ஏக இறைவனின் திருப்பெயரால்.....
இறைவன் இருக்கிறான் எனபது என்னுடைய வாதம் அதில் உறுதியாகவும் இருகின்றேன்.
முதலில் இறைவனை பற்றி நாம் விளங்கி வைதுருப்பது தவறு சிலர் இறைவனை மனிதர்களை போன்று கருதுகிறார்கள் மனிதனை இறைவன் ஆகுவதற்கு இது தான் அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு. தமிழன் இறைவன் இல்லாமல் இந்த உலகம் எப்டி வந்தது என்று சிந்திக்க வேண்டும். ஒரு கைபேசியை எடுத்து கொள்வோம் உதாரனதிரக்காக அந்த கை பேசி எப்படி வந்தது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். இதை ஒருவர் தயாரித்துள்ளார் என்று தானே சொல்வீர்கள் அது தானே பகுத்தறிவு. அந்த கைபேசியை தயாரித்த நபரை நீங்கள் பார்த்துள்ளீர்கள? பிறகு எப்படி அதை ஒரு நபர் தயாரித்துள்ளார் என்று கூறுவீர்களோ அதே போல் இந்த அகிலத்தையும் பாருங்க தமிழன் இப்படி பட்ட பிரமாண்டமான அகிலத்தை எப்படி தானாக தோன்றியது என்று கூற முடியும். ஒரு கை பேசி அதை விட ஒரு அற்ப பொருளான ஒரு சோறு எடுக்குற டப்பாவை எடுத்தாளும் அது தானாக தோன்ற முடியாது அதை படைக்க கூடிய படைப்பாளன் தேவை என்றிருக்கும் பொழுது இந்த உலகம் எப்படி இறைவன் படைக்காமல் தானாக தோன்றி இருக்க முடியும் இது தான் இறை மறுப்பாளர்களின் பகுத்தறிவா?
நீங்கள் சொன்னீர்கள் தமிழன் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று அதை அறிவியல் பூர்வமாக இது வரை செயல்முறையில் யாரும் நிரூபிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் சார்லஸ் டார்வின் உடைய இந்த கருத்து பொய் என்று தற்பொழுது அறிவியலாளர்கள் கூறுகிறாகள் இதை பற்றி விவரம் தேவை என்று நீங்கள் கூறினால் அடுத்த பதிவில் சமர்பிக்கிறேன். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினால் இப்பொழுது இருக்கும் குரங்கில் இருந்து மனிதல் தோன்ற வேண்டும் ஏன் தோன்ற வில்லை? அடுத்து குழந்தைகளை அறிவியல் பூர்வமாக (test Tube ) பேபி என்று சொல்ல கூடிய அறிவியலின் வளர்ச்சியின் காரணமாக உருவாகுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். எந்த ஒரு கருப்பொருளும் இல்லாமல் இவர்கள் குழந்தையை இவர்கள் உருவாகினார்களா? அல்லது ஒருவரின் விந்தணுவையும் பெண்ணின் அண்டனுவையும் வைத்து உருவாகினார்கள சற்று சிந்திக்க வேண்டும். எந்த ஒரு பொருளும் இல்லாமல் குழந்தையை அல்லது வேறு எதையும் மூல பொருள் இல்லாமல் உருவாகியவன் தான் இறைவன் மனிதர்கள் அப்படி உருவாக்கவில்லை என்பதை இந்த இடத்தில நான் பதிவு செய்கிறேன்.
இறைவன் உள்ளான் என்பதற்கு இன்னும் பல அத்தாட்சிகளை என்னால் இறைவன் நாடினால் சமர்பிக்க முடியும். உங்களுடைய பதிலை எதிர் பார்த்து அடுத்த பதிவை தொடங்குகிறேன் இறைவன் நாடினால்.