உன்பெயரை யாரேனும் உச்சரித்தால் - என்
நாவினில் நாளங்கள் நர்த்தனம் ஆடும்
உனைபார்த்ததும் படபடவென - என்
இதயம் தாளம் தப்பி துடிக்கும்
உனை என் கையினில் ஏந்தும் நொடி
உலகமே என் கைவசப்படும்
பளபளக்கும் உன் ஆடை, பூ போல - உனை
வருடி உன் மெய் தீண்டி ஸ்பரித்து சிலிர்த்துடுவேன்
என் இதழை நீ வருடும் நொடி எனைமறந்து
உன்னில் மூழ்கி தொலைத்துடுவேனே
என்நாவில் படும் முன்னமே நாவூறும்-பட்ட
பின்னே இன்சுவையால் எங்கும் இனிக்குதே ...
ஐயோ என் சாக்லேட் !!!