நீலவானில் சுற்றி திரியும் மாய மேகமே , உன்னில் தான் எத்தனை கனவுகள்.
ஒவ்வொரு நாளும், மேக கூட்டத்தினால் உருவம் கொள்ளும் உன் கனவுகள்.
இன்று உன் கனவானது வெளிப்படுத்திய உருவமோ இணைந்த இதயங்கள்.
மணாளன் தன் மங்கை அவள் கை பிடிப்பது போலானதும், மங்கை தன் மணாளனின் தோல் சாய்ந்து போலான உன் பிம்பம்...
பூங்காற்றும் புன்னகைத்து உன் காதல் நயம் கண்டு.
செங்கதிரும் நாணத்தில் தலை சாய்த்தது உன் காதலின் கவர்ச்சி கண்டு.
கதிரவனும் பொறாமை கொண்டது உன் காதலின் மேன்மை கண்டு.
இன்று உன் கனவின் கலைநயம் கண்டு வியந்து போனேன்.
உன்னில் உன் காதலின் உருவம் கண்ட நொடி முதலே, என்னுள் என் அவளின் மேல் கொண்ட காதலின் மகிழ்ச்சி தனை உணர்ந்தேன்.
என்னுள் நான் கொண்ட காதலுக்கு என் தேவதையே உரித்தானானவள் என்பதுபோல,
உன்னில் உன் காதல் யார் என்று தான் புரியவில்லை.
உழவனின் கவலை நீக்க மழையாய் பொழியும் கார் முகிலும் நீயே,
உணர்வுகளை உருவக படுத்தும் மாய மேகமும் நீயே.
எதுவான போதிலும், காதல் எனும் உணர்வு மனிதர்களுக்கு மட்டும் அல்ல,
உலகில் படைக்க பட்ட ஒவ்வொன்றும், காதல் எனும் நேசம் கொள்ளும் என்பது உந்தன் கனவின் வழியே இவ்வுலகம் உணரட்டும்...
மாய மேகமே உன் கனவுகள் தொடரட்டும், பூமிக்கும், வானிற்குமான தொடர்பு என்பது, பெற்றெடுத்த தாயிற்கும், பெற்றெடுக்க பட்ட சேயிற்கும் உண்டானது என்பதை, உன் கனவுகள் வெளிப்படுத்தட்டும்.......
இப்படிக்கு கனவுகளை சுமந்த இதயத்துடன் மாய மேகம் ❤️❤️❤️.. - MNA.....
...