2
« Last post by விழியாள் on Today at 08:05:22 AM »
ஜாமீன் இருக்கா?
அம்மாடியோ,என்ன இந்த பக்கம்
இங்கு வர நீ கொடுக்கும் விலை
உன்னைத்தான் என்பதை மறந்து போய் வந்தாயோ?
சொந்த காலில் நிற்கிறோம் என்ற நினைப்பா?
அவனுக்கு நீ இணை என்பதை நிரூபிக்கும் பொறுப்பா?
அல்ல ஒருமுறை செய்து பார்த்தால் என்ன எனும் எண்ணத்தினால் வந்த நெருப்பா?
இத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட உன்னிடம் ஜாமீன் தான் இருக்கா?
சொல்வதை கேள்,
இது கம்பி கட்டும் கதை அல்ல
கம்பிக்குள் கைதியாய் என்னை கட்டி வைத்த கதை .
என்னை விடுதலை செய்ய உன்னிடம் ஜாமீன் தான் இருக்கா?
நான் குடும்பப் பெண் இல்லையடி
தகாத உறவின் மோகத்தால்
நான் சுமந்த பிஞ்சையும் அவன் தந்தையையும் கொன்று விட்டு போகாததால்'
நான் குடும்பப் பெண் இல்லையடி
என் மகனின் மனைவியை கூட வரதட்சனை கேட்டு வர்புறுத்தாததால்'
நான் குடும்பப் பெண் இல்லையடி
அண்டை வீட்டாரின் நடவடிக்கைகளில் சதா என் பார்வையை செலுத்தாமல் இருப்பதால்
என்னடியம்மா ஆராய்ச்சி நான் எப்படி இங்கே என்றா
யாருக்கு இல்லை வாழ்கையின் பரிதாபம்
அர்த்தமற்ற கதை சொல்லி வேண்டவில்லை உன் அனுதாபம்
இம்மாயவளின் (மது)மடியில் வீழ்ந்த நாளே என் கற்பை இழந்துவிட்டேன் அவர்களின் வசை சொற்களில்
கலாச்சார சீர்கேடும் என்னால்தான்
ஆங்காங்கே அரங்கேறும் அத்துமீறல்களும் என்னால்தான்
இந்த பழிகளிலிருந்து
விடுவிக்க உன்னிடம் ஜாமீன் தான் இருக்கா?
அதோ பார் அந்த ஆண்மகனை
இந்த pubன் வாடிக்கை நாயகனை.
அடுத்த வாரத்தின் ஆசை மணமகனை
எப்படியா?
கால்கட்டு போட்டால்
திருத்தி வாழ பழகுவானேன்
பாவத்தையெல்லாம் பங்கு போட நல்ல வழிதான்
பேசிக்கொண்டே இருக்கையில் உன் முன் வைத்த கோப்பை வெற்றிடம் கண்டதடி
மதுவின் மகளாய் மாறிய பின்
மணமகளாய் மாறும் பேராசையை கொன்று விட்டு வா!
நமக்கும் கால் கட்டா? அசடே
அதற்கு அவன் எனும் அடையாளம் வேண்டுமடி'
பாவம் கூட இங்கே பாலினம் பார்க்குமடி
கொலை செய்தவனுக்குக் கூட விடுதலை கிட்டுமடி
பெண் நீ செய்த பிழையை
வாழ்நாள் முழுக்க சொல்லி மட்டம் தட்டுமடி
கொலையாலியும் கைவீசி செல்லுவான் இங்கே அவனாய் இருந்தால்
கைவீசி நடந்தால் கூட பரிகசிப்பர் இங்கே
அவளாய் இருந்தால்
இதற்கெல்லாம் ஜாமீன் உன்னிடம் இருக்கா?