Author Topic: இறைவனில் நீ இளைபாறுவாயாக  (Read 550 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
சரியாக ஒருவருடம் கூட
ஆகவில்லை உன்னை
சந்தித்து

ஒருநாள் என் முக புத்தகத்தில்
ஒரு நட்பின் வேண்டுகோள்
அதில் உன் முகம் பார்த்தேன்

கொழு கொழு கன்னமும்
கபாடற்ற உன் சிரிப்பு
கள்ளம் அறியா உன் கண்கள்

தெரியாத ஆள் தான்
எதோ அந்த சிரிப்பு
அனுமதித்தேன் உன்னையும்
என் நண்பனாய் முகப்புத்தகத்தில்

அனுமதித்த அடுத்த நிமிடம்
ஒரு குறும் தகவல் உன்னிடம் இருந்து
நன்றி நண்பி என்று
இன்னும் அப்படியே இருக்கு நண்பா

அன்று அறிமுகம் ஆனா நீ
என் இன்பம் துன்பம்
அனைத்திலும் இதை என்
ஆருயிர் நண்பனாய்

உன் விவசாய கற்கை நெறியை
எங்கும் கற்று கொடுத்தாய்
யார் மறந்தாலும் என் வீடு தோட்டம்
 உன் பேர் சொல்லு நண்பா

இப்படி அழகாய் சென்றது
நம் நட்பின் நாட்கள்
உயிர்த்த ஞாயிறு நாளிரவு
உனக்கு வாழ்த்து அனுப்ப
உன்னிடம் இருந்தும் பதில் வந்தது

காலையில் செய்தியில்
குண்டு வெடிப்பு என்று பார்த்தேன்
அப்போது கூட உன் நினைவு
எனக்கு வரவில்லை

மட்டக்களப்பில் என்றதும்
என் கண்கள் கலக்கிற்று
உன்னை தொடர்பு கொள்ள
 முயற்றும் பயனில்லை

இறுதியில் அறிந்தேன்
நீ வைத்தியசாலையில் இருப்பதாய்
நேற்று வரை உனக்காக
இறைவேண்டல் செய்யாமல்
இருந்ததில்லை

என் இறைவன் கூட என்
பிராத்தனையை கேட்டாக வில்லை போலும்
நேற்று உன் மரண அறிவித்தல்
பார்த்தேன் செய்தியில்

கண்ணை மூடினாள்
உன் சிரிப்பு தான்
என் மனக்கண்ணில்
குறுக்குத்தனமான உன்
முகம் மறக்க முடியாது நண்பா

பாவப்பட்ட உலகில் இருந்து
இறைவனிடம் சென்றுவிட்டாய்
அது தான் உண்மை
இறைவனில் நீ இளைபாறுவாயாக

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
valiyin velichamana kavidai,sirappu.vazhthukkal....