கண்டிப்பாக தூக்கு தண்டனை அவசியமான ஒன்று.
ஒருவன் செய்யும் கொடுரூமான குற்றத்துக்கு தூக்கு தண்டனையே சரியானது. இதுவே உங்கள் தாய் தந்தையரை அல்லது உங்களுடைய சகோதர சகோதரனை, உங்கள் குழந்தையை கொன்ற கொலைகாரனுக்கு தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்ல உங்கள் மனம் முன் வருமா ?ஈழ தமிழர்களை கொண்டு குவித்த மகிந்த ராஜபக்சேக்கு சிறை தண்டனை என்று சொன்னால் அதை தமிழர்கள் நாம் ஏற்றுகொள்ளுவோமா?
சட்டங்கள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும். ஒருவனுக்கு சிறை தண்டனை மற்றுமே அதிகபட்ச தண்டனையாக இருப்பின் யாரும் துணிந்து குற்றங்கள் செய்வார்கள்.எதிர்பாராத விதத்தில் , உணர்ச்சிவசப்பட்டு செய்யபடுகின்ற கொலைக் குற்றங்களுக்கு வேண்டுமானால் சிறை தண்டனை சரி. ஆனால் திட்டமிட்டு தன்னுடைய சுயலாபத்துக்காக , தன்னுடைய இன்பத்துக்காக செய்யபடுகின்ற கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கு தூக்குதண்டனை சரியானது என்பதே எனது கருத்து.