Author Topic: நினைவுகள்  (Read 207 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நினைவுகள்
« on: December 13, 2023, 08:47:04 PM »
வாழ்க்கை
ஒரு படகு போல்
செல்கிறது
ஒரு கரையிலிருந்து
மற்றொன்றுக்கு
முடியின்
கருமையிலிருந்து
வெள்ளை வரையிலான தூரம்,
உடன்
அதே நினைவுகளும்

இதுவரை எழுதிய
எழுத்துக்களெல்லாம்
காதல் அல்ல
ஒருவித பைத்தியம்

எப்படி
காதலிக்க வேண்டும்
என்ற  உணர்வின்
பிரதிபலிப்பு

சிலரது உணர்வுகள்
அப்படியே இருக்க வேண்டும்
அதுவே அவர்கள்
நம்முடனான உறவின்
மையம்

புறக்கணிப்பின் உச்சத்தில்
இழந்தது மீண்டும்
கிடைக்க வாய்ப்பில்லை
என்ற உணர்வில்,
இழந்தவற்றின்
மதிப்பு உணரப்படும்

நினைவுகள்
ஒரு வகையான
ஸ்லோபாயிசன்.
மெதுவாக
மெதுவாக
நம்மை
மரணத்திற்கு இட்டுச்
செல்கிறது
சுவையுள்ள
விஷம் போல

ஒன்று மட்டும் உண்மை
அது
நீயும் நானும்
என்றும்
பிரிக்க முடியாத
நினைவுகள்

***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 525
  • Total likes: 809
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
Re: நினைவுகள்
« Reply #1 on: December 13, 2023, 10:21:30 PM »
நினைவுகள்
ஒரு வகையான
ஸ்லோபாயிசன்.
மெதுவாக
மெதுவாக
நம்மை
மரணத்திற்கு இட்டுச்
செல்கிறது
சுவையுள்ள
விஷம் போல


Aspartame - Sweet poison enru kelvi paddhu irukken. 
Slowpoison um irukku enru thenrichukithen.
Sila ninaivugal kandippa slow poisonaga than irukkum nam vazhvil.
Suvaiulla visham enru therinyuthum anthe ninaivugalil thane vazha virumbigirom sometimes?!

Adutha pathivukku waiting! :)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நினைவுகள்
« Reply #2 on: December 14, 2023, 09:28:31 PM »
தூரத்தில் இருந்து
பார்த்தால்
காடு தெரியும்
அருகில் சென்றால்
ஒவ்வொரு மரமும்
தனி தனி தான்

வாழ்க்கையிலும்
அப்படிதான்
பார்ப்பவர்களுக்கு
எல்லோரும் இருப்பதாய்
தோன்றும்
அருகில் சென்றால்
அனைவரும்
தனி தனி தான்

மண்ணில்
பூக்கும்
பூக்களை விட
இந்த மனதில்
பூக்கும்
நட்பு
சிறந்தது

இன்றும் நான்
"நீ" என்ற பொய்யை
தெளிவாக நினைவில்
வைத்திருக்கிறேன்

ஏனென்றால்
நீ என்னுடன்
இருந்த காலம்
எனக்கு மிகவும் பிடித்தமானது.

நீ எனக்கு கொடுத்த
ஒவ்வொரு அழகான தருணமும்
உண்மை

என்னிடமிருந்து
உனக்குக் கிடைத்தது
நிபந்தனையற்ற
அன்பு.

நீ ஏன்
போலியாக வந்து
என் மனதை கொள்ளையடித்தாய்
என்பதற்கான பதிலை
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஆசைகளுக்கு
முடிவே இல்லை
அது நம்மை
முட்டாள்தனத்திற்கு
இட்டுச் செல்கிறது

ஏமாற்றம்
என்ற சொல்லுக்கு
என் மனது
சாட்சி

ஓர் நாள்
என் இதயம் வெடித்து
உன் மீதான அன்பின் வேர்கள்
இதயத்திலிருந்து
நரம்புகள் வரை பரவி
என் மூளையைச் சூழ்ந்திருந்தால்,
மற்றவர்கள்
மரணம் என்றழைக்கலாம்
சிலர்
பைத்தியம் என்றும்

**Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "