FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: thamilan on September 01, 2011, 11:21:02 PM

Title: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on September 01, 2011, 11:21:02 PM
கடவுள் இருக்கிறாரா இல்லையா? இன்னும் புரியாத புதிர் தான் கடவுள். இருக்கிறார் என்று ஒரு கூட்டமும், இல்லை என இன்னொரு கூட்டமும் பிரசாரம் செய்கின்றனர்.
வாருங்கள் நாமும் கூடி விவாதிக்கலாம். மனதில் இருப்பதை இங்கே பயப்படாமல் பேசலாம்.
உங்களுக்கு பதில் சொல்ல நானும் தயாராக இருக்கிறேன்.
நான் இரண்டு பக்கத்துக்கும் எதிராக பதில் சொல்ல இருப்பதால் இதை நான் தொடங்கி வைக்கவில்லை
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Arya on September 01, 2011, 11:55:23 PM

kadavul kandipa irukar
kadavul na maaperum sakthi irukum magic therunchurukum nu sola varala
Mathavankaluku ethirparpinri uthavura elorum kadavul than
Oruthar ratha thaanam pani oruvar uyirai kaapatrinal avaruku uyir thantha ivar kadavul than
Patiniyal vaadum oruvaruku unavitu avarin patiniyai pokiyavanum kadavul than
Than rathaththal pirithuvaikapatu avathipadum muthiyorai nan petror pola panividai seipavanum kadavul than
Petravarkalal thooki eriya pata mazhazhai yai than kuzhanthaiyaai paavipavanum kadavul than
Verum thozhil entru paaramal panathai paarkamal palarathu uyirai kaakum maruthuvan kadavul than
Thaai naatirkaka, thaai naatil vazhum makkalukaka than uyirai vidum por veeran kadavul than
Jaathi, matham paaramal poi koora theriyatha thavaru seiya theriyatha kuzhanthai kadavul than
Than varunthinaalum matravar varuthaththai pokki avarkalai sirika vaika muyarchipavan kadavul than
Thanaiye varuthi than rathathai unavaaka kodukum thaai kadavul than
Thanai vida arivaliyaka, thanaku kidaitha maryathaiyai vida ivan athikam peravendum ena ninaikum thanthai kadavul than
Naam uyir vaala than uyir vidum thaavarankal kooda kadavul than
Ithelam ilama nama uyir vaazha thevaiyana neer, nilam , kaatru pontra panchapoothankal kuda kadavul than


ithanai kadavulkal irukum pothu kovilil irupathu matumthan kadavul nu nenatchu mathasandai podurathu mooda nambikaikal vaikurathu thavaruthan


Pin kuripu:  Naan nathikan ilai , enaku kadavul mel nambikai undu
[/b]
[/color]
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on September 02, 2011, 12:17:21 AM
ஆரியா
நான் கேட்டது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தான். யார் கடவுள் என்று கேட்கல.நீங்க சொன்னபடி ஒருத்தருக்கு கஸ்டத்தில் உதவும் ஒவ்வொருவரும் கடவுளுக்கு சமானம். but அவங்க கடவுள் இல்ல.

ithanai kadavulkal irukum pothu kovilil irupathu matumthan kadavul nu nenatchu mathasandai podurathu mooda nambikaikal vaikurathu thavaruthan

நீங்க கோவிலில் கடவுள் இருக்கிறாரு என்று ஒத்துக் கொள்கிறீர்களா? இல்ல இல்லை என்று சொல்கிறீர்களா?

Mathavankaluku ethirparpinri uthavura elorum kadavul than
Oruthar ratha thaanam pani oruvar uyirai kaapatrinal avaruku uyir thantha ivar kadavul than
Patiniyal vaadum oruvaruku unavitu avarin patiniyai pokiyavanum kadavul than
ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடும் போது அந்த இன்னொருவர் இருப்பதாகத் தானே அர்த்தம்.

நாம் topica ப‌த்தி பேசுவோம். க‌ட‌வுள் இருக்கிறாரா இல்லையா?
இருந்த்தால் இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை சொல்லுங்க‌ள்,
இல்லை என்றால் அத‌ற்கான‌ கார‌ண‌த்தை சொல்லுங்க‌ள்

Pin kuripu:  Naan nathikan ilai , enaku kadavul mel nambikai undu

ச‌ரி க‌ட‌வுள் இருக்கிறார் என்று எதை வைத்து சொலுகிறீர்க‌ள்
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Global Angel on September 02, 2011, 01:30:53 AM
நம்மை மீறிய ஒரு அமானுஷ சக்தி இருக்கிறது .. அதன் ஆற்றல் ஆக்கம் எல்லாம் நம்மால் எடை போட முடியாத ஒன்றாக இருக்கிறது ... நம்மை கட்டுப் படுத்துகிறது ..... நம்மை வழி நடத்துகின்றது ... அதுவே கடவுள் என்றால் கடவுள் இருப்பது என்பது உண்மைதான் ..... நமக்கு எல்லாம் ஒரு தாய் தந்தை இருக்கும் போது... முதல் மனிதனுக்கும் ஒரு தாய் தந்தை இருக்கத்தானே வேண்டும் .. அந்த மனிதனை படைத்தவன் ஒரு அமானுஷ சக்தி உள்ளவன்தனே ...ஒரு சிறிய விதையில் ஒரு மரம் வளர்ந்து பூத்து காய்த்து கலகலக்கும் சூட்சுமத்தை வைத்தவன் எல்லாம் வல்லவனாகத்தானே இருக்க வேண்டும்... உன்னால் முடியுமா ? என்னால் முடியுமா ..? இல்லைதானே ... அப்போ அதை படைத்தவன் பிரமிக்கத்தக்க ஒரு சக்தி உள்ளவன்தனே .... அப்போ அது கடவுளாகதானே இருக்க முடியும் ..

ஆலயங்களில் கடவுள் இருகின்றத இல்லையா தெரியவில்லை ...  மனிதர்களுக்கு மனதை ஒரு வழிப்படுத்த ஒரு இடம் தேவை படிக்கிறது
அந்த இடமாக ஆலயத்தை பயன்படுத்துகின்றான் ... அங்கே எல்லாம் வல்ல சக்தியாகிய கடவுள் வாழ்வதாக நம்பிக்கை கொள்கிறான்
நம்பிக்கைதான் வாழ்க்கை ...கடவுள் இருக்கு நம்புவோம் .
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on September 02, 2011, 01:48:30 PM
ஏஞ்சல்
நீங்க சொல்லும் சக்தி அது கடவுளாக இருக்கனும் என்று அவசியம் இல்லை. உல‌க‌த்தை ப‌டைத்த‌து இறைவ‌ன் என்று வேத‌ங்க‌ள் சொல்கின்ற‌ன‌. உல‌க‌ம் அணுக்க‌ளால் உருவான‌தாக‌ விஞ்ஞான‌ம் சொல்கிற‌து. இறைவ‌னை க‌ண்ணால் க‌ண்ட‌வ‌ர் எவ‌ரும் இல்லை.இறைத்தூதுவ‌ர்க‌ளான‌ யேசு, ந‌பிக‌ள் நாய‌க‌ம் இவ‌ர்க‌ள் கூட‌ க‌ண்ணால் க‌ண்ட‌தாக‌ ம‌த‌ங்க‌ள் சொல்ல‌வில்லை.
விஞ்ஞான‌ம் எல்லாவ‌ற்றையும் நிருபித்திருக்கிற‌து.
க‌ண்ணால் காணாத‌து நிஜ‌மா இல்லை உண்மை என்று நிருபிக்க‌ப்ப‌டுவ‌து நிஜ‌மா?

ந‌ம்மை மீறிய‌ ச‌க்திக்குப் பெய‌ர் க‌ட‌வுள் என்றால் மின்சார‌மும் க‌ண்ணுக்கு தெரியாத‌ ச‌க்தி தான். அது க‌ட‌வுளா? ந‌ம்மை மீறிய‌ ச‌க்தி என்று எதும் இல்லை. ந‌ம் ச‌க்திக்கு மீறிய‌ ச‌க்தி இருக்கிற‌து. ஒரு விமான‌த்தை க‌ண்டு பிடிப்ப‌து என‌து ச‌க்திக்கு மீறிய‌து. ஆனால் அதை இன்னொருவ‌ன் அவ‌ன‌து ச‌க்கியால் உருவாக்குகிறான்.
முத‌ல் ம‌னித‌னுக்கு தாய் த‌ந்தை இருந்த்திருக்க‌ வேண்டும் என்று சொல்லுகிறீர்க‌ள். இறைவ‌ன் ஒருவ‌னே, எல்லா வேத‌ங்க‌ளும் இதைத் தான் சொல்லுகின்ற‌ன‌. அப‌டி இருக்கும் போது நீங்க‌ள் சொல்லும் தாய் யார்?

ம‌னித‌ன் குர‌ங்கின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி. விஞ்ஞான‌ம் இப்ப‌டிதான்
சொல்கிறது. ம‌னித‌ன‌து குண‌ங்க‌ளை பார்க்கும்போது அது உண்மையாக‌வே தெரிகிற‌து.

தாய் த‌ந்தை இல்லாம‌ல் குழ‌ந்தை இல்லை. அன்று அப்ப‌டித்தான் நினைத்தோம். ஆனால் ஒரு குழாய்க்குள் தாயும் இல்லாம‌ல் த‌ந்தையும் குழந்தையை உருவாக்கிக் காட்டிய‌து விஞ்ஞான‌ம்.

இன்னும் நிறைய‌ சொல்ல‌லாம். ம‌றுப‌டி தேவைப‌டும்.
ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை. அது உண்மை தான். க‌ல் ஒருவ‌னுக்கு க‌ட‌வுள். இன்னொருவ‌னுக்கு வாச‌ல்ப‌டி. அது அவ‌ர் அவ‌ர் ந‌ம்பிக்கை. அத‌ற்காக‌ ந‌ம்பிக்கையே உண்மையாகாது.

க‌ட‌வுள் இல்லை என்று ந‌ம்புவ‌தும் ஒரு ந‌ம்பிக்கை தானே ஏஞ்ச‌ல். அப்போ அது உண்மையா?

Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Yousuf on September 02, 2011, 04:21:14 PM
ஏக இறைவனின் திருப்பெயரால்.....

இறைவன் இருக்கிறான் எனபது என்னுடைய வாதம் அதில் உறுதியாகவும் இருகின்றேன்.

முதலில் இறைவனை பற்றி நாம் விளங்கி வைதுருப்பது தவறு சிலர் இறைவனை மனிதர்களை போன்று கருதுகிறார்கள் மனிதனை இறைவன் ஆகுவதற்கு இது தான் அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு. தமிழன் இறைவன் இல்லாமல் இந்த உலகம் எப்டி வந்தது என்று சிந்திக்க வேண்டும். ஒரு கைபேசியை எடுத்து கொள்வோம் உதாரனதிரக்காக அந்த கை பேசி எப்படி வந்தது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். இதை ஒருவர் தயாரித்துள்ளார் என்று தானே சொல்வீர்கள் அது தானே பகுத்தறிவு. அந்த கைபேசியை தயாரித்த நபரை நீங்கள் பார்த்துள்ளீர்கள? பிறகு எப்படி அதை ஒரு நபர் தயாரித்துள்ளார் என்று கூறுவீர்களோ அதே போல் இந்த அகிலத்தையும் பாருங்க தமிழன் இப்படி பட்ட பிரமாண்டமான அகிலத்தை எப்படி தானாக தோன்றியது என்று கூற முடியும். ஒரு கை பேசி அதை விட ஒரு அற்ப பொருளான ஒரு சோறு எடுக்குற டப்பாவை எடுத்தாளும் அது தானாக தோன்ற முடியாது அதை படைக்க கூடிய படைப்பாளன் தேவை என்றிருக்கும் பொழுது இந்த உலகம் எப்படி இறைவன் படைக்காமல் தானாக தோன்றி இருக்க முடியும் இது தான் இறை மறுப்பாளர்களின் பகுத்தறிவா?

நீங்கள் சொன்னீர்கள் தமிழன் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று அதை அறிவியல் பூர்வமாக இது வரை செயல்முறையில் யாரும் நிரூபிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் சார்லஸ் டார்வின் உடைய இந்த கருத்து பொய் என்று தற்பொழுது அறிவியலாளர்கள் கூறுகிறாகள் இதை பற்றி விவரம் தேவை என்று நீங்கள் கூறினால் அடுத்த பதிவில் சமர்பிக்கிறேன். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினால் இப்பொழுது இருக்கும் குரங்கில் இருந்து மனிதல் தோன்ற வேண்டும் ஏன் தோன்ற வில்லை? அடுத்து குழந்தைகளை அறிவியல் பூர்வமாக (test Tube ) பேபி என்று சொல்ல கூடிய அறிவியலின் வளர்ச்சியின் காரணமாக உருவாகுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். எந்த ஒரு கருப்பொருளும் இல்லாமல் இவர்கள் குழந்தையை இவர்கள் உருவாகினார்களா? அல்லது ஒருவரின் விந்தணுவையும் பெண்ணின் அண்டனுவையும் வைத்து உருவாகினார்கள சற்று சிந்திக்க வேண்டும். எந்த ஒரு பொருளும் இல்லாமல் குழந்தையை அல்லது வேறு எதையும் மூல பொருள் இல்லாமல் உருவாகியவன் தான் இறைவன் மனிதர்கள் அப்படி உருவாக்கவில்லை என்பதை இந்த இடத்தில நான் பதிவு செய்கிறேன்.

இறைவன் உள்ளான் என்பதற்கு இன்னும் பல அத்தாட்சிகளை என்னால் இறைவன் நாடினால் சமர்பிக்க முடியும். உங்களுடைய பதிலை எதிர் பார்த்து அடுத்த பதிவை தொடங்குகிறேன் இறைவன் நாடினால்.
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Arya on September 02, 2011, 04:32:47 PM
Tamilan naan kadaavul irukar nu than soluren, athanaal than kadavul enthentha uruvathula irukar nu soluren
Neenka sonathu pol intha ulakam anukkalaal anathu than aanal antha anu uruvanathu epadii????
Naan kadavul verum kovilil matum ila ella idankalilum irukarnu soluren

Yosuf kuriyathu pola kurankilirunthu manithan vanthan enpathu oruvarudaiya karuthu athai epadi naam etru kolvathu ??? anaithayum nirupiththula vingyanam ithai nirupithulatha??

ipa neenka kadavul ilanu sola varinkala???
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Global Angel on September 02, 2011, 07:55:32 PM
தமிழன் ... தாய் தந்தை இரண்டும் ஆனவன் இறைவன் ...  இறைவன் ஆணா பெண்ணா ...? இந்த ஆராய்ச்சியை எல்லாம் கடந்தவன்தான் ஒருவன் அவன் இறைவன் ...விஞ்ஞான வளர்ச்சியில் குழந்தை தாய் தந்தை இல்லாமல் உருவாக்க படுவதாக சொல்கிறீர்களே ... ஆணுடைய விந்தும் பெணுடைய கருவும் இல்லாமல் சாத்தியமாகி உண்டா..? அந்த சிறிய கருவில் நம்மால் விளங்க முடியாத ஒரு சூட்சுமத்தை வைத்திருக்கும் ஒருவனே இறைவன் ... நீங்கள் சொல்வதுபோல் மின்சாரம் கண்ணுக்கு தெரியாத சக்தி ... அந்த மின்சாரத்தை கண்டு பிடித்தவன் மனிதனாக இருக்கலாம் அதை நீரினுளும் மின்சாரத்தை உருவாக கூடிய பிற சக்தியுளும் வைத்தவன் யாரு மனிதனா ...?...
          குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற விஞ்ஞான விளக்கங்கள் டார்வின் கொள்கைகள் தகர்க்கப் பட்டு வருவதாக அண்மையில் நான் படித்துள்ளேன் ....குரங்கில் இருந்து மனிதன் தோன்றினால் மனிதனில் இருந்து குரங்கும் தோற்றம் பெறவேண்டுமே ....எங்கயாவது அப்டி தோற்றம் பெற்று உள்ளதா ..... சரி குரங்கில் இருந்தே மனிதன் பரிணாமம் பெற்றான் என்றே வைத்துகொள்வோம் ..... அப்போ அந்த குரங்கு எப்டி தோற்றம் பெற்றது ...?



உதாரணமாக ஒரு விதையில் இருந்து மரம் தோன்றி காய்த்து கனிந்து பழமாகிறது அல்லவா ... அது அந்த விதையில் இருந்து வந்தது ... எனவே அந்த மரம் பழத்தின் ஊடாக அதே விதையை பிரசவிக்கும் போது .... குரங்கில் (விதையில்) இருந்து தோன்றிய மனிதனில்  (மரம்) இருந்து மீண்டும் ஏன் குரங்கு ( விதை ) பிரசவிக்க படவில்லை ....?

 வேதங்கள் இறைவன் ஒருவனே என்றுதான் சொன்னது அது ஆணா  பெண்ணா ? எங்காவது சொல்லி உண்டா ...... இந்து மகத்தில் ஆண் பெண் சேர்ந்து அர்த்தநாரிச்வேர்  எனும் ஒரு அம்சம் இருக்கும் போது என் அந்த இறைவனால் முதல்குழந்தை உருவாக்க பட்டு இருக்க கூடாது ...

நம்பிக்கைதான் வாழ்க்கை .... கல்லு கடவுளாக தெரிபவனுக்கு கடவுள் தான் வாழ்க்கை ... கல்லு வீடாக தெரிபவனுக்கு வீடுதான் கடவுள் வாழ்க்கை நம்பிக்கை .... அந்த வீடு உடைந்து போனால் (வாசல்படி ) அவன் இடிந்து போகவில்லையா .. அது அவன் வாழ்கையாக தெரிவதால்தானே அவன் நம்பிக்கையாய் தெரிவதால்தனே அதன் இழப்பில் உடைந்து போகிறான் .... நம்பிக்கையின் உருவங்கள் மாறி இருக்கலாம் .... அனால் அதன் செயல்திறன்  தாக்கம் ஒன்றாகவே இருக்கும் ...ஒருவனுக்கு கடவுள் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இநோருதனுக்கு இல்லை என்பதில் நம்பிக்கை ... இங்கே நம்பிக்கை சார்ந்த விடயம் வேறாக இருபினும் நம்பிக்கை என்பது இருக்கத்தானே செய்கிறது ...
                            கடவுள் இல்லை என்பதற்கு ஏதும் ஆதாரங்கள் உண்டா ... ...


Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on September 03, 2011, 12:06:22 PM
உங்க மூனுபேருக்கும் நான் பொதுவா பதில் சொல்லுறேன்.
நம்பிக்கை தான் வாழ்க்கை. அது உண்மை தான். அந்த நம்பிக்கையில தான் உலகம் சுழழுது.
நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க.

உதாரணத்துக்கு, எனக்கு அழகா தெரியும் ஒரு பொண்ணு ஆரியாவுக்கு ஆழகில்லாம தெரியலாம். யூசுப்புக்கு சுமாராக தெரியலாம். நான் அந்த‌ பொண்ணு அழகி என்று நம்புறேன். ஆரியா அழகில்லை என்று நம்புகிறார். யூசுப் சுமார் என்று நம்புகிறார். ஒரு பொண்ண மூன்று பேர் மூன்று விதமா நம்புறோம். நமக்கு நமது நம்பிக்கை தான் பெரிது. ஆனால் அந்த‌ பொண்ணு ஒன்றில் அழகாக இருக்கனும். இல்ல அழகில்லாம இருக்கனும். இல்லாட்டி சுமாரா இருக்கனும். இதில் மூன்றில் ஒன்று தான் சாத்தியம்.
நம்பிக்கை அனைத்தும் உண்மை ஆகிடாது. இதற்கு நான் சொன்னது ஒரு உதாரணம்.

உலகம் இரண்டு நியதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.ஒன்று இயற்கையின் நியதி. மற்றது மனித நியதி. சில செயல்கள் மனித நியதிக்கு உட்பட்டது.மற்றது மனிதனுக்கும் அப்பாற்பட்டது.
அது இயற்கயின் நியதி.இந்த இயற்கையின் நியதியை தான் கடவுளாக வர்ணிக்கிறோம்.

நாம் ஒரு சிலையை வடிப்பெதென்றால் கூட அதை அணுஅணூவாக அழகாக செதுக்கிகிறோம். ஒரு கவிதையை எழுதுவது என்றால் கூட அதை வரிக்கு வரி பிழைகளைத் திருத்தி அழகாக எழுதுகிறோம். மனித படைப்பு ஒரு உன்னதாமான படைப்பு. அதை படைத்தது எல்லாம் வல்ல இறைவன் என்றால் ஏன் இந்த அலங்கோலம்.
அதுவும் வல்லமை படைத்த இறைவன். மனிதனை படைத்து அவனை சீரழிப்பதை விட படைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா? ஒரு உலகை படைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக‌
அழிப்ப‌தை விட‌ ப‌டைக்காம‌ல் இருந்திருக்க‌லாம் அல்ல‌வா?

உல‌கில் இத்த‌னை அழிவுக‌ள் ந‌ட‌க்கிற‌து. ப‌சி ப‌ஞ்ச‌ம் ப‌ட்டினி என‌ ம‌னித‌ன் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொல‌ப‌டுகிறான். இன‌வெறி ம‌த‌வெறி இப்ப‌டி த‌ன‌க்குத்தானே ச‌ண்டையிட்டு சாகிறான்.இதை எல்லாம் நிறுத்த‌ ஏன் இன்னும் இறைவ‌னால் முடிய‌வில்லை?
இன்று வ‌ரை ஏன் அவ‌ன் யார் க‌ண்ணுக்கும் தெரிய‌வில்லை?

அதை விடுங்க‌ள், இன்த‌ ம‌னித‌னை ப‌டைத்த‌ இறைவ‌ன் தான் எந்த‌ ம‌த‌ம் என்று ச‌ரி சொன்னானா? ஆயிர‌ம் ம‌த‌ங்க‌ள், ஆயிர‌ம் கொள்கைக‌ள். க‌ட‌வுலை ந‌ம்பும் ம‌த‌த்த‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ இதில் ப‌ல‌ப்ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள். ஒரு ம‌த‌த்துக்குள்ளேயே நூறு பிரிவுக‌ள்.
ஒவ்வொரு ம‌த‌த்த‌வ‌னும் த‌ன் க‌ட‌வுள் தான் உண்மை என்று ந‌ம்புகிறான். ம‌ற்ற‌ ம‌தத்தை பொய் என்கிறான். நீங்க‌ள் சொன்ன‌ ந‌ம்பிக்கை இது தான்.

அர்த்த‌நாதிஸ்வ‌ர‌ர் க‌தையை யார் சொன்ன‌து?  இந்த‌ வேத‌நூல்க‌ளை எழுதிய‌து யார்? ம‌னித‌ன் தானே? யாருக்காவ‌து க‌ட‌வுளே வ‌ந்து சொன்னாரா? ச‌ப‌ரிம‌லை அய்ய‌ப்ப‌ன் சிவ‌னின் உல்ல‌ங்கையில் உண்டான‌தாக‌ வேத‌ம் சொல்கிற‌து. அந்த‌ க‌தை ரொம்ப‌ ஆபாச‌மான‌தால் இங்கே சொல்ல‌ விரும்ப‌வில்லை.
ம‌னித‌னை விட‌ மோச‌மான‌து இறைவ‌னின் க‌தைக‌ள்.

ஒருவ‌னுக்கு ஒரு துய‌ர‌ம் வ‌ந்தால் ச‌க‌ம‌னித‌ன் உத‌வுகிறான்.
இது ம‌னித‌ நிய‌தி. ஒரு இய‌ற்கை சீற்ற‌ம் வ‌ந்தால் அது ஒரு இட‌த்தையே அழிக்கிற‌து. இது இய‌ற்கை விதி. ம‌னித‌னுக்கோ உல‌குக்கோ இறைவ‌ன் வ‌ந்து உத‌வுவ‌தில்லை.

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்
 
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Global Angel on September 03, 2011, 09:35:32 PM
அப்போ வேதங்களை நீங்கள் அதரம் காட்டிநிர்களே  அதை எழுதியது யார் .... அதுல் உண்மை இல்லையா
...உண்மை இலாத ஒன்றில் இருந்து நீங்கள் எப்டி ஆதாரம் காடியது ...?

தமிழன் ரொஸ் சூப்பர் பிகுர் என்றது தெரிய வரும் போது சப்ப சுமார் இப்டி சொனவங்களும் சூப்பர் என்று ஒத்து கொள்ள செய்வார்கள் ...இதே போல்தான் கடவுள் இல்லை .. இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் என சொல்பவர்களும் ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் இருக்குறதை ஒப்பு கொள்கிறார்கள் ..
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Arya on September 03, 2011, 10:47:24 PM
Angel cycle gab la rose super fig nu solura :D ithana mater ah nan chat la deal panikuren  :D

Angel ipa neenka solura mathiri kadavul irukaruna intha ulakathula theeviravaatham en varanum ??
iyarkai seetrankal etharku??
entha oru sirpiyum thaan padaitha sirpathai thaaney azhika maatan
apadi irukurapa uyirkalai padaithu athai en azhikanum
eli kalai padaitha iraivan athai kolum poonaiyai padaithathen ??
Naam perithum mathipathu thaaimai aanal antha thaaiye than muttaiyai unumaru paambukalai padaithathu en ??
kadavul irukiraar entral kadavul peyarai solikondu ematrikondirupavarkalai en thandika vilai ???
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on September 04, 2011, 12:26:30 AM
ஏஞ்சல்
நான் வேதங்களை உதாரணமா எங்க காட்டினேன்? நான் கடவுளை நம்பினாலும் வேதங்களையும் வேதநூல்களையும்
நம்புவதில்லை.

ஆரியா நான் சொன்ன‌ உதார‌ண‌ங்க‌ளை நீங்க‌ளும் சொல்லி என‌து ந‌ண்ப‌ன் என்று நிருபிச்சிட்டீங்க‌.
உல‌கத்தில் அத‌ர்ம‌ம் த‌லை விரித்தாடுகிற‌து.க‌ட‌வுள் உல‌கை ப‌டைத்த‌தோடு த‌ன‌து க‌ட‌மை முடிந்து விட்ட‌தாக‌ க‌ண்ணை மூடிக்கொண்டாரா? க‌ட‌வுள் உல‌க‌ம் அழிந்த்த‌தும் அவ‌ர்க‌ள் பாவ‌புண்ணிய‌த்துக்கேற்ப‌ த‌ண்ட‌ணை கொடுப்பார் என்று சொல்லுகிறார்க‌ள் க‌ட‌வுளை ந‌ம்புவோர். உல‌க‌த்தில் உயிரோடிருக்கும் போது செய்த‌ பாவ‌த்துக்கு த‌ண்ட‌ணை கொடுக்காம‌ல் இற‌ந்த‌ பின் கொடுத்து என்ன‌ ப‌ய‌ன்?

இப்போ நான் உங்க‌ கூட‌ பேசுவ‌தால் நான் த‌ழிழ‌ன் என்று உங்க‌ளுக்கு தெரியும். என்னை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு நான் ம‌னித‌ன் என்று தெரியும். என்னை பார்க்காம‌ல் என்னோடு பேசாம‌ல் த‌ழிழ‌ன் என்று ஒருத்த‌ன் இருப்ப‌தாக‌ சொன்னால் நீங்க‌ள் எப்ப‌டி ந‌ம்புவீர்க‌ள்? ஒன்றில் க‌ண்ட‌வ‌ர்க‌ள் சொல்ல‌னும் இல்லாவிட்டால் பேசி ச‌ரி கேட்க‌னும்.
க‌ட‌வுளை க‌ண்ட‌வ‌ர் யார்? க‌ட‌வுளுட‌ன் பேசிய‌து யார்? காணாம‌ல் பேசாம‌ல் இப்ப‌டி க‌ட‌வுள் இருப்ப‌தாக‌ சொல்ல‌முடியும்?ச‌ரி இற‌ந்து
ப‌ர‌லோக‌ம் போன‌ யாராவ‌து வ‌ந்து ச‌ரி அங்கே க‌ட‌வுள் இருப்ப‌தாக‌ சொன்னார்க‌ளா? அதும் இல்லை. வெறும் ந‌ம்பிக்கைக‌ள் உண்மையாகாது.
விந்த‌ணுக்க‌ள் இல்லாம‌ல் எப்ப‌டி குழாயில் குழ‌ந்தை உண்டான‌து
என்று கேட்டிருந்தீர்க‌ள். நீங்க‌ள் சொன்ன‌து போல‌ விந்த‌ணு இல்லாம‌ல் கோழிகுஞ்சு பொரிக்காது என்ற‌ நிய‌தியை மாற்றி விஞ்ஞான‌ம் அந்த் விந்த‌ணு இல்ல‌ம‌ல் கோழிக்குஞ்சுக‌ளை உண்டாக்க‌வில்லையா விஞ்ஞான‌ம் ம‌னித‌னிலும் அதை நிருபிக்கும்.
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Yousuf on September 05, 2011, 03:57:39 PM
Quote
இந்த உலகத்தை படைத்த இறைவன் ஏன் துன்பதை படைத்தான் என்று கேட்கிறார்கள். மனிதன் இன்பத்தை முழுமையாக அறிந்து கொள்ளவே இறைவன் துன்பத்தை படைத்தான்.

இந்த பதிலை உங்களிடம் இருந்துதான் எடுத்தேன் தமிழன் மச்சி!

தவறுகளை ஏன் கடவுள் இங்க தண்டிக்காமல் மறுமையில் தண்டிக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இங்கு ஒருவர் செய்யும் தவறுக்கு உடனுக்குடன் தண்டிக வேண்டும் என்று இறைவன் நாடினால் நீங்களும் தவறு செய்ய கூடியவர் தான் நானும் தவறு செய்ய கூடியவன் தான் உலகில் உள்ள அனைவரும் தவறு செய்ய கூடியவர்கள் தான் ஆகா இறைவன் தண்டனை கொடுக்க நாடினால் இந்த உலகத்தில் ஒரு மனிதர் கூட மிஞ்சி இருக்க மாட்டார். ஆகவே தான் பொருமையலனான இறைவன் மனிதர்களை இங்கு தண்டிக்காமல் அவர்களின் மரணம் வரை அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பாளித்து அவர்கள் அதிலும் திருந்தாவிட்டால் மறுமையில் தண்டிக்கிறான். இதை கடைசி இறைவேதமான திருக்குர்'ஆண் மூலம் என்னால் நிரூபிக்க முடியும்.

நீங்கள் சொல்வது போல் கடவுள் இல்லை என்று வைத்துகொள்வோம் இந்த உலகில் தவறு செய்ய கூடியவர்களும் மரணிகிரார்கள் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்பவர்களும் மரணிக்கிறார்கள். மனிதர்களை கொன்று குவித்த கொடுங்கோலர்களும் இருந்து இருக்கிறார்கள் மரணித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்த்த மனிதனுக்கும் என்ன வேறுபாடு? மரணத்திருக்கு பின்னல் ஒன்றும் இல்லை என்றால் ஏன் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் காட்டு மிராண்டிகளாக வாழலாமே? யார் நம்மை என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு சிந்தனை இறைவன் இல்லை என்ற காரணத்தால் பெருக்கெடுத்தால் இந்த பூமி தாங்குமா?

ஆர்யா மச்சி நீங்கள் தீவிறேவாதம் ஏன் வளர்கிறது என்று கேட்கிறீர்கள். முதலில் தீவிர வாதம் எப்படி தொடங்கியது என்று பார்த்தோமேயானால். உதரனத்திற்க்கு உங்கள் வீட்டில் நான் வந்து இருந்து கொண்டு இது ஏன் வீடு நீ வெளியே போ என்று உங்களை நான் வெளியேற சொன்னால் நீங்கள் என்னை சும்மா விடுவீர்களா? நிச்சயம் விடமடீர்கள். இன்று தீவிரவாதம் வளர்வதற்கு காரனம ஒடுக்கப்பட்ட மனிதனுக்கு சரியான நீதி கிடைக்காதது தான். வல்லரசுகள் தங்கள் சுயநலத்திற்காக சில நாடுகளை ஆக்கிரமிக்கிறது அந்த நாட்டில் உள்ள குடிமகன் இதை எதிர்த்து போராடுகிறான் இது அவன் உரிமை. உதாரணமாக இந்தியாவில் விடுதலை பெரும் முன் நாம் எப்படி வெள்ளையர்களிடம் போரடிநோமோ அதே போல் இன்று ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற இராக்கும், ஆப்கானிஸ்தானும் போராடுகிறது அதே போல் இலங்கையில் தமிழ் இனம் அழிவதை எதிர்த்து விடுதலை புலிகள் போராடினார்கள். இன்றும் சம நீதி வேண்டும் என்று நம் இந்தியாவில் நக்சலைட்டுகள் போராடுகிறார்கள். அநியாயம் மிக்க ஆட்சியாளர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க போராடுவது தீவிரவாதமா அல்லது மக்களை ஒடுக்கும் ஏகாதிபத்திய அரசுகள் செய்வது தீவரவாதமா? இறைவன் இருந்தால் நிச்சயம் இங்கு நீதி கிடைக்காமல் போராடி மடிந்த அந்த எண்ணற்ற உயிர்களுக்கு இறுதி நீதி மன்றமான இறைவனின் நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் அல்லவா?

கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்காக கடவுளே இல்லை என்று சொல்வது சரியா? கடுவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களை களையெடுப்பது அறிவார்ந்த செயலா அல்லது கடவுள் இல்லை என்று சொல்வது அறிவார்ந்த செயலா? சற்று சிந்திக்க வேண்டும் ஆர்யா மச்சி...!!!

உங்களின் பதிலை எதிர்பார்த்து அடுத்த பதிவை தொடருகிறேன் இறைவன் நாடினால்...!!!
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on September 07, 2011, 04:47:28 PM
யூசுப் மச்சி
உங்க வாதம் நல்லா தான் இருக்கு. உங்க வாதத்தின் வழியே நானும் சில கேள்விகளை கேட்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் கடவுள் இல்லை என்று வைத்துகொள்வோம் இந்த உலகில் தவறு செய்ய கூடியவர்களும் மரணிகிரார்கள் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்பவர்களும் மரணிக்கிறார்கள். மனிதர்களை கொன்று குவித்த கொடுங்கோலர்களும் இருந்து இருக்கிறார்கள் மரணித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்த்த மனிதனுக்கும் என்ன வேறுபாடு? மரணத்திருக்கு பின்னல் ஒன்றும் இல்லை என்றால் ஏன் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் காட்டு மிராண்டிகளாக வாழலாமே? யார் நம்மை என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு சிந்தனை இறைவன் இல்லை என்ற காரணத்தால் பெருக்கெடுத்தால் இந்த பூமி தாங்குமா?

மரணித்ததற்கு பிறகு தண்டனை என் வைத்துக் கொள்ளுவோம்.
மரணித்த பிறகு தானே தண்டனை இருக்கும் வரை எப்படி வேண்டுமானாலும் வாழுவேம் என் ஒவ்வொரு மனிதனும் நினைத்தால் அப்போது இந்த பூமி தாங்குமா?
உலகில் நானும் பிழை செய்பவன் தான் நீங்களும் பிழை செய்வவர் தான். செய்யும் பிழைக்கு உயிரை எடுக்க வேண்டுமா என்ன? அப்படி செய்தால் தான் உலகில் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவரவர் பிழைக்கு ஏற்ப தண்டனை கொடுக்கலாம் தானே.

சவூதியை எடுத்துக் கொள்ளுங்கள்.அங்கே களவெடுத்தால் கை வெட்டப்படும். கொலை செய்தால் தலை வெட்டப்படும். அதற்காக அங்கே இருப்பவர் எல்லோரும் தலை இல்லாமல், கை இல்லாமலா இருக்கிறார்கள்?

ஒருவ‌ன் கையை வெட்டும் போது ம‌ற்ற‌வ‌ன் ப‌ய‌ப்ப‌டுவான்.ஒருவ‌ன் த‌லையை எடுக்கும் போது அடுத்த‌வ‌ன் கொலை செய்ய‌ அஞ்சுவான். இந்த‌ த‌ண்ட‌னைக‌ளால் தான் ச‌வூதியில் குற்ற‌ங்க‌ள் குறைந்திருக்கிற‌து. உங்க‌ள் வாத‌ப்ப‌டி ம‌றுமையில் தான் த‌ண்ட‌னை என்றிருந்தால் ச‌வூதியில் ஒரு பெண்ணைக் கூட‌ விட்டு வ‌த்திருக்க‌ மாட்டார்க‌ள்.

இறைவ‌ன் இருக்கிறான், ம‌றுமையில் அவ‌ன் த‌ண்ட‌னை த‌ருவான் என்ற‌ எண்ண‌ம் ம‌ட்டும் இருந்திருந்தால் உல‌க‌மே த‌லை கீழாக‌ மாறியிருக்கும். அத‌ற்காக‌த்தான் ம‌னித‌ன் நீதிம‌ன்ற‌ங்களை உண்டாக்கினான்.அங்கே குற்ற‌ங்க‌ள் விசாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.அவ‌ன் அவ‌ன் குற்ற‌த்திற்கேற்ப‌ த‌ண்ட‌னை
வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.
இறைவ‌ன் இருந்தால் அவ‌னும் அப்ப‌டி செய்ய‌லாம் தானே?

ஒழுக்க‌த்தோடு வாழ்வ‌வ‌ரும் கொடுங்கோல‌ர்க‌ளும் இற‌ந்த‌ பிற‌கு ஒருவ‌ரே. இற‌ந்த‌ பிற‌கு இருவ‌ருக்கும் ஒரே பெய‌ர் தான். பிண‌ம்.
இருக்கும் போது கொடுங்கோல‌னாக‌ இருந்த‌வ‌ன் பிண‌மான‌ பிற‌கு த‌ண்ட‌னை அனுப‌வித்தால் என்ன‌ அனுப‌விக்காவிட்டால் என்ன‌?
உல‌க‌த்தில் ஒழுக்க‌மாக‌ இருந்து துன்ப‌த்தை அனுவ‌வித்த‌வ‌ன் பிண‌மான‌ பின்னால் சொர்க்க‌ம் போனால் தான் என்ன‌ போகாவிட்டால் தான் என்ன‌?
முத‌லில் சொர்க‌ம் இருக்கிற‌தா? வ‌ந்து சொன்ன‌வ‌ர் யாரும் இல்லை. ந‌ர‌க‌மும் சொர்க்க‌மும் நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிற‌து.

யூசுப் ம‌ச்சி ஆரியா கேட்ட‌தின் பொருள் உங்க‌ளுக்கு விளங்க‌வில்லை என்று நினைக்கிறேன். ஆரியா எப்ப‌டி தீவிர‌வாத‌ம் உண்டான‌து என்று கேட்க‌வில்லை. அது ம‌னித‌ செய‌ல். ஆனால் இறைவ‌ன் என்று ஒருவ‌ன் இருந்தால் அதை ஏன் த‌டை செய்ய‌வில்லை? இது தான் ஆரியாவின் கேள்வி எந்த‌
ஒரு க‌லைஞ‌னும் தான் ப‌டைத்த‌ ஒரு ப‌டைப்பு அல‌ங்கோல‌மாவ‌தை விரும்ப‌ மாட்டான். உங்க‌ள் க‌ருத்துப்ப‌டி இறைவ‌ன் இந்த‌ உல‌கை ப‌டைத்திருந்தால் ஏன் இத்த‌னை அல‌ங்கோல‌மாகினான்?
உல‌கில் தீவிர‌வாத‌மும் த‌லைதூக்க‌ முக்கிய‌ கார‌ண‌ம் இன்த‌ ம‌த‌மும் க‌ட‌வுளும் தான். இதை நீங்க‌ள் ஒத்துக்கொண்டே ஆக‌வேண்டும். இல்லை எனில் நான் புள்ளி விவ‌ர‌ங்க‌ளுட‌ன் த‌ருகிறேன்.

ந‌ம்மை பெற்ற‌வ‌ர்க‌ளை க‌ட‌வுள் என்று சொல்லுங்க‌ள் ஒத்துக்கொள்கிறேன். அவ‌ர்க‌ளை நாம் க‌ண்ணால் காண்கிறோம்.
நாம் காண‌முடியாத‌ ஒன்றை இருக்கிறானா இல்லையா என்று தெரியாத‌ ஒன்றை க‌ட‌வுள் என்று சொல்ல‌ நான் த‌யாராக‌ இல்லை.ஆரியா முன்பு சொன்ன‌து போல‌ எவ‌ன் ஒருவ‌ன் ம‌ற்ற‌வ‌னுக்கு உத‌வுகிறானோ அவ‌னை க‌ட‌வுளாக‌ நினைப்போம்.
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Yousuf on September 07, 2011, 06:22:47 PM
தமிழன் மச்சி உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தர கடமை பட்டுள்ளேன். நீங்கள் சவுதியில் தண்டனை வழங்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள் அந்த தண்டனை எங்கிருந்து வழங்க படுகிறாது எதன் அடிப்படையில் வழங்க படுகிறது என்று சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் சொல்ல கூடிய தண்டனைகள் அனைத்தும் இறுதி இறை வேதமான திருக்குர்'ஆனில் இருந்து தான் வழங்க படுகிறாது. இதை மனிதன் உருவாக்கவில்லை இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்டது. நீங்கள் திருக்குர்'ஆண் இறைவேதம் என்பதை எப்படி நாங்கள் ஏற்றுகொள்வது என்று கேள்வி எழுப்பலாம் அப்படி நீங்கள் எழுப்பும் பட்சத்தில் அதை நான் புள்ளி விவரங்களோடு உங்களுக்கு பதிவு செய்கிறேன்.

நான் முதலாவதாக எழுப்பிய கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை தமிழன் மச்சி. ஒரு எழுதுகோல் கூட தானாக வர முடியாது என்ற நிலை இருக்கும் பொது இப்படி பட்ட பிரபஞ்சம் எப்படி தானாக வந்தது என்ற கேள்விக்கு நீங்கள் பதில் தர வேண்டும் மேலுமிது தான் நாத்திகர்களின் பகுத்தறிவு சிந்தனைய என்று எனக்கு தெளிவு படுத்த வேண்டும்.

மனிதனுக்கு மனிதர்களே தீர்ப்பு வழங்கி கொண்டுதானே இருக்கிறார்கள் இதை ஏன் இறைவன் வழங்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். மனிதர்களின் தீர்ப்பில் குற்றவாளியும் தண்டிக்க பாடுகிறான் நிரபராதியும் வஞ்சிக்க படுகிறான். ஆனால் இறைவனின் தீர்ப்பில் யாருக்கும் ஒரு எள் ஆளவும் தீமை செய்யப்பட மட்டது. அவர்கள் செய்தவற்றின் கூலியை அவர்கள் நிச்சயம் பெறுவார்கள். இது மனிதனால் செய்ய இயலுமா?

அடுத்து இறந்து விட்டால் அனைவரும் பிணம் தான் நல்லவன் என்ன கேட்டவன் என்ன என்று கூறுகிறீர்கள். சரி இதை ஒரு நல்லவன் நினைத்தால் நாம் இறந்து விட்டால் பிணம் தானே நாம் ஏன் நல்லவனாக வாழ வேண்டும் மற்றவர்கள் கெட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது நாம் ஏன் நல்லவனாக வாழ வேண்டும் அவர்களை போல் கொலை கொள்ளை அனைத்தையும் நாமும் செய்வோம் என்று உங்களை போல உள்ள நல்லவர்கள் கிளம்பிவிட்டாள் மீண்டும் கேட்கிறேன் இந்த உலகத்தின் கதி என்ன?

இறைவன் தான் படைத்ததை ஏன் அலங்கோல படுத்துகிறான் என்று கேட்கிறீர்கள் தமிழன் மச்சி. இதற்க்கு நான் திருக்குர்'ஆண் வழியில் பதில் தர விரும்புகிறேன். இறைவன் மனிதர்களை படைத்து அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் அவனுடைய வேதங்கள் மூலம் தெளிவு படுத்தி விட்டன. அப்படி இருக்கையில், மனிதன் இறைவனுக்கு அஞ்சி மற்றவர்களுக்கு துன்பம் தராமல் வாழ்ந்தால் ஏன் கொலைகள் நடக்க போகிறது?
மைந்தர்களில் அநேகமானோர் இதை அறியாதவர்களாக உள்ளார்கள்.

தீவிரவாதம் வளர்வதற்கு கடவுள் தான் கரணம் என்று கூறுகிறீர்கள். கடவுள் எந்த வேதத்திலாவது தீவிரவாதிகளாக மறுங்கள் என்று கூறினாரா? எனக்கு இதற்க்கு பதில் வேண்டும். கடவுளின் பெயரால் சண்டை நடக்கிறது என்று கூறுகிறீர்கள் ஒரு குறிப்பிட இனத்தை வல்லாதிக்க சகிதிகள் ஒடுக்கப்ப் பட்டவனை தாக்கும் பொது அவன் அவர்களை எதிர்த்து போரிட்டால் அந்த ஒடுக்கப் பட்டவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களோ உடனே அவர்கள் அந்த மதத்தின் பெயரால் தீவிரவாதிகள் ஆக்க படுகிறார்கள். இது தான் உண்மை ஏன் அந்த ஒடுக்கப்பட்ட மனிதனுக்கு இறைனம்ம்பிக்கை இருக்க கூடாதா?


மதத்தின் பெயரால் தீவிரவாதம் உருவாக்கபடுகிறது என்று கூறுகிறீர்கள். நான் ஒரு சம்பவத்தை கூறுகிறேன் தமிழன் மச்சி ஆப்கானிஸ்தானில் நடந்தது. அங்கு ஒரு புத்தர் சிலை இருந்தது அதன் மூக்கு உடைந்து விட்டதாம். இதற்காக அமெரிக்காவின் UNESCO 100 கோடி ரூபாய் நீதி ஓதிக்கியதாம் புத்தர் சிலையின் மூக்கை சரி செய்ய. அங்கு உள்ள தலிபான்கள் எங்கள் மக்கள் பசியாலும் பஞ்சத்தாலும் வாடுகிறார்கள் ஒரு ஒரு கோடி ரூபாய் கொடுங்கள் எங்கள் மக்களின் பஞ்சத்தை நீக்க என்று கேட்டார்கள். இதற்க்கு UNESCO சொல்லியதாம் அதெல்லாம் ஒதுக்க முடியாது என்று. தலிபான்கள்  உடனடியாகள் எங்கள் மக்கள் பஞ்சத்தில் வாடும் பொது இவ்வளவு தொகை செலவழித்து இந்த புத்தர் சிலையை ஒன்றும் நீங்கள் சரி செய்ய வேண்டாம் அது எங்களின் நாட்டில் கூட இருக்க வேண்டாம் என்று கூறி அந்த புத்தர் சிலையை தகர்த்து எறிந்தார்கள். இதை ஊடகங்கள் எப்படி பரப்பியது தெரியுமா மதத்தின் பெயரால் முஸ்லிம் தாலிபான்கள் புத்தர் சிலையை தகர்த்து விட்டார்கள் என்று. சற்று சிந்தித்து பாருங்கள் இங்கு மதத்தை புகுத்தியவர்கள் யார் பட்டினிக்காக மனிதநேயத்தோடு மன்றாடியவர்கள் யார் என்று. இவர்களை எப்படி இந்த உலகம் தீவிரவாதிகள் என்று சொல்கிறது அதுவும் மதத்தின் பெயரால். ஏன் அவர்கள் ஏற்று கொண்ட கொள்கை வல்லாதிக்க சக்திகளான அமெரிக்கா போன்ற நாடுகள் வளர்ச்சி அடைவதற்கு தடைகல்லாக இருக்குயறது என்பதற்காகவா? இது தான் மத தீவிரவாதமா? பட்டினியில் வாடும் மக்களின் குரலா? நீங்கள் புள்ளி விவரங்கள் தருகிறேன் என்று சொன்னீர்கள். இந்த புள்ளி விவரத்தை தந்தது யார் இந்த ஊடகங்கள் தானே இந்த ஊடகங்கள் என்றுமே சரியான புள்ளி விவரங்களை தந்து இல்லை. நீங்கள் தந்தாலும் அதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். ஊடகங்கள் ஒரு சாராருக்கு ஆதரவான நிலையில் தான் உள்ளது அவற்றின் கூற்றுகளை நான் ஏற்றுகொள்வதாக இல்லை.

என்னை பொறுத்தவரை நான் மற்றவர்களை போல் கண்டதை எல்லாம் கடுவுளாக, கல்லை எல்லாம் கடுவுளாக நினைக்க மாட்டேன் அது பகுத்தறிவுக்கு சரியானதும் இல்லை. மனிதர்களில் யாரையும் கடவுளாக கருதமாட்டேன். என்னுடைய கடவுள் கொள்கையை நான் உங்களுக்கு சொல்லி ஏன் பதிவை இறுதியாக நிறையவு செய்கிறேன்.


Quote
இறைவன் ஒருவனே! அவன் தேவைகள் அற்றவன்! அவன் யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இறைவன் பிறக்கவும் இல்லை மரணிக்கவும் இல்லை.

நான் அஞ்சுவதும் அடிபணிவதும் எவன் இந்த அகிலங்களை படைத்தது பரிபாளிக்கிரானோ அந்த ஒரே இறைவனுக்கே!!!

அந்த ஒரே இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழியை தருவானாக!!!
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Arya on September 12, 2011, 12:07:02 AM
யூசுப் நாங்க ஏன் தீவிரவாதம் உருவாகிறது என்று கேட்கவில்லை.

கடவுள் இருக்கிறார் என்றால் அவர் ஏன் இந்த தீவிரவாதத்தை தடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம்?

கடவுள் பெயரால் எதற்கு இந்தனை மதங்கள் மற்றும் சண்டைகள்??

கடவுள் இருக்கிறார் என்றால் நம்மை இயக்குவதும் அவர்தானே ? நம்மை அவர் ஏன் தவறாக இயக்கவேண்டும் ??

தான் படைத்த உலகத்தை தனது பெயரால் சிலர் அழிபதை அவர் ஏன் பார்த்துகொண்டிருக்க வேண்டும்??

தவறு செய்தவர் இறந்தபின் அவரை தண்டிப்பதை காட்டிலும் தவறு செய்யாமல் தடுப்பது மேல் அல்லவா?

தடுக்காமல் இறைவன் தண்டிப்பது ஏன்??

உங்கள் பெயரை சொல்லி யாராவது தவறு செய்தால் அதை தட்டிகேட்டு தடுத்து நிறுத்தவேண்டியது உங்கள் கடமை தானே?? அதை கடவுள் இருந்தால் ஏன் செய்யவில்லை

நான் கடவுள்லால் தீவிரவாதம் உருவாகிறது என்று சொல்லவில்லை ஆனால் கடவுள் நம்பிக்கையும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

நீங்கள் சொன்ன புத்தர் சிலை கதையும் நல்ல உதாரணம், அங்கு இருந்த கடவுள் நம்பிக்கை தானே பட்டினியில் வாடும் மக்களுக்கு உதவாமல் சிலையை புதுபிக்க தூண்டியது!!!

முன்னோர்கள் தவறை குறைக்கத்தான் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அவர் நாம் இறந்தபின்பு தண்டிப்பார் என்று பயங்காட்டி தவறு செய்வதை தடுத்தனர்.

ஆனால்

இன்று வேலியே பயிரை மேய்வது போல தவறை குறைக்க ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையே தவறை அதிகரிப்பது நியாயமா???

நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட அந்த நம்பிக்கை தவறாக பயன்படுத்தப்படும் போது அந்த நம்பிக்கை இப்பொது தேவையா ?? என்பது தான் என் கேள்வி??
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Yousuf on September 12, 2011, 11:28:15 AM
ஆர்யா உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்...!!!

கடவுள் இருக்கிறார் என்றால் அவர் ஏன் இந்த தீவிரவாதத்தை தடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம்?

இறைவன் தீவிரவாதத்தை ஏன் தடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள். இதற்க்கு என்னுடைய பதில் ஆட்சியாளர்கள் தவறு செய்வதால் தீவிரவாதம் உருவாக்கப் படுகிறது அதற்காக்க தீவிரவாதத்தை நான் சரி காண வில்லை இருவர் செய்வதும் தவறு தான். தீவிரவாத்தத்தால் மட்டும் உலகத்தில் குழப்பங்கள் இல்லை அதை மீறி எத்தனையோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று தவறுகள் நடந்து கொடுத்தான் இருக்கிறது. இதற்க்கு அணைத்திருக்கும் இறைவன் தண்டனை வழங்க நாடினால்...

இந்த பூமியில் ஒரு மனிதன் கூட மிஞ்சி இருக்க மாட்டான் என்று கடைசி இறைவேதமான திருக்குர்'ஆனில் தெளிவுபட கூறுகிறான். மேலும் கூறுகையில் அவன் போருமையலர்களுகேல்லாம் போருமையாலனாக இருக்க கூடிய காரணத்தால் மனிதர்களுக்காக ஒரு தவணையை ஒதுக்கி இருக்கிறான். அந்த தவணை முடிவதற்குள் மனிதன் தானாக பார்த்து இறைவன் நாளை நம்மை விசாரிப்பானே என்ற அச்சத்தோடு திருந்தி விட்டால் அவன் மன்னிபவனாக இருக்கிறான். திருந்த வில்லை என்றால் இந்த பூமியில் தீவிரவாதத்தின்  பெயரால் மட்டும் அல்ல இன்னும் எத்தனை எத்தனை அநியாயங்கள் செய்த மனிதனாக இருந்தாலும் படைத்தவனின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவனது தண்டனை கடுமையானது எந்த அளவிற்கென்றால் இங்கு பூமியில் ஒரு மனிதன் 100 கொலைகள் செய்தால் அவனை ஒரு முறை தான் தூக்கில் போடா முடியும். ஆனால் அந்த இறைவனின் நீதி மன்றத்திலே அவன் மரணிக்காமல் வேதனையை கடுமையாக அனுபவித்து கொண்டு இருப்பான் இது தான் அவன் செய்த கொலைகளுக்கான சரியான தண்டனையாக இருக்க முடியும்.

ஆகவே இந்த பூமியில் தவறு செய்பவர்கள் நிச்சயம் தப்பித்து கொள்ள முடியாது ஆர்யா...


கடவுள் பெயரால் எதற்கு இந்தனை மதங்கள் மற்றும் சண்டைகள்??

ஆர்யா மதங்களை பற்றி நாம் ஆராய்ச்சி செய்வோமேயானால் ஆரம்பகாலத்தில் மதம் என்ற ஒன்றே கிடையாது. இது இடைக்காலத்தில் மனிதர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டது. இறைவன் முதல் மனிதரையும் அவருடைய துனுயையும் இந்த பூமிக்கு அனுப்பிய பொது வாழ்வதற்கான வாழ்கை நெறியை தான் கற்று கொடுத்தான் வேதங்கள் மூலமாக.

இறுதி இறைவேதம் திருக்குர்'ஆண் கூறுகிறது மாந்தர்களே உங்களை நாம் ஒரு ஆண் பெண்ணில் இருந்தே படைத்தோம் என்று. இதில் இருந்து நாம் விளங்கி கொள்வது என்னவென்றால். இறைவன் மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறி விட்டான். அணைத்து மனிதர்களுக்கும் ஒரே இறைவன் தான் எனபது தெளிவாகுகிறது.

நாம் வேதங்களை ஆராய்ச்சி செய்தோமேயானால் இறைவன் மக்கள் வழி தவறும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களை நெறிமுறை படுத்த நல்வழி படுத்த இறை தூதர்களை அனுப்பி இருக்கிறான்.இன்று உணகில் காணப்படும் மதங்கள் எல்லாமே முந்தய இறை தூதர்கள் கொண்டு வந்த ஒரே வாழ்வியல் நெறி தான். ஆனால் பிற்காலத்தில் இறை தூதர்களின் பெயர்களையும், அவர்கள் இனத்தையும், இடத்தையும் மையமாக கொண்டு மதங்கள் ஆகி விட்டன.

நாம் ரிக், யசுர், சமா, அதர்வண வேதங்களை ஆராய்ச்சி செய்தோமேயானால் அதில் ஒரு இடத்தில் கூட இந்து மதம் என்ற பெயர் காணப்படவில்லை. அது இடைக்காலத்தில் உருவான பெயர் தான் என்று விவேகானந்தர் என்று கொள்கிறார். சரி இந்த வேதங்கள் வழங்கப்பட்ட மார்க்கத்தின் பெயர் என்ன என்று ஆராச்சி செய்தால் நமக்கு கிடைக்கும் பெயர் சனாதன தர்மம் என்பதாகும்.

சனாதன என்னும் சமஸ்கிருத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும். தர்மம் என்றால் மார்க்கம். இதை இறுதி வேதமான குர்'ஆண் கூறும் பொது தீனுல்கையும் என்று கூறுகிறது. இதன் பொருள் நிலையான மார்க்கம். ஆகவே மனிதன் பேசும் மொழி தான் விதியாசப்படுகிரதே தவிர இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பிய மார்க்கம் வேறு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் மனிதர்களுக்கு ஒரே மார்கத்தை தான் கூறியுள்ளான். மனிதர்கள் தங்களுடைய சுயநல போக்கால் அதை மதங்களாக மாற்றி விட்டார்கள். இறைவன் மதங்களை உருவாக்க வில்லை மதத்தின் பெயரால் மனிதர்களை அடித்து கொள்ளவும் சொல்ல வில்லை. மாறாக நீங்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை மக்கள் என்றே கூறுகிறான். மதத்தின் பேரிறால் நடக்கும் சண்டைகளுக்கு இறைவன் பொறுப்பும் அல்ல. இந்த சண்டைகளுக்கும் இறுதி தீர்ப்பு நாளில் அவன் தீர்ப்பளிப்பான்.


கடவுள் இருக்கிறார் என்றால் நம்மை இயக்குவதும் அவர்தானே ? நம்மை அவர் ஏன் தவறாக இயக்கவேண்டும் ??

இறைவன் நம்மை மட்டும் இயக்கவில்லை ஆர்யா. இந்த பேரண்டத்தையும் இயக்குவது இறைவன் தான். ஆனால் மற்றவற்றை விட மனிதர்களுக்கு ஒரு அறிவை அதிகமாக வழங்கி சிந்திக்கும் ஆற்றலை கொடுத்து அவன் இப்படி வாழ்ந்தால் நேர்வழியில் வாழலாம் என அவர்களுக்கு கற்றுகொடுக்க இறைதூதர்களையும் இறை வேதங்களையும் கொடுத்து இனியாவது சிந்தித்து வாழ்ந்து கொள் என்று நேர் வழி காட்டி இந்த நேர்வழியை விட்டு நீ விளங்கினால் கடுமையான தண்டனைக்கு உட்ட்படுவாய் என்று எச்சரித்தும் உள்ளன். அனால் இன்று மனிதர்கள் இதை எல்லாம் அலட்ச்சியமாக கருதி தன்னுடைய சுயநல வாழ்கையை வாழ்கிறார்கள். இதற்க்கு நீங்கள் இறைவனை பொறுப்பாளியாக ஆக்க முடியாது. இறைவனின் போதனையை மறுத்து வாழ்பவர்களுக்கு நிச்சயம் மறுமையில் தண்டனை உண்டு.

தான் படைத்த உலகத்தை தனது பெயரால் சிலர் அளிப்பதை அவர் ஏன் பார்த்துகொண்டிருக்க வேண்டும்??

முதலில் இறைவனை பற்றி அதிகமான மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளர்கள். இறைவனை மனிதனின் குண நலன்களோடு ஒப்பிடுகிறார்கள். இறைவன் மனிதனை போன்று பலவீனங்கள் உள்ளவன் அல்ல அவன் சுயநல வாதியும் இல்லை எல்ல விடயங்களிலும் அவசர படுபனவனும் இல்லை அவன் பொறுமையாளன் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். அவன் படைத்த உலகத்தை அவன் பெயரை சொல்லி அளிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இது இந்த உலகத்தை படைக்கும் முன்பே மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொலைசெய்து கொண்டு தான் அநியாயம் செய்து கொண்டு தான் வாழ்வார்கள் என்று அவனுக்கு தெரியும். இதை தெளிவாக இறுதி வேதமான குர்'ஆனில் கூறிவிட்டான். இருந்தாலும் மனிதர்களுக்கு இப்படி நடக்க கூடாது என்ற எச்சரிக்கையும் செய்து விட்டான். இறைவன் அவனுடைய பெயரால் மக்களை ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டு வாழுங்கள் என்று எந்த வேதத்திலும் கூறுயது இல்லை. மனிதர்கள் தங்களுடைய அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலை நாட்டி கொள்ள அடித்து கொள்கிறார்கள் அவர்கள் ஜாதியால் வேறு பட்டிருந்தால் அது ஜாதி சண்டையாகவும் மதத்தால் வேறு பட்டு இருந்தால் அது மத சண்டையாகவும் சித்தரிக்க படுகிறது. இதற்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம்? இதில் இறைவனை ஏன் இழுக்கிறீர்கள்.

நான் முன்பு கூறியது போல் மதங்கள் இடைக்காலத்தில் தோன்றியது. மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். நம்மை படைத்த இறைவன் ஒரே இறைவனே. நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணம் வந்து விட்டால் இந்த சண்டைகள் நடை பெறாது. இதை தான் கடைசி வேதமான திருக்குர்'ஆண் முன் மொழிகிறது.

நீங்கள் இன்றும் பார்க்கலாம் ஹஜ்ஜு பயணத்தின் பொது ஆப்ரிக்க கருப்பரும் ஐரோப்பிய வெள்ளையரும் ஆசியாவின் மானிறத்தவரும்  ஒன்றாக சகோதரத்துவத்துடன் ஹஜ்ஜு செய்கிறார்கள். இதே போல் ஒவ்வொரு மனிதரும் நிறத்தால், மொழியால், இனத்தால் உயர்ந்தவர்கள் அல்ல நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று உணர்ந்து விட்டால் உலகம் அமைதி பூங்காவாக மாறிவிடும்.

இறைவன் இல்லை என்று சொல்லும் கொள்கையால் இந்த அமைதியை நிச்சயம் கொண்டு வர முடியாது. அது விபரீதமான ஒரு பேரழிவை இந்த பூமியில் ஏற்ப்படுத்தி விடும்.

தவறு செய்தவர் இறந்தபின் அவரை தண்டிப்பதை காட்டிலும் தவறு செய்யாமல் தடுப்பது மேல் அல்லவா?

மேலே சொன்ன பதில் தான் இந்த கேள்விக்கும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க இறைவன் இறைவேதங்களையும் கொடுத்து இறை தூதர்களையும் அனுப்பி அதற்க்கு மேலாக மனிதனுக்கு சிந்திக்கும் அறிவையும் கொடுத்து நீ தவறு செய்யாதே என்று சொல்லிய பின்னும் தவறு செய்தால் தண்டிக்க படுவாய் என்று சொல்லிய பின்னும் மனிதன் அதையும் மீறி தவறு செய்தால் பிறருக்கு அநியாயம் செய்தால் இறைவன் அதற்கும் அவகாசம் கொடுத்து அவன் திருந்த வாய்பளிக்கிறான். அதிலும் திருந்தாதவர்களை தான் தண்டிக்கிறான்.

ஆகவே இறைவன் தவறு செய்யாமல் இருக்கும் வழி முறைகளை மனிதனுக்கு சொல்லி விட்டான். இது தான் உங்கள் கேள்விக்கு பதில்.

உங்கள் பெயரை சொல்லி யாராவது தவறு செய்தால் அதை தட்டிகேட்டு தடுத்து நிறுத்தவேண்டியது உங்கள் கடமை தானே?? அதை கடவுள் இருந்தால் ஏன் செய்யவில்லை

இறைவனின் பெயரால் தவறு செய்பவர்களை நேரடியாக தட்டி கேட்க வேண்டும் என்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது. நீங்க இந்த கேள்வியை கேட்கும் பொழுதே இறைவனுடைய இலக்கானம் உங்களுக்கு புரியவில்லை எனபது தெரிகிறது இறைவனை நீங்கள் மனிதனை போல் கற்பனை செய்கிறீர்கள்.

இறைவனின் பெயரால் நடக்கும் தவறுகளை தட்டி கேட்ட்கத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைவன் இறைதூதர்களை அனுப்பினான். இறைதூதர்களின் மரணத்திற்கு பிறகு மக்கள் மீண்டும் தவறு செய்ய முனைகிறார்கள். இப்பொழுது இறை தூதுத்துவம் கடைசி இறை தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களோடு முடிவு பெற்று விட்டது. இறைவன் கடைசி வேதமான குர்'ஆனில் கூறும் பொழுது  இறைவனின் பெயரால் தவறு செபவர்களை தடுப்பது இறைவேதத்தை கற்ற உங்களின் கடமை என்று கூறி விட்டான்.

இந்த தவறுகளை நேரடியாக தடுக்க வேண்டியது இறைவனுக்கு அவசியம் இல்லை மனிதர்களிலேயே அவனுடைய பிரதிநிதிகளை உண்டாக்கி தடுக்க சொல்கிறான். அப்பொழுது கூட உங்கள் கடமை தவறை சுட்டி கட்டுவது மட்டும் தான் அவர்களை நல் வழி படுத்துவது அல்ல. அவர்கள் சிந்தித்து திருத்தி விட்டால் நல்லது இல்லை என்றால் அவர்கள் வேதனையை சுவைப்பார்கள் என்றும் கூறி விட்டான்.

ஆகவே இறைவன் அவன் பெயரால் நடக்கும் தவறுகளை தடுக்காமலும் விட்டு விட வில்லை.

முன்னோர்கள் தவறை குறைக்கத்தான் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அவர் நாம் இறந்தபின்பு தண்டிப்பார் என்று பயங்காட்டி தவறு செய்வதை தடுத்தனர்.

இதை நீங்கள் எந்த ஆதாரத்தோடு சொல்கிறீர்கள் தவறை குறைக்கத்தான் இறைவனை உண்டாக்கினார்கள் என்று?
 உங்களிடம் நான் ஒரு கேளிவியை முன் வைக்கிறேன் நீங்கள் அணியும் ஆடையை கூட ஒருவரின் உதவி இல்லாமல் தானாக வராது என்ற நிலை இருக்கும் போது இந்த பேரண்டம் எப்படி தானாக வந்தது? இதற்க்கு நீங்கள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் ஆர்யா.


கடைசியாக ஒன்றை கூறுகிறேன் கடவுளின் பெர்யரால் தவறுகள் நடக்கிறது என்றால் தவறுகளையும் தவறு செய்பவர்களையும் கலை எடுப்பது தான் அறிவார்ந்த செயலே தவிர அந்த தவறுகளை பார்த்து விட்டு கடவுளே இல்லை என்று சொல்வது அறிவார்ந்த செயல் கிடையாது.

நீங்கள் சொல்வது போல் கடவுள் இல்லை என்று சொன்னான் நான் ஏற்கனே கூறியது போல் இப்பொது நடக்கும் அநியாயங்களை விட நிச்சயம் அதிகமான அநியாயங்கள் நடை பெரும். இதில் மற்று கருத்திற்கே இடம் இல்லை.

அனைத்து மக்களும் இறைவன் ஒருவனே. நாம் ஒரு தாய் மக்கள்.  நாம் அனைவரும் சகோதர்கள் என்ற நிலைபாட்டிற்கு வந்து விட்டால் இந்த பூமி அமைதி பூங்காவாக மாறும் இறைவன் நாடினால்...!!!
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Arya on September 13, 2011, 08:55:45 AM
தோழர் யூசுப், உங்கள் பதிவை படித்தேன் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் கேட்டது இந்த பேரண்டத்தை உருவாகியவன் யார்??

இந்த பேரண்டம் அணுக்களால் உருவானது. இது அறிவியல். இதை தாங்களும் அறிவீர்கள். நீங்கள் மீண்டும் கேட்கலாம் அணுக்களால் உருவானது என்றால் அந்த அணுக்களை உருவாகியவன் யார் என்று?

அதற்கும் இங்கு என் கருத்தை தெளிவுபடுத்துகிறேன். பேரண்டத்தை உருவாகிய அணுக்களை வேண்டுமானால் கடவுள் என்று கூறலாம்.

நான் கடவுள் கொடுக்கும் தண்டனைகளை பற்றி கேட்கவில்லை, அவன் தான் எல்லா தவறுக்கும் காரணம் என்றும் கூறவில்லை. நீங்கள் கூறியது போல அனைவரும் தவறு செய்பவர்கள் தான், அதற்கு உடனுக்குடன் தண்டனை என்றால் இவ்வுலகில் மனிதர் யாரும் இருக்க மாட்டார்கள்.

 ஆனால் என் கேள்வி அதுவல்ல, ஒரு மனிதனை இயக்குவது அவன் மூளை தானே, ஒருவனை தவறு செய்ய தூண்டுவதும், நல்லது செய்ய தூண்டுவதும், ஏன் நமக்கு பசிக்கவைப்பதும், நம்மை உணவு உண்ண வைப்பதும் கூட மூளை தானே??

கடவுள் இருக்கிறார் என்று கூறும் நீங்கள் இந்த பேரண்டத்தையும், அதிலுள்ள நம்மையும் அதாவது நம்மை இயக்கும் மூளையையும் இயக்குவது கடவுள் என்று கூறுகிறீர்கள். என் கேள்வி இதுதான் நம்மை இயக்கும் நம் மூளை நம்மை தவறு செய்யாமல் தடுக்க முடியுமல்லவா ? அதை ஏன் இறைவன் செய்வதில்லை.

கடவுள் இருக்கிறார் அனைத்தையும் இயக்குகிறார் என்றால் தவறு செய்ய கட்டளை இடுவதும் அவர்தானா???

 உங்கள் நம்பிக்கையை நான் தெரிந்தோ தெரியாமலோ காயப்படுதிருந்தால் மன்னிக்கவும்
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Yousuf on September 13, 2011, 03:39:11 PM
கடவுள் இருக்கிறார் என்று கூறும் நீங்கள் இந்த பேரண்டத்தையும், அதிலுள்ள நம்மையும் அதாவது நம்மை இயக்கும் மூளையையும் இயக்குவது கடவுள் என்று கூறுகிறீர்கள். என் கேள்வி இதுதான் நம்மை இயக்கும் நம் மூளை நம்மை தவறு செய்யாமல் தடுக்க முடியுமல்லவா ? அதை ஏன் இறைவன் செய்வதில்லை.

நம்மை மூளை இயக்குகிறது என்றும் அது நம்மை தவறு செய்யாமல் தடக்க முடியும் என்றும் கூறுகிறீர்கள் ஆர்யா. உண்மைதான் ஆனால் தவறில் இருந்து தடுக்கும் என்று எப்படி கூற முடியும் இன்று உலகில் தவறுகளை அதிகம் செய்வது படித்த புத்தி மான்கள் தானே அவர்களுக்கும் மூளை இருக்கிறது அல்லவே அதை வைத்து இது நல்லது இது கேட்டது என்று பிரித்து அறிய முடியும் அல்லவே ஆர்யா. அப்படி இருக்கும் போது ஏன் அவர்கள் கேட்டதை விட்டு விட்டு நல்லதை செய்ய முன்வராமல் கேட்டதை மட்டும் செய்கிறார்கள் இதை அவர்கள் மூளை அவர்களுக்கு சொல்ல வில்லையா ??

மூளை இருக்க கூடிய மனிதர்கள் ஏன் தப்பை மட்டுமே செய்கிறார்கள் ஏன் அவர்கள் மூளைகள் செயலிழந்து விட்டதா??? ஆர்யா மூளை இருந்தால் மட்டும் போதாது ஒரு மனிதன் தவறு செய்யாமல் இருப்பதற்கு தவறு செய்தால் நாளை நாம் மட்டிகொல்வோமே நம்மை படைத்தவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறானே என்ற இறையச்சமும் தேவை அப்படி அந்த இறையச்சம் யாரிடம் உள்ளதோ அவர் நிச்சயமாக தவறு செய்வதில் இருந்து தப்பி கொள்வார். வெறும் மூளை மட்டும் நம்மை நல்வழி படுத்தி விட முடியாது ஆர்யா.

இறைவன் தவறு செய்வதை ஏன் தடுக்க வில்லை என்று கேட்கிறீர்கள் அதற்க்கு நான் முன்பே பதில் அளித்தேன். மனிதன் தவறு செய்யும் பொழுதெல்லாம் இறைதூதர்களையும் இறைவேதங்களையும் அளித்து மனிதனை நேர்வழி படுத்தினான் என்று. இறைவன் நேரடியாக வந்து மனிதனை நல்வழி படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை அது அவனுடைய ஆற்றலுக்கு அழகும் அல்ல ஆகையால் தான் மனிதர்கள் மூலமே தவறு செய்பவர்களை எச்சரிக்கை செய்ய ஒரு தூதரையும் அனுப்பி அவர்கள் திருந்தி கொள்ள ஒரு அவகாசமும் அளிக்கிறான். இதில் திருந்திகொல்வோரும் உண்டு திருந்தாதொரும் உண்டு ஆர்யா. திருந்தாதொருக்கு தண்டனையை இறைவன் முடிவு செய்து கொள்வான்.

மனிதனை இறைவன் படைத்து அவனை சுதந்திரமாக விட்டு அவனுக்கு நேர்வழி கட்டி விட்ட இறைவனை அஞ்சி கொள்ளாமல் மனிதர்கள் தவறு செய்வதற்கு நீங்கள் இறைவனை எப்படி குற்றம் சொல்ல முடியும். இறைவன் அவனுடைய நேர்வழியை காண்பிக்க வில்லை என்றால் நீங்க கேட்பது சரி. ஆனால் நீங்கள் அந்த நேர்வழியை புரிந்து கொள்ளாமல் இறைவன் ஏன் தவறை தடுக்க வில்லை என்று கேட்ட்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும் ஆர்யா.

இறைவனை குற்றம் பிடிப்பதை விட்டு விட்டு இறைவனின் நேர்வழியை பின்பற்ற தயங்கி சுயநலத்தோடு இறைவனை அஞ்சாமல் வாழக்கூடிய இந்த மனிதர்களை தான் நீங்க குற்றம் காண வேண்டும் ஆர்யா.


ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.(அல் குர்ஆன் 7:179)

இந்த இறை வசனத்தில் இறைவன் கூறியது போல் இப்படி பட்ட மனிதர்கள் இறைவனின் நேர்வழியை பற்றி சிந்திப்பதும் இல்லை கண்களால் பார்த்தாவது திருந்துவதும் இல்லை. காதுகளால் நல்ல உபதேசங்களை கேட்டாவதும் திருந்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இப்படி பட்ட மனிதர்களை குறை சொல்வதை விட்டு விட்டு நேர்வழி காண்பித்து நமக்கு உணவளித்து கொண்டு நம்மை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும் இறைவனை குறை சொல்லலாமா ஆர்யா??

கடவுள் இருக்கிறார் அனைத்தையும் இயக்குகிறார் என்றால் தவறு செய்ய கட்டளை இடுவதும் அவர்தானா???

மனிதனை இறைவன் ஒரு சிறப்பான படைப்பாக படைதுல்லன் ஆர்யா. அப்படி பட்ட மனிதனுக்கு தானாக சிந்தித்து செயல்படும் அறிவையும் கொடுத்துள்ளான். இது மட்டும் அல்லாமல் அவன் நெறிமுறை தவறாமல் ஒழுக்கமுடைய மனிதானக வாழ இறை வேதத்தையும் தந்துள்ளான். உலகம் அழியும் வரை மனிதனை சுதந்திரமாக விட்டு வைத்துள்ள இறைவன் மனிதனை இயக்கவில்லை. மனிதன் இறைவன் வழங்கியுள்ள ஆறாவது அறிவின் மூலம் சிந்தித்து மற்ற உயிரினங்களை விட்டு வேறுபட்டு இயங்குகிறான். இப்படி இயங்கும் மனிதனுக்கு தவறான வழியில் செல்ல கூடாது என்பதற்காகவே இறைவேதத்தையும் இறை தூதர்களையும் ஒவ்வோவ்று காலகட்டத்திலும் இறைவன் அனுப்பினான்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.(அல் குர்ஆன் 7:179)

மறுபடியும் இந்த வசனத்தை உதாரணம் காட்டி மனிதனைத்தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர இறைவனை அல்ல ஆர்யா...!!!

இறைவனின் இறுதி வேதத்தை படிக்க முயற்சி செய்யுங்கள். இறுதி வேதம் குர்'ஆண் தனிப்பட சமுதாயத்தின் வேதம் எனபது தவறு அது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் நேர்வழி காட்டி என்பதை நாம் அனைவரும் புரிந்தது கொள்ள வேண்டும் ஆர்யா. இதை இறைவனே தன்னுடைய வேதத்தில் கூறுவதை பாருங்கள்.


(நாம் உம்மீது இறக்கிவைதுள்ள இவ்வேதம்) இது, அகிலத்தாருக்கு நல் உபதேசமே தவிர (வேறு) இல்லை. (அல்-குர்'ஆண்:- 68 ;52 )

இறைவனை குறை சொல்வதை விட்டு விட்டு மனிதனை வேடுமானால் குறை காணலாம் ஆர்யா...!!!

அகிலங்களை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்கிறேன்...!!!
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: KungfuMaster on December 27, 2011, 02:45:10 PM
enaku ore oru doubt........
oruthan nallavana, ellarukum nallathu seiravana, santhosama ,, puthisaliya iruntha enna solluvinga ellarum
"avan punniyam senjavan, kadavul avanuku ellam kuduthurukaru, kadavul arul iruku avanuku, athanalathan ipadi nalla irukan, puthisalaiya irukanu" solli nalla vishayathuku mattum kadavula karanam aakuvinga...

aana oruthan thappanavana, muttala  iruntha udane neenga soldra vaarthaigal ennava irukum
"athu oru kedu kettathu, urupadava poguthu, ithellam epdi vaaazha poguthu theriyala, enga kidanthu vanthucho" koyyala ipa enga ponaru antha kadavul? nallathuku mattum avaru pangu poduvaru matha vishayathuku odi poiduvara? apdi oru selfish kadavul intha manusanuku thevaya?

oru accidentla epdiyo thappi thavari oruthan polachitanna kadavul punniyathula polachitan soluvinga,,, koyyala tsunami, boogambam ithellam vanthapa vaaya pothikitu poiruvinga... appo kadavul enna honey moonka poiruntharu....

athe accidentla avan sethuruntha enna theriyuma solirupinga "avan enna pavam pannano poi sernthutan, avan aayusu avalavuthan pola" ipo kadavul grate escape thana? appo kumbal kumbal ah sethangale namma makkal avanga ellarume paavam pannavangala? pacha kulanthainga thudi thudika sethangale kumbakonathula avanga enna enna pavam panirunthanga? Tsumani allitu poche athana per athula yaru yaru ena enna pavam pannirunthanga? list thara mudiyuma unga kadavullala? illa kadavula kumbudura yaralayachum list thara mudiyuma? hmmm ithuku neenga soldra pathi enna theriyuma "vithi".

kadavul kalla poi vilunthu kumbuttu, nodikoru murai ninaithu... ithellam senjathan kadavul vanthu manusangaluku nalla puthiya kuduparam... illana manasan thappa yosikirathuku avaru porupu ethuka mattaram... ennaya ithu kodumai... apo kadavuluku sidela ethachum kuduthathan avaru kadamaiya olunga seivara... apo kadavuluthan first thandanai kodukanum because lanjam vangurathuku avaru than munnodiya irukaru...
"enna kumbudu unaku nallathu nadakum" - kumbudalaina thappu ethachum nadakum, so kumbudathavangala pazhivanguru kadavul ? adpithana? enna oru nalla ennam kadavuluku... kadamaiyai sei palanai ethir parathe ithu manusanuku manusane sollikondathu... hmm manusanuku irukura intha parantha ennam kuda kadavuluku illa pola... aana kadavul romba nallavaru...rightu...

kadavul, matham, kotpadu ithellam vanthathu manusana nerimurai paduthurathuku than but entha mathamum athan sariyaana pathaila pogavum illa, mathathai parapuravangalum athai sariyana paathaila parapurathum illa... kadavul kadavul nu kaaladiyil kidakuravan than athigama thappu seiran....

kadavulnu oru vishayatha mathichi vazhi padurathula ethana per manusangala paathu ozhunga mathikirom.... oruvamillatha oru vishayathukum, kallukum thaan naam mathipu kudukurom, aanal konja naal vaazha pora manusana evanum mathikirathu illa apram ennaya kadavul? 

kadavul kadavulnu kadavuluke kondu poi kotturan manusan, itha ketta kadavula kekuraru neenga than kudukuringanu soluringa... sari manusan than kodukuran ok.. unaku than sakthi irukkulla unaku vara porula epdiyachum kashta paduravangaluku poi sekkura pola seiyalamla... alavuku athigama sothu serka kudathunu manusanuku advice pandrom, OC la varatha vanga kudathunu solurom but kadavul mattum OC la ethu koduthalum vangiparu?

nammaloda saavu nichayikka patta onnu... athukulla evalo nalla vishayangala pannanumo atha pannalam... kadavuluku selavidura neratha vera nalla vishayathuku selavu panna kadavul kochipara enna ungala? apdi kochikitaruna athuku per kadavul illa... aaga epdi pathalum kadavul concept engayo idikuthu... kadavul pinnala alairatha vittutu, kadavul moolama solla vantha nalla vishayangala mattum kadai pudicha pothum ellarum nalla irukalam...

ennoda karuthukal yarukachum kashtama iruntha mannithukollavum...
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Yousuf on December 27, 2011, 06:06:32 PM
உங்கள் பதிவிற்கு நன்றி மாஸ்டர்!

உங்களுடைய வேதனை கடவுளின் பெயரால் மக்கள் செய்யும் தவறுகள் இது அனைத்தும் நன்றாக புரிகிறது மாஸ்டர்.

உங்களுடைய பதிவில் நீங்க எந்த கடவுளை சொல்லி இப்படி ஒரு கடவுள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் என்று சொல்கிறீர்களோ அதே கடவுளை நானும் இல்லாமல் இருப்பதே மேல் என்று தான் கூறுகிறேன்.

ஆனால் நான் சொல்லும் கடவுள் கொள்கை சற்று வித்தியாசமானது மாஸ்டர்!

நீங்கள் சொன்னீர்கள் கடவுளுக்கு கொண்டுபோய் அனைத்தையும் கொடுகிறார்கள் கடவுள் என் நம்மிடம் கேட்க வேண்டும் என்று மிகவும் சரியான கேள்வி. இறைவன் தேவைகள் அற்றவன் என்ற அந்த உண்மை புரியாத மக்கள் தான் கடவுளுக்கு கொண்டு போய் செய்கிறோம் என்ற பெயரில் கோவில் உண்டியலில் போட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நான் இங்கு வாதிட்டு கொண்டிருக்கும் கடவுள் இறைமறை குர்'ஆணின் கூற்றுப்படி இறைவன் தேவைகள் அற்றவன். அவன் மனிதர்களிடம் எதையும் கேட்ட்கவில்லை. மாறாக அவனே இந்த மனிதர்களுக்கு வழங்கி கொண்டிருக்க கூடியவன்.

கடவுள் யார்கிட்டயும் எதையும் கேட்கவில்லை மாஸ்டர் மாறாக அவன் மனிதர்களுக்குத்தான் கொடுக்க சொல்கிறான்.

இதோ இறை மறை கூறுகிறது:

''உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், இறைவனின் பாதையில் நாடு துறந்தொருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22)

இந்த வசனத்திற்கு ஏற்றார் போல் இறைத்தூதரின் போதனையை பாருங்கள்:


பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6539)

''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1426)

இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும் என்பதை.

நீங்கள் சொல்வது அனைத்தும் இந்த உலகில் குறிப்பாக இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் செய்து கொடிருக்கும் மூட பழக்க வழக்கங்களை வைத்து இப்படி ஒரு இறைவன் தேவை இல்லை என்று சொல்கிறீர்கள்.

இது சரியான வாதாமாக இருக்காது ஏனென்றால் ஒரு குறிப்பிட வட்டத்திற்குள் ஆய்வு செய்து விட்டு கருத்து சொல்வதை விட ஒரு கருத்து சொல்வதற்கு முன் நன்றாக ஆராய்ந்து கருத்து சொல்வது சிறந்தது.

ஒருவன் நல்லவன் என்பதையோ கேட்டவன் என்பதையோ தீர்மானிக்க வேண்டியது மக்கள் அல்ல அனைத்தையும் படைத்தவன் தான் மாஸ்டர்.

ஒருவனுடைய வெளி பண்புகளை வைத்து அவன் நல்லவன் என்பதையும் கேட்டவன் என்பதையும் மக்கள் கூறுகிறார்கள் என்பதற்காக நாம் அவனுக்கு சான்று வழங்கி விட முடியாது ஆகவே இந்த விடயத்தில் நல்லவன் கெட்டவனை அடையாளம் காண்பது மனிதர்களால் இயலாத ஒன்று!

ஒருவர் இறந்துவிட்டால் அவர் பாவம் செய்தவர் ஒருவர் ஆபத்தில் இருந்து பிழைத்து விட்டால் அவர் புண்ணியம் செய்தவர் என்று மக்கள் கூறும் இந்த மூட பழக்கத்தை நானும் கடுமையாக எதிர்க்கிறேன் மாஸ்டர்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆகவே அதில் இருந்து நல்லவன் கேட்டவன் என்று யாரும் தப்பி விட முடியாது.

அவர்களுக்குரிய நேரம் வந்து விட்டால் அவர்கள் மரணத்திற்கு பயந்து இரும்பு கோட்டைகளில் ஒளிந்திருந்தாலும் மரணமா அவர்களை அடைந்தே தீரும்!

மாஸ்டர் நான் இங்க எந்த கடவுளை வைத்து வாதிட்டுகொன்டிருக்கிறேனோ அந்த கடவுள் தனக்காக ஒன்றும் செய்ய சொல்ல வில்லை மாறாக நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு பயன் தரக்கூடிய விடங்களை செய்து நீங்கள் இறைவனின் நேசத்தை பெறுங்கள் என்று தான் கற்று கொடுக்கிறானே தவிர நீங்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் என் பாதத்தில் இருந்து கொண்டே இருங்கள் நீங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று கூற வில்லை.

அதற்க்கு பதிலாக இறைவனின் நேசத்தை எதில் பெறலாம் என்று இறைவனின் தூதர் கூறினார்கள் ஒரு சின்ன விடயம் என்று மக்கள் அலட்சியமாக கருதும் ஒரு விடயம் என்னவென்றால்,

ஒரு பாதையில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் ஒரு தடுப்பை அகற்றினால் அதன் மூலம் நீங்கள் இறைவனின் நேசத்தை பெற முடியும் என்று இறைவனின் தூதர் எங்களுக்கு கற்று கொடுத்தார்கள்.

ஆகவே நான் இங்கே கூறி கொண்டிருக்க கூடிய கடவுள் கொள்கை உங்களுக்கு இது வரை அறியாத கடவுள் கொள்கை என்று நினைக்கிறன்

நான் கூறும் கடவுள் கொள்கையின் மூலாம் மற்றவர்களுக்கு உதவுவதும் மட்டும் தான் இறைவனின் நேசத்தை பெற முடியும் என்ற கடவுள் கொள்கை.

மற்றபடி உங்கள் பெரும்பான்மையான கேள்விகளுக்கு நான் ஏற்கனவே உள்ள பதிவுகளில் பதில் கொடுத்து விட்டேன்.

நீங்கள் வேண்டுமானால் ஆரம்பத்தில் இருந்து ஒரு முறை அனைத்தையும் படித்து விட்டு உங்கள் பதிவை பதிவு செய்தால் அடுத்த பதிவிற்கு வசதியாக இருக்கும்.

மாஸ்டர் நீங்கள் எந்த கடவுளை மறுக்கிரீர்களோ அந்த கடவுளை நானும் மறுக்கிறேன். நான் கூறும் கடவுள் தேவைகள் அற்றவன். அவன் தான் மனிதனுக்கு கொடுப்பவன். மனிதனிடம் இருந்து பெறுபவன் அல்ல.

ஏழைகளுக்கு உதவுவதன் மூல இறைவனின் நேசத்தை பெற முடியும் என்பது இங்கு நான் முன் வைக்கும் கடவுள் கொள்கை!
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: KungfuMaster on December 27, 2011, 06:30:13 PM
sari yousuf :D:D

but enaku kadavul nu kettale kovam kovama varuthu :D
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Yousuf on December 27, 2011, 07:47:19 PM
உங்களுக்கு கடவுளின் பெயரை கேட்டால் கோபம் வருகிறது எனக்கு கடவுளின் பெயரை சொல்லி எமற்றுபவர்களை பார்த்தால் கோபம் வருகிறது மாஸ்டர்!

இது தான் உங்களுக்கு எனக்கும் உள்ள வேறுபாடு! :D

நன்றி!
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Ra-One on December 31, 2011, 06:35:01 PM
KAdavul irukiraR :)
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: suresh on January 15, 2012, 01:36:45 PM
ellorum ivalo perusa type pani irukinga enala padichi reply koduka mudiala athanala enaku enna thonutho atha solren.... kadavul irukinrar enru solli nam manathai naam katupaduthikollavum,,, mirugam ponru yaarum nammai katupadutha mudiathu enru sinthanaigal varamal iruka munorgal thuvaki vaitha oru achani than kadavul... atharkaga pala naadagangalum kadavul peyaril thiruvizha , pandigai enru nadatha paduginrana .... palveru mozhigalilum,, palveru kadavul peyargalilum inru varai nadatha paduginrana..... pinjila irunthe namaku mel yaaro oruthar irukanganu kozhanthaikaluku oru bayathai paalooti varuginrargal,, appa amma matrum ulagam yaaro oruvaruku bayanthu nadapathai parthu siruvargalum kadavul enru yaaro irukirar pola enru thanai ariyamale thanai control seiya palagi kolgirargal....ulagil iyarkai, ulagam,, ithai aarayave namaku theriavillai,,, kannuku therinja vishayathaiye namala aaraya mudiala aanal kannil parkatha vishayathuku oru uruvam koduthu,, pandigai naatkal kurithi vaithu,, viratham,, enru anaithume nadagathin oru seyalpaadu than....manathai sariyaga thanvasa pada therinjavan entha vishayam seithalum sariyaga mudivu tharum athu vetriya irunthalum sari tholviya irunthalum sari,,,, ithai theriyamal mudivukaga kaduviln paathangalil vilunthu thaan seitha seyaluku mudivu theriamal irupathu sari alla....naanum intha samuthayathin vithi vilaku alla petrorgalin varpurathalin perilum,,samuthayathin paarvayil puthithai theriyakoodathu enbathal naanum veru vazhi inri kadavulai vanangukinren.... ennai ponru evalovo peru varpurathalin peyaril vanangugirargal :) :) :)
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: shaM on February 18, 2012, 08:59:11 PM
Kadavul irukirar
Naama  paavikira ovvaru upakaranathaium  oruvaakiyathukku orutharu erukirathu pola :S nama   vaazukira  inta  ulakathai oruvaakiyathukkum ore oru kadavul than erukiraN
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: supernatural on February 19, 2012, 10:21:00 AM
nitchayamaaga kadavul irukirar.!!!
oru karu urvaathu muthal avan vaaznaalai nitchayippathu yar?
oruvan pirapathum , irapathum nitchaippavan yaar?
kadavul endroru shakthiillavittal ithellam eppadi saathiyam?
naalai endrulla ethirpaarpey kadavul meethulla nambikai thaaney..
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: ooviya on February 20, 2012, 11:20:54 PM
கடவுள் இருக்கிறாரா  இல்லையா என்பது எனக்கு தெரியாது !!!

கடவுள் நமக்குள் இருக்கிறார்

தீயவர்களை அழிப்பது மனிதன்
நல்லது செய்பவன் மனிதன்
உதவி செய்பவன் மனிதன்
குற்றம் செய்பவரை தண்டிப்பதும் மனிதன்
உருவாகுவது மனிதன்
அழிப்பதும் மனிதன்

அப்போ நாம் தானே கடவுள்

பசின்னு வருபவர்களுக்கு ஒரு வாய்  சாப்பாடு போட்டால்
அங்கே நீ தான் கடவுள்

நீங்க கடவுள் இல்லாட்டி போங்கப்பா
இந்த ஓவியா ஒரு கடவுள் தான்

Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on February 21, 2012, 09:11:57 PM
ஓவியா
கலக்கிட்டீங்க. நாங்க சொன்னதும் இது தான்.
அன்பே சிவம். அப்போ நீங்க கடவுள் தான்
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: Bommi on March 06, 2012, 08:32:22 PM
தீயவர்களை அழிப்பது மனிதன்
நல்லது செய்பவன் மனிதன்
உதவி செய்பவன் மனிதன்
குற்றம் செய்பவரை தண்டிப்பதும் மனிதன்
உருவாகுவது மனிதன்
அழிப்பதும் மனிதன்

ஓவிய நல்ல கருத்து
ஆனால் இது அந்த காலத்துக்கு
 மனிதர்களுக்கு ஓகே.....
இந்த காலத்து மனிதர்களுக்கு
மனிதாபிமானம் ரெம்ப குறைவு
சோ கடவுள் இருக்கிறாரா
இல்லையானு டவுட் தான்











Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: suthar on March 08, 2012, 06:34:27 PM
arumaiyaana vivaatham nandraaga irunthathu antha pagutikkul nan vara villai
irandu vivaathathirkul than sendren oviya muththaaipaaga oru siru karuthai thulirththuvittu sendru irukiraar...
mannikavum usf muthal ondru irunthaal than mudivu iruthi irukkum ungal karuthukkalil iruthi vetham kuraan endru solli irukireergal
kadavul irukiraar nanbargal moolamaaga therinthu kondathu
arya, thamizhan,usf pentheivam anjel matrum oviya bommi enaku kadavulaaga than kaatchi alikiraargal

oviyayai paarati pesa vanthana ivan endru kelvi ezhum
mannikavum muthalum mudivumaaga evan ullano avan kadavul appadi enil muthalum mudivum ullavan manithan avan kadavul enbathai oviya azhutham thiruthamaaga soli irukirar nanbargal sonna theeviravaathamum athaiye than seigirathu eppozhuthu atharmam thalai thukugioratho appozhuthu iraivan thondruvan endru sol kelvi enaku pulli vivarangal theriyathu appadi arasiyalaalargal, aanavakaarargalaai maarum pothu theeviravaatham vazhiye kadavul thunai purigiran enbathu en vaatham
theeviravaathathai aatharikka villai vivathathai aatahrikiren nandri
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: ooviya on March 09, 2012, 05:16:48 AM
பொம்மி :

எந்த காலத்திலும் மனிதர்கள் மனிதர்கள் தான் பொம்மி
உதவுவதும் உதவாததும் அவர் அவர் மனசு  பொருத்தது
100 பேரில் 
10 பேராவது மனிதாபிமானம்  உள்ளவர்கள் இருக்க தான் செயுறாங்க

உங்களை போலவும் என்னை போலவும்



சுதர் :

உங்கள் பாராட்டுக்கு ரொம்போ நன்றி

Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: thamilan on March 09, 2012, 11:28:26 AM
இந்த‌ இறைவ‌ன் உண்டா, இல்லையா என்ற‌ பிர‌ச்ச‌னை ம‌னித‌ன் சி ந்திக்க‌த் தொட‌ங்கிய‌ நாள் முத‌ல் உல‌கில் இருக்கிற‌து.
இன்த‌ விவாத‌ம் இன்றும் தொட‌ரும் நாளையும் தொட‌ரும். என்று இறைவ‌ன் உல‌கின் முன் காட்சிய‌ளிக்கிறானோ அன்று தான் இது முடியும்.
இறைவ‌ன் இருக்கிறான் அன்றும் இல்லை என்றும் பேச‌ இர‌ண்டு ப‌க்க‌மும் இட‌ம் இருக்கிற‌து.
இறைவ‌ன் இருக்கிறான் என்று வாதிடுப‌வ‌ர்க‌ள் அதை ச ந்தேக‌த்துக்கு இட‌மின்றி நிருபிக்க‌ முடிய‌வில்லை. அவ‌ர்க‌ள் சொல்லும் சாட்சிக‌ள் அனைத்தும் வேத‌ நூல்க‌ளை சார் ந்த‌வையாக‌வே இருக்கிற‌து.
அதே போல‌ இறைவ‌ன் இல்லை என்ப‌வனுக்கு பிர‌ப‌ஞ்ச‌த்தின் தோற்ற‌ம், இய‌ற்கையின் இய‌க்க‌ம் ப‌ற்றிய‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ முடிவ‌தில்லை.
இறைவ‌ன் இருக்கிறான் என்றால் அவ‌னால் ம‌னித‌னுக்கு என்ன‌ லாப‌ம் இருக்கிற‌து. ஒரு ம‌னித‌ன் உயிர் வாழ உண‌வு தேவை. அ ந்த‌ உண‌வை வாங்க‌ ப‌ண‌ம் தேவை. இவை சும்மா கிடைக்கிற‌தா. அவ‌ன் க‌ஸ்ட‌ப்ப‌ட்டு உழைக்க‌ வேண்டும். அவ‌ன் உழைப்பு அவ‌னை வாழ‌ வைக்கிற‌து. இதில் இறைவ‌ன் எங்கிருந்து வ‌ந்தான்?
ம‌னித‌ர்க‌ளை ப‌டைத்த‌ இறைவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு துன்ப‌த்தை கொடுப்ப‌து ஏன். அது அவ‌ர்க‌ள் பாவ‌த்துக்கு த‌ண்ட‌னை என‌ வாதிட‌லாம். ச‌ரி சுனாமி வ‌ந்த‌போது பிற‌ந்து ஒரு சில‌ மாத‌ங்க‌ளே ஆன‌ கைக்குழ‌ந்தைக‌ள் கூட‌ அடித்து சொல்ல‌ப்ப‌ட்டதே அது எத‌ற்காக‌? அவை செய்த‌ பாவ‌ம் தான் என்ன‌?
ஒரு உயிர் உதித்து ஒரு சில‌ க‌ண‌ங்க‌ளில் ம‌ரிப்ப‌து என்றால் அந்த‌ ப‌டைப்பின் அர்த்த‌ம் என்ன‌? க‌ட‌வுளுக்கு விளையாட‌ உயிர்க‌ள் தான் கிடைத்த‌ன‌வா?

ஒரு ம‌னித‌ன் பிற‌ந்து வ‌ள‌ர்ந்து இற‌க்கும் வ‌ரை ஓவியா,பொம்மி சொன்ன‌து போல‌ ம‌னித‌னே க‌ட‌வுள். ம‌னித‌னே சாத்தான்.
எவ‌ன் ம‌ற்ற‌வ‌னிட‌ம் இர‌க்க‌ம் காட்டுகிறானோ அவ‌னே இறைவ‌ன்.
இறைவ‌ன் உருவ‌ம‌ற்ற‌வ‌னாக‌ இருந்து விட்டு போக‌ட்டும்.
க‌ண்ணுக்கு தெரியாத‌தை இருக்கிறதா இல்லையா என‌ நினைத்து குழ‌ம்புவ‌தை விட‌ க‌ண்ணுக்கு தெரிவ‌தை ம‌ட்டும் ந‌ம்புவோம்.

உன‌து எண்ண‌க்க‌ளும், செய‌லும் தூய்மையாய் இருந்தால் அங்கே க‌ட‌வுளுக்கு என்ன வேலை? உன‌க்கு நீயே க‌ட‌வுள்.
கெட்ட‌வ‌ர்க‌ளை விட‌ நல்ல‌வ‌ர்க‌ளே உல‌கில் அதிக‌ம் துன்ப‌ப்ப‌டுகிறார்க‌ள். ஆத்திக‌ர்க‌ள் அது க‌ட‌வுளின் சோத‌னை என்பார்க‌ள். கெட்ட‌வ‌னை விட்டுவிட்டு ந‌ல்ல‌வ‌னை சோதிப்ப‌து என்ன நியாய‌ம். நம் நாட்டு ச‌ட்ட‌ங்க‌ளும் கெட்டவ‌ர்க‌ளை விட்டு விட்டு ந‌ல்ல‌வ‌ர்களை தான் த‌ண்டிக்கிற‌து.இறைவ‌னும் அப்ப‌டியா?

க‌ட‌வுள் இன்று வ‌ரை சிலையாக‌ தான் இருக்கிறார். ம‌னித‌ன் தான் சில‌ நேர‌ங்க‌ளில் க‌ட‌வுளை விட‌ உய‌ர்ந்த‌வ‌ன் ஆக‌ தெரிகிறான். சில‌ நேர‌ம் சாத்தானை விட‌ மோச‌மான‌வ‌னாக‌ மாறுகிறான். ஆக‌வே ம‌னித‌னே தெய்வ‌ம். ம‌னித‌னே சாத்தான்.
எவ‌னிட‌ம் பிற‌ர் மேல் அன்பு இருக்கிற‌தோ அவ‌னே தெய்வ‌ம்.
அன்பே சிவ‌ம்
Title: Re: கடவுள் இருக்கின்றாரா இல்லையா?
Post by: suthar on March 09, 2012, 01:27:15 PM
oru vazhiyaa mudivukku vanthachu pola......