Author Topic: என்ன செய்தாய் என்னை..!!  (Read 365 times)

!! AnbaY !!

  • Guest
நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்;

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!