இரவுகள் பல சுகம் தரலாம்
பலருக்கு
இரவுகள் என்றும் நரகம் தான்
எனக்கு
எத்தனை பேர்களின் கவலைகள்
தீர்க்கும் கடல் நீ
என்னை போன்றோர்களின்
பசியையும் நீயே தீர்ப்பாய்
இன்று , என் கணவன் என்றும் போல்
வலை விரித்து மீன் பிடிக்க
புறப்பட்டான் உன்னிடம்
வைத்துக்கொண்டு வஞ்சம் செய்யாதவள் -நீ
பல நாள் எங்கள் பட்டினியை மறக்க செய்தவள் நீ
கடற்கரையில் மனிதர்களை பார்ப்பதாலோ என்னவோ
ஆர்ப்பரித்து சீறுவாய் நீ
உன் உண்மை குணம் நடுக்கடல் வந்து பார்த்தவருக்கு புரியும்
அமைதியின் இருப்பிடம் நீ என்று
எல்லைகள் உனக்கில்லை , உன்னில் எல்லைகளை
வகுத்தவனுக்கோ பகுத்தறிவுமில்லை
மீன் தேடி வலை விரித்து, இரவில்கடலில் சென்ற என் கணவனுக்கோ
மீளா துயரத்தில் நான் விழுவேன் என்று நினைத்திருக்க வாய்ப்புமில்லை
வலை விரித்து காத்திருந்த நேரம் , எல்லை கடந்து வந்ததாய்
தாக்கியது துப்பாக்கி குண்டுகள் என் கணவனின் மார்பில்
உதவிக்கு யாருமில்லை என் கடல் அன்னையே
நீயே சரணம் என்று உன் மடியில் விழுந்தாரே !
அமைதியாய் என்றும் போல் இன்றும் உன் மடியில்
ஏற்றுக்கொண்டாய்
அவரின் சடலம் கூட நான் பார்க்கவில்லை
உன்னில் அவர் வாழ்வார் என்று நம்பிக்கையில்
இதோ நானும் வருகிறேன் உன் மடியில் விழுகிறேன்
என்னையும் அரவணைத்துக்கொள்
என் கடல் அன்னையே !
****ஜோக்கர் *****