPPINIL AAAN RASITHTHU UDANPADUVADHU
இங்கே யாரும் கொடுக்கபட்ட கருத்தை விவாதித்ததாக தோன்றவில்லை தனி நபரின் தகுதி தேர்வு போல் விவாதித்து கொண்டு போகின்றார்கள் ... இந்த விவாத கருத்து(INGU) வாதிட உகந்ததில்லை என்பது என் வாதம் . NAAN IDHAI VAZHI MOZHIGIREN.
-
வானவில் நீங்க சொல்றதும் ஏற்க்க கூடிய விசயம் தான் ஆனால் (இது ஏற்க்க முடியாத ஒன்று அப்படி பார்த்தால் எல்லாமே நேரத்தை விரயமாக்குவது தான் தாங்கள் இப்பொது கூறியது கூட அப்படிதான் )
(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/Untitleda.png)
வானவில் கூறியது (இந்த விவாத கருத்து வாதிட உகந்ததில்லை என்பது என் வாதம் தேசத்தில் வாதிட எவளவோ பயனுள்ள விடயங்கள் இருக்கும் போது முடிவே இல்லாத இனம் கண முடியாத காதலுக்கெல்லாம் உங்கள் கருத்துகளை நேரத்தை விரயமாக்குவது அவசியமா என்று தீர்மானித்து தொடருங்கள் இது என் தாழ்மையான கருத்துகளும் வேண்டுகோளும்
மேலும் இப்படி வாதிட்டு கொண்டே போகுமே தவிர இதற்க்கு தீர்ப்பு என்று ஒன்று இல்லை என்பதை அட்மின் ஒருவரால் நான் அறிய கண்டேன் தீர்ப்பே இல்லாத ஒரு விசயத்துக்காக நான் வாதிடுவதை விரும்பா வண்ணம் "காதலை எளிதில் மறப்பது பெண்கள் தான்" என்று கூறி இத்துடன் விடை பெறுகிறேன் ஆண்களுக்காக வாதிட்ட ரெமோ ஆசை அஜித் இவர்களுக்கு என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்
-
இங்கு தலைப்பை தவிர்த்து மற்றவர்கள் தங்கள் கருத்தை பதித்ததை போல் அட்மின் அவர் கருத்தை சொல்லி இருகின்றார் , "காதலை எளிதில் மறப்பது பெண்கள் தான்" என்று கூறி இத்துடன் விடைபெறுவதாய் சொன்ன்னது சரி ,ஆனால் தீர்ப்பு இல்லாத ஒரு விஷயம் என்று தீர்மானித்தது சரி ஆகாது .சரியான தீர்ப்பை பெற தகும் இடம் இது இல்லை என்றோ,அல்லது சரியான தீர்ப்பை இங்கு பெற தகும் தலைப்பு இது இல்லை என்றோ சொல்லலாம் ! எது எப்படியோ நானும் எடுக்க நினைத்த முடிவு இதுதான் ! வாழ்த்துக்கள் பென்சர் !
-
ஆசை அஜீத் இந்த வாதம் மட்டும் இல்லை வாதக்களத்தில் பதியப்படும் அனைத்து வாதங்களும் வாதிட மட்டும் தான்.....தீர்ப்பு வழங்கபட மாட்டாது என்ற தகவலை நான் தற்போது தான் அறிந்த வண்ணம் விடை பெருகிறேன்
-
கண் கெட்டபிறகே சூரிய நமஸ்காரம் :o. நானும் அதை வழிமொழிந்து
வெளிநடப்பு செய்கிறேன் !
-
ஆசை அஜித் .. காதலை எளிதில் மறப்பது ஆண்களா பெண்களா என்று கேட்கின்றீர்கள் அப்டிதானே..!?
இதற்கு மட்டுமே நான் பதில் உரைப்பது என்றால் இதோ..
முதலில் தாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஆசை அஜித் அவர்களே.. அதாவது அமிரிக்கா
போன்ற நாடுகளில் ஆண்களிற்கு இருக்கின்ற சமசீர் பெண்களுக்கும் இருப்பதை போன்று ஒரு வேலை
நம் நாட்டில் உள்ள பெண்களுக்கும் இருந்து இருந்தால் இதற்கு பதில் கிடைத்து இருக்கலாம்..!
ஏன் என்றால் ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் நம் நாட்டில் பெண்களுக்கு சற்று குறைவே. ஆண்கள்
காதலித்தால் அதை ஒரு பொருட்டாகவே எடுக்காத சமுதாயம் அதுவே பெண்கள் காதலித்தால் அதை
பார்க்கும் கண்ணோட்டம் வேறு. கூடவே ஆண்களை விட இதில் பெண்களுக்கே பாதிப்பு அதிகம்.
ஒரு ஆண் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று கூறி வேறு ஒரு பெண்ணை திருமணம் முடிக்க முடியும்..
அதுவே ஒரு பெண் தான் ஒரு ஆணை காதலித்தேன் என்று கூறி அவளால் வேறு ஒரு ஆணை திருமணம்
முடிக்க முடிமா..? அப்படியே முடிந்தாலும் அவளை மனம் முடிக்க முன் வரும் ஆண்கள் மிக குறைவு.
இன்னும் சொல்ல போனால் எத்தனையோ பெண்கள் தங்கள் காதலை மனதில் பூட்டிக்கொண்டு அதை வெளியே
சொல்ல முடியாமல் இரவு நேரங்களில் எல்லோரும் உறங்கிய பின் அதை நினைத்து அழுதுகொண்டு தான் இருகின்றார்கள்.
ஆனால் அது எதுவும் வெளியே தெரிவது இல்லை ஏன் என்றால் அவள் பெண்.
ஆதலால் ஆண்கள் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் அவளை மறக்க முடியவில்லை என்று வெளிப்படையாக
கூறிகொள்வதால் அவர்களால் காதலை மறக்க முடிய வில்லை என்று நமக்கு தெரிகின்றது. அனால் பெண்கள் அப்படி
அல்ல சமுதாயத்திற்கு பயந்து அவர்கள் தங்கள் காதலை தங்கள் மனதிற்குள்ளே அதை புதைத்துகொல்வதால் அவர்களின்
காதலின் புனிதம் வெளியே தெரிவது இல்லை. ஒரு அருமையான பாடலை நன் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்..
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசு தான் யா..
அடி அம்மாடி அதன் ஆழம் பர்த்ததாறு
அடி ஆத்தாடி அத பார்த்த பேரே கூறு நீ ..
தற்போது உள்ள தலைப்பை பற்றி விவாதம் நடத்தி அதற்கு தக்க விடை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த நாடு
வல்லரசு நாடான அமெரிக்க தான்.
சரி தற்பொழுது நான் கூற வருவதை கூறி விடுகிறேன்..
காதலை நான் மறந்து விட்டேன் என்று வெளி கூறி அதை மறந்த பெண்களும் இல்லை..!
காதலை நான் மறக்க வில்லை என்று வெளி கூறி அதை மறந்த ஆண்களும் இல்லை..!
-
ingu ellorum kathalai marapathu aana penna eandru wathidugirirgal... ethil ennudaya karuthu enna vendral... pengalum ellai aangalum ellai... amnisia patients mattume kathalai maranthu vidugirargal.. ;D ean eandraal amnisia yaruku vendumanalum like aangal allathu pengal ewarku vendu mendralum earpadalam.. so anaithaiyum maranthu vidum amnisia noi konda boys and girls kathalaiyum kathalanaiyum serthu maranthu vidugindranar... epudiiiiii nanga lam room pottu sinthipom la ;)
-
Safa ithu kuda nala iruke enakum amnisia vantha romba nala irukum athuvum ungakita na kadan vangina pinbu vara vendum
-
Safa appo neakku yennamo oru misiya vanthu iruku pola paren naa un kitta pona varusam vanguna 30,000 neabagame illa ;) ;Dyepudi neengalaam room pottu thaan yosipinga naangalaam room a sonthama vangi a yosipom la.. :P