மரமான நானே! மக்களின் அறமாவேன்.!!
என்னுயிர் வாழும் வரை மண்ணுயிர் காப்பேன்.
மானுடம் காக்க, என் ஜீவகம் தொடரும்.
என்னில் உரமான உணர்வுகளை,
உறவாக உருவகித்தேன்.
இறைவனின் அருட்கொடையை கொண்டு,
மழை எனும் மாணிக்கத்திற்கு,
பூமி தாயின் மடிதனில் மக்களாய் பிறந்தேன்.
என் பூமி தாயிற்கு வளம் சேர்க்கவும்,
என் பூமி தாய் பெறாமல் சுமக்கும்,
எம் மக்களின் நலனுக்காகவும் நான் வாங்கி வந்த வரமே.
இம்மரம் எனும் நான்..
இப்பூவுலகில், சுயநலம் கருதி என்னை வெட்டுவோர் பலர்.
இருப்பினும், பொதுநலன் கருதி என்னை வளர்த்தவரும் உண்டு,
இன்னும் வளர்பவரும் உண்டு..
அவர் நலம் ஏதுவான போதிலும்,
என் நலம் எம் மக்களின் நலனுக்காக மட்டுமே.
இப்படிக்கு மானுடம் காக்க வந்த மாணிக்கம் (மரம்)..
என்றும் எம்மக்களை நினைக்க மறவா உறவாளன்
💞💞AARON AHAMED💞💞