பிறப்பதற்குள் உயிர்
பிரிந்து போனது
பெண் சிசுக்கள்
-
===================================
-
வானவில் வீழ்ந்ததற்காக
வானம் அழுகிறது
மழை
-
===================================
-
இருட்டை விரட்டி
வீழ்ந்து போனது
மெழுகுவர்த்தி
-
===================================
-
மழையில்
மவுன ஊர்வலம்
குடை
-
==============================
-
செல்லாத காசுகளை
சேகரிக்கும் உண்டியலாய்…
சுடுகாடு
===================================
படிக்காமலே
பட்டம் வாங்கியது
பட்டாம் பூச்சி
-
==================================
-
அவளுக்கென்ன வெட்கம்
இரவில் மட்டும் முகம் காட்டுகிறாள்…
நிலா
-
================================
-
இரவில் இலையைக் காதலித்து
விடியலில் சூரியனை மணக்கிறதோ…
பனித்துளி
-
================================
அலையாத கடலில்
கலையாத நுரைகளாய்…
வெண்மேகம்
-
===================================
-
களவாடிகளை விரட்ட
கையில் தடியுடன்
காந்தி