FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on October 17, 2019, 07:07:05 PM
-
உயிரை பார்க்க முடியாது என
யார் சொன்னது...
நான் எனதுயிரை பார்க்கிறேன்
அவள் பேசுவாள் சிரிப்பாள்
நடந்து போவாள்...
அவள். வார்த்தைகளாக பேசுவதில்லை
மௌனங்களாக பேசுகிறாள்
கவிதைகளாக கனவுகளாக பேசுகிறாள்
ஆனாலும் ஆனாலும்
அவளுக்காக ஏற்றுக்கொள்கிறேன்
இந்த பிரிவை வலிகளை
அவளுக்காக என் விழிகளில் இருந்து
வீழும் கண்ணீர் கூட சுகமானது
அவள் நினைவுகள் எப்போதும் அழகானது
அவள் இல்லாத வாழ்க்கை நான் விரும்பாதது...
பிரிந்து செல்லும் நேரத்தில் உன்னை
புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன்
அன்பே.... கேள்....
வாழ்க்கைக்கு பொருளாக வந்தவளும் நீ தான்
என் வானத்து நிலவாக நின்றவளும் நீ தான்
என்னை அறியாமல் எனை வென்றவளும் நீ தான்
என் இதயம் உனதாக்கி கொண்டவளும் நீ தான்
அன்பாக சில பார்வை பார்த்தவளும் நீ தான்
அழகாக எனை கொஞ்சம் மாற்றியதும் நீ தான்
காலம் காலமாக என் காதலியும் நீ தான்
கடைசி வரையிலும் என் கண்மணியும் நீ தான்
உடல் மேவி வரும் என்னுயிரும் நீ தான்
உயிருக்கு நிகரான தாய்மொழியும் நீ தான்
என் உயிரே உயிரான தாய் மண்ணும் நீ தான்
உயிரை தழுவி வரும் உணர்வுகளும் நீ தான்
உணர்வை ஆளுகின்ற ஆளுமையும் நீ தான்
காதலியே பிரிந்தாலும் என்னோடு வாழ்பவளும் நீ தான்
நான் இறந்தாலும் எனதுயிராய் இருப்பவளும் நீ தான்...
........... சிற்பி....
-
அருமையான கவிதை நண்பா