Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )
»
~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~
« previous
next »
Print
Pages:
1
[
2
]
3
Go Down
Author
Topic: ~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~ (Read 13166 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 15.உருவொன்றி நிற்றல்
«
Reply #15 on:
February 26, 2013, 11:23:18 AM »
ஞானக்குறள் - 15.உருவொன்றி நிற்றல்
எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி. 141
பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து. 142
கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு. 143
பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை. 144
தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது. 145
வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு. 146
அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை. 147
மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு. 148
நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்குந் தானா மவன். 149
ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.
150
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 16. முத்தி காண்டல்
«
Reply #16 on:
February 26, 2013, 11:25:27 AM »
ஞானக்குறள் - 16. முத்தி காண்டல்
மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது. 151
வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில். 152
உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். 153
தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. 154
பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு. 155
அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம். 156
துணிமுகத் துக்காதி யாத்துன் னறிவின்றி
அணிதா ரிரண்டு விரல். 157
மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண் டங்காதி நிலை. 158
தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு. 159
உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு. 160
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~
«
Reply #17 on:
February 26, 2013, 11:27:35 AM »
ஞானக்குறள் - 17. உருபாதீதம்
கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு. 161
பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு. 162
உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு. 163
கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு. 164
அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு. 165
நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. 166
குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு. 167
பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு. 168
பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு. 169
ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு. 170
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 18. பிறப்பறுதல்
«
Reply #18 on:
February 26, 2013, 11:29:25 AM »
ஞானக்குறள் - 18. பிறப்பறுதல்
தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு. 171
அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து. 172
சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து. 173
உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம். 174
நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது. 175
உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம். 176
தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு. 177
மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். 178
விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு. 179
சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு. 180
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 19.தூயவொளி காண்டல்
«
Reply #19 on:
February 26, 2013, 11:32:23 AM »
ஞானக்குறள் - 19.தூயவொளி காண்டல்
தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக் காற்றூய வொளி. 181
தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம். 182
மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும். 183
பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி. 184
சங்கு நிறம்போற் றவளவொளி காணில்
அங்கையி னெல்லியே யாகும். 185
துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து. 186
மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே யாம். 187
உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி. 188
பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி. 189
ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம். 190
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 20. சதாசிவம்
«
Reply #20 on:
February 26, 2013, 11:34:06 AM »
ஞானக்குறள் - 20. சதாசிவம்
பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191
விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 192
ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம். 193
வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம். 194
எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 195
ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம். 196
மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்குஞ் சிவம். 197
மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம். 198
தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன். 199
நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம். 200
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 21. குருவழி
«
Reply #21 on:
February 26, 2013, 11:36:05 AM »
ஞானக்குறள் - 21. குருவழி
தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன். 201
சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம். 202
குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம். 203
தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம். 204
நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம். 205
நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம். 206
நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம். 207
ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம். 208
நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம். 209
பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம். 210
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 22. அங்கியில் பஞ்சு
«
Reply #22 on:
February 26, 2013, 11:37:58 AM »
ஞானக்குறள் - 22. அங்கியில் பஞ்சு
அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில்
சங்கிக்க வேண்டாஞ் சிவம். 211
மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம். 212
நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம். 213
பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். 214
தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான். 215
அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு. 216
இமையாத நாட்டத் திருந்துணர் வாருக்
கமையாத வானந்த மாம். 217
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு. 218
மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும். 219
சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து. 220
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~
«
Reply #23 on:
February 26, 2013, 11:39:46 AM »
ஞானக்குறள் - 23. மெய்யகம்
2மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி. 221
2கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு. 222
2உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங்
கண்டுகொள் காதல் மிகும். 223
2உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன். 224
2தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு. 225
2வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம். 226
2கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி. 227
2 ஆநந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு. 228
2மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம். 229
விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி. 230
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 24. கண்ணாடி
«
Reply #24 on:
February 26, 2013, 11:41:41 AM »
ஞானக்குறள் - 24. கண்ணாடி
3கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி. 231
3அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு. 232
3நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு. 233
3கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு. 234
3சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு. 235
3ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன். 236
3வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு. 237
3 நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு. 238
3மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு. 239
சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு. 240
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 25. சூனிய காலமறிதல்
«
Reply #25 on:
February 26, 2013, 11:44:00 AM »
ஞானக்குறள் - 25. சூனிய காலமறிதல்
நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணை யானாகு முடம்பு. 241
உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார். 242
புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு. 243
அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டும் உடம்பு. 244
ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு. 245
அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு. 246
தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை யுடம்பு. 247
தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு. 248
ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு. 249
பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு. 250
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 26. சிவயோக நிலை
«
Reply #26 on:
February 26, 2013, 11:45:56 AM »
ஞானக்குறள் - 26. சிவயோக நிலை
அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல். 251
உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி
விண்ணோடு மெள்ள விடு. 252
மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து. 253
இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம் பத்தாறு புகும். 254
கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான். 255
முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. 256
ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல். 257
வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்றன் வாசலி லேற்று. 258
தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய். 259
ஆதியா மூலமறிந் தஞ்செழுத் தினைப்
பேதியா தோது பிணை. 260
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 27. ஞான நிலை
«
Reply #27 on:
February 26, 2013, 11:48:22 AM »
ஞானக்குறள் - 27. ஞான நிலை
தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை. 261
தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில். 262
ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை. 263
கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது. 264
மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. 265
காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான். 266
பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம். 267
நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள. 268
பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம். 269
அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார். 270
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 28. ஞானம் பிரியாமை
«
Reply #28 on:
February 26, 2013, 11:50:36 AM »
ஞானக்குறள் - 28. ஞானம் பிரியாமை
பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம். 271
சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. 272
வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும். 273
மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை. 274
குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு. 275
சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம். 276
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார். 277
ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை. 278
அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர். 279
இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார். 280
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218413
Total likes: 23073
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ஞானக்குறள் - 29. மெய்நெறி
«
Reply #29 on:
February 26, 2013, 11:52:26 AM »
ஞானக்குறள் - 29. மெய்நெறி
செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில். 281
பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர். 282
இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு. 283
குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன். 284
காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு. 285
மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம். 286
எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர். 287
அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார். 288
அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக யுணர். 289
அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி. 290
Logged
Print
Pages:
1
[
2
]
3
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )
»
~ அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள் ~