ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 340
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/340.jpg)
❤️அழகியே!!!❤️
நூறு கோடி ஆண்கள் இருந்தும் அவர்கள் மத்தியில் உன் மனதில் இருப்பது" நான்" மட்டுமே என்பதை நினைக்கையில் என் இதயம் என்னிடம் இல்லை என்பதை நீ அறிவாயா??
❤️என் காதல் கண்மணியே!!❤️
என்னிடம் பணம், காசு குறைவாக இருந்தாலும் என் அன்பு அனைத்திற்கும் அரசி நீ மட்டுமே என்பதில் சந்தேகம் இல்லை...
என் மனநிலை என்னவென்று அறிந்து அதன்படி செயல் படும் நீ, எதற்காக உன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து சகித்துக் சென்றாய்...இதுவே நீ எனக்கு அளிக்கும் முதல் பரிசாக நான் கருதுகிறேன்...சமயங்களில் உன்னிடம் சண்டையிட்டு உன்னை காயப்படுத்தியது என் தவறே...காதல் ஒன்றை தவிர, உனக்கு பரிசளிக்க என்னிடம் ஏதும் இல்லை கண்மணியே...
❤️கணவனே!!!❤️
அழுகை, கோவம், சண்டை இதில் ஏதுவாக இருந்தாலும் அது உன்னை காயப்படுத்தி விடும் என்று நான் மறைத்து வைத்திருந்த உணர்ச்சிகள்...அதிக அன்பை வெளிப்படுத்தி மயக்கும் அன்பே...உன்னிடம் பரிசு எதிர்பார்ப்பது செரியா???
அதிக பாசத்தை விட அதிக புரிதலை உன்னிடம் நேசிக்கிறேன் நான்..உன்னால் என் மனம் வேதனை பட்டாலும் உன்னை பார்கும் நொடி என் மனம் உன்னை கட்டி அணைக்க எண்ணுகிறது ஏனோ?
❤️கண்ணாளனே❤️
விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாம்,பரிசு வேண்டாம் உன் கை பிடித்து நீ அழைக்கும் இடமெல்லாம் வருவேன் உன்னை நம்பி...உன்னோடு இருப்பதே கடவுள் அளித்த பரிசாக எண்ணுகிறேன்...கண்ணில் இருந்து கையை எடுங்கள்...குழந்தை எழுந்து விட்டாள் ❤️