Author Topic: ஏப்ரல்-அக்டோபர் வரை ரூ.300 கோடி கறுப்பு பணம் பறிமுதல்; பிரணாப் முகர்ஜி தகவல்  (Read 2694 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஏப்ரல்-அக்டோபர் வரை ரூ.300 கோடி கறுப்பு பணம் பறிமுதல்; பிரணாப் முகர்ஜி தகவல்



டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியதாவது:-
 நடப்பு நிதியாண்டில் (2011-12) கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம், நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும். மாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிக்கவில்லை