Author Topic: அவதூறு செய்வதும் அரசியலா  (Read 3011 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அவதூறு செய்வதும் அரசியலா


ஒரு மனிதனை அல்லது மனுஷியை அவதூறு செய்வதில் சிக்கிக் கொள்ளுபவர்களில் முதலிடத்திலிருப்பவர்கள் (பிரபலங்கள்) - அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர் நடிகைகள், வேலைக்கு போகும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மனிதனை மனிதன் தூற்றித்திரிவது என்பது மன நோயாகும், அடுத்தவரிடத்திலிருக்கும் நிறைகுறைகள் தன்னிடத்திலும் இருக்கிறது என்பதை மறந்த அல்லது ஏற்றுக்கொள்ள திராணியில்லாத கோழைத்தனம், முட்டாள்த்தனம் போன்றவற்றின் மொத்த வெளிப்பாடுதான் அவதூறு பேசுவதற்கு காரணம்.

குறை இல்லாத மனிதரை இறைவன் படைக்கவே இல்லை, குறைகள் இருப்பதனாலேயே ஒரு மனிதன் கடவுளை நினைக்க சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

பலருக்கு அடுத்தவரை குறைக்கூறி வாழ்வதே இன்பம், அதிலொரு திருப்தி.

மாணாக்கர்களில் கூட இதற்க்கு உதாரணம் சொல்லலாம், எத்தனை முயற்ச்சிகள் எடுத்தும் அதிகபட்ச மதிப்பெண்களை பெற இயலாமல் போகும் நிலையில் அதிக மதிப்பெண்களை எடுத்து சாதனைகள் பல செய்யும் மாணவ மாணவியர்கள் மீது ஏற்ப்படும் பொறாமை அல்லது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்களைப்பற்றி அவதூறு பேசி தங்கள் காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்து கொள்ளுதல், இது சாபக்கேடான நிலைமை.

சிலர் காரணம் ஏதும் இல்லாமல் கூட அடுத்தவரைப் பற்றி அவதூறு பேசி மகிழ்வதுண்டு.

இத்தகைய நிலைமை அரசியல் தலைவர்களைப்பற்றி அவதூறு பேசி வருபவர்களை காண நேரும்போதும் கேட்க்க நேரும் போதும் அவர்களது காழ்ப்புணர்ச்சியே அதற்க்கு காரணம் என்பது தெள்ள தெளிவாக காண முடிகிறது, இதுவும் மகா சாபக்கேடு தான்.

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசங்கள் என்னவென்பது அவதூறு பேசுபவர்கள் அறிந்திருந்தாலும் கூட, குறைக் கூறுவது என்பது சிலரின் சாபக்கேடு, அதை மாற்றவும் இயலாது, பொருத்துக்கொள்ளவும் இயலாது.

இதற்காகவே திண்ணைகள் கட்டபட்டதுப்போல அந்தகாலத்திலிருந்தே திண்ணை பேச்சுக்கள் இருந்து வந்துள்ளது இதற்க்கு உதாரணம், இப்போதெல்லாம் பத்திரிகைகளும் ஊடகங்களும் அவதூறுகளை பிரசுரித்து பிரபலப்படுத்துவதாலோ என்னவோ திண்ணைகள் காணாமல் போய்விட்டது.

மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி !!!

ஒழுக்குப்பானையில் நீர் நிரப்ப முயலுபவரின் நிலைதான் இந்த அவதூறு பேசித்திரிபவர்களின் நிலைமையும்.