Author Topic: சாட்டையடி!  (Read 568 times)

Offline Yousuf

சாட்டையடி!
« on: December 18, 2011, 10:55:57 PM »
படித்ததில் பிடித்தது!



வீட்டைவிட்டு கிளம்பும்போது
விருட்டென சென்றது
வாசல்வழி வந்தபூனை

வாசலிலேயே நின்று
வடக்கு பார்த்தும்
வாஸ்து பார்த்தும் -மனதில்
விசமத்தோடு சென்றான்

வீதியிலொருப் பூனை-தன்
வயிற்றுப் பசிபோக்க
எதிர்திசையில் கிடந்த -தன்
இரணத்தை எடுக்க ஓடியது

கூறுகெட்ட மனிதன்-அதன்
குறுக்கே போக
சர்ரென போனவண்டி-அதன்மீது
சட்டென ஏறியதும்

இறந்தது பூனை
இடிவிழுந்ததுபோல் நின்றான்
எல்லாம் கற்றறிந்த
இன்றைய மனிதன்

மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-அவன்
மனதில் விழுந்தது சாட்டையடி
மனசாட்சியின் ஓசையால்......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

Offline RemO

Re: சாட்டையடி!
« Reply #1 on: December 19, 2011, 01:19:11 AM »
unmai than mams
manithanaal than pala poonaikaluku sagunam sari ilamal pokuthu

Offline Yousuf

Re: சாட்டையடி!
« Reply #2 on: December 19, 2011, 09:07:41 AM »
இதை மூட நம்பிக்கை கொண்ட மனிதர்கள் உணர்ந்தால் னராக இருக்கும் மாம்ஸ்!

நன்றி மாம்ஸ்!

சிந்திக்க கூடிய கவிதையை தந்த அன்பு சகோதரி மலிக்கா அவர்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்!