கல்விப் பருவதில் வந்த காதல்
காளை என் நெஞ்சில் பதிந்த காதல்
தேவி உன்னை பார்த்த தருணம்
கருவறையை மறந்த கணங்கள்
இதுவரை மலராத மலரொன்று
அன்று என்னை பார்த்து மலரக்கண்டேன்
என் உடலின் உஷ்ணத்தை உணர்ந்தேன்
உன் பார்வையின் அர்த்தமும் புரிந்தேன்
மறு பெஞ்சில் நீயும்
உன்னை ரசிக்கும் என் கண்கள்
பார்வையாலே உன்னை வலை வீச
ஒரக் கண்சிமிட்டால் கவிழ்த்துவிட்டாய்
அப்பப்பா ....
அவை மான் விழிகளா? இல்லை மது ரசமா?
கண்ணழகி உன்னை பார்த்து கவிழ்ந்துவிட்டேனடி
கண்ஜாடையில் என்னைக் கவர்ந்துவிடு
இல்லையென்றால் கோபத்தால் பொசுக்கி விடு
தள்ளிநின்று உன்னை பார்ப்பதை விட
உன் பார்வையில் பொசுங்கி போய்விடுகிறேன்
ஒரு பார்வைக்கு தவமிருக்கிறேனடி
மண்ணில் உன்னை சேரவில்லை
விண்ணிலாவது என்னைச் சேர்வாயா?
அந்த நாளுக்க்காக காத்திருக்கும் உன் அன்பன் நான்.
ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்