மறந்து போவாயோ ?
அடப்பாவமே !
விருந்து வைப்பதாய் நினைத்தோ
இப்படி ஒரு கேள்வி கேட்டாய் ?
விருந்து இல்லையடி எரிச்சல் கூட்டும் மருந்து
நினைவில், துக்கம் சேர்ந்து தூக்கம் துறந்து ,
தனிமையை சேர்ந்து இனிமையை துறந்து
.கவிதையை சேர்ந்து என் கண்ணீர் துறந்து
இப்படி பல சேர்ந்து சில சில துறந்திருக்கிறேன்
எத்துனை துறந்தாலும் நினைக்க மறந்ததில்லை
மனதால் கூட மறக்க நினைத்ததில்லை
பொறு பொறு, மறக்காமல் இருப்பேன்
என மார்தட்டி சொல்லவில்லை
மறப்பேன், நிச்சயம் உன்னை மறப்பேன்
ஒரு நாள் நிச்சயம் நான் இறப்பேன்
(உனக்காக), அப்புறம் வேண்டுமானால் மறப்பேன் .
இறந்த பிறகு லேசாய் வருந்துவாய் .
கொஞ்சம் மருங்குவாய், அறுசுவை விருந்தே !
மறந்தும் நான் இறந்த பின்பு என்னை விரும்பிவிடாதே
உனக்காக, மீண்டும் ஒரு ஜென்மம் பிறந்தாலும் பிறப்பேன்.