இந்த இறைவன் உண்டா, இல்லையா என்ற பிரச்சனை மனிதன் சி ந்திக்கத் தொடங்கிய நாள் முதல் உலகில் இருக்கிறது.
இன்த விவாதம் இன்றும் தொடரும் நாளையும் தொடரும். என்று இறைவன் உலகின் முன் காட்சியளிக்கிறானோ அன்று தான் இது முடியும்.
இறைவன் இருக்கிறான் அன்றும் இல்லை என்றும் பேச இரண்டு பக்கமும் இடம் இருக்கிறது.
இறைவன் இருக்கிறான் என்று வாதிடுபவர்கள் அதை ச ந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்க முடியவில்லை. அவர்கள் சொல்லும் சாட்சிகள் அனைத்தும் வேத நூல்களை சார் ந்தவையாகவே இருக்கிறது.
அதே போல இறைவன் இல்லை என்பவனுக்கு பிரபஞ்சத்தின் தோற்றம், இயற்கையின் இயக்கம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை.
இறைவன் இருக்கிறான் என்றால் அவனால் மனிதனுக்கு என்ன லாபம் இருக்கிறது. ஒரு மனிதன் உயிர் வாழ உணவு தேவை. அ ந்த உணவை வாங்க பணம் தேவை. இவை சும்மா கிடைக்கிறதா. அவன் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும். அவன் உழைப்பு அவனை வாழ வைக்கிறது. இதில் இறைவன் எங்கிருந்து வந்தான்?
மனிதர்களை படைத்த இறைவன் அவர்களுக்கு துன்பத்தை கொடுப்பது ஏன். அது அவர்கள் பாவத்துக்கு தண்டனை என வாதிடலாம். சரி சுனாமி வந்தபோது பிறந்து ஒரு சில மாதங்களே ஆன கைக்குழந்தைகள் கூட அடித்து சொல்லப்பட்டதே அது எதற்காக? அவை செய்த பாவம் தான் என்ன?
ஒரு உயிர் உதித்து ஒரு சில கணங்களில் மரிப்பது என்றால் அந்த படைப்பின் அர்த்தம் என்ன? கடவுளுக்கு விளையாட உயிர்கள் தான் கிடைத்தனவா?
ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து இறக்கும் வரை ஓவியா,பொம்மி சொன்னது போல மனிதனே கடவுள். மனிதனே சாத்தான்.
எவன் மற்றவனிடம் இரக்கம் காட்டுகிறானோ அவனே இறைவன்.
இறைவன் உருவமற்றவனாக இருந்து விட்டு போகட்டும்.
கண்ணுக்கு தெரியாததை இருக்கிறதா இல்லையா என நினைத்து குழம்புவதை விட கண்ணுக்கு தெரிவதை மட்டும் நம்புவோம்.
உனது எண்ணக்களும், செயலும் தூய்மையாய் இருந்தால் அங்கே கடவுளுக்கு என்ன வேலை? உனக்கு நீயே கடவுள்.
கெட்டவர்களை விட நல்லவர்களே உலகில் அதிகம் துன்பப்படுகிறார்கள். ஆத்திகர்கள் அது கடவுளின் சோதனை என்பார்கள். கெட்டவனை விட்டுவிட்டு நல்லவனை சோதிப்பது என்ன நியாயம். நம் நாட்டு சட்டங்களும் கெட்டவர்களை விட்டு விட்டு நல்லவர்களை தான் தண்டிக்கிறது.இறைவனும் அப்படியா?
கடவுள் இன்று வரை சிலையாக தான் இருக்கிறார். மனிதன் தான் சில நேரங்களில் கடவுளை விட உயர்ந்தவன் ஆக தெரிகிறான். சில நேரம் சாத்தானை விட மோசமானவனாக மாறுகிறான். ஆகவே மனிதனே தெய்வம். மனிதனே சாத்தான்.
எவனிடம் பிறர் மேல் அன்பு இருக்கிறதோ அவனே தெய்வம்.
அன்பே சிவம்